கீச்சுகள் தொகுப்பு - 70


மழையால் எப்படி இந்த இருளைக் கரைக்க முடியும்!

*

நிதானம்... பல நேரங்களில் மெதுவாக செயல்படுகிறோமே எனும் சந்தேகத்தை அளிக்கும். ஆனால் நிதானம் நின்று 'நிதானமாய்வென்று விடுகிறது.

*

நீங்கள் அறிமுகப்படுத்தும் எதுவுமே 'நீங்கள் அறிந்தவரையில்' மட்டுமேயானது.

*

யாருக்கெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத பெரும் சவால்களை வாழ்க்கை வழங்குகிறதோ, அவர்களிடம் ஒரு கூடுதல் திறமையையும் அதே வாழ்க்கை வழங்கிவிடுகின்றது.

*

ரகசிய அன்புதான் தித்திக்கும் என்றில்லை. தித்திக்கும் அன்பை ரகசியமாகப் பகிர காலம் பணித்திருக்கலாம். ;)

*

நிலம் குளிர்ந்தென்ன விதைகளைத் தகிக்காமல் இருக்கச் சொல்லுங்கள்!

*

பெய்ய மறுக்கும் மழை இலையின் பச்சையைத் தின்று கொழுக்கிறது!

*

நினைவில் உழலும் உறையா முத்த ஈரம் அமுதா, நஞ்சா....!

*

வதந்திமற்றும் 'வாந்திஆகிய இரண்டு சொற்களும் பங்காளிகளாகத்தான் இருக்க வேண்டும்

*

கல்யாண வீடுனா மாப்பிள்ளையா, எழவு வீடுனா பொணமாஇருக்கனும்ங்கிறது வெறும் ஆசை மட்டுமில்ல பாஸு, குணப்படுத்த விரும்பாத ஒரு பெரும் வியாதி!


*

ஒருவரோடு ஒருவர் அன்பு பாவித்தலில் இன்னொருவருக்கு வெறுப்பு கூடும் மன வேதியியல், எப்போதுமே புரிந்துகொள்ள முடியாத ஒரு மர்மம்தான்.

*

உற்சாகம் என்பது வரம், நிலை என்பதுள்ளிட்ட எதுவுமல்ல. தான் உற்சாகமாய் இருக்கவேண்டுமென நொடிப்பொழுதில் மனதிற்குள் எடுக்கும் தீர்மானமே!

*

தப்பித்துக்கொள்ளும் முன் தெரிந்து கொள்ளவில்லைஎன்பதை ஒப்புக்கொள்கிறேன்

*

உரையாடல்களில், விவாதங்களில், நல விசாரிப்புகளில் நாம் ஒன்றை மட்டும் மிகக் கவனமாய்த் தவிர்க்கிறோம். . . . . . . . அதன் பெயர் "உண்மை".

*

ஆழ் உறக்கத்திற்குள் ஆட்படும் அடர் இரவில் கையில் அகப்படும் இந்த வெளிச்சப் பரிசை என் செய்வேன்!

*

எதிர்பார்த்திட முடியாத ஒரு கதை எல்லோரிடம் இருக்கின்றது. அந்த எல்லோரிடமும் சொல்ல விரும்புவது, "முதலில் உன்னை பாதுகாத்துக்கொள்!"

*

எது கோழைத்தனம்....! அதிகாரத்தை வைத்து மிரட்டுவதா? மிரட்டலுக்கு பயந்து அடங்கிப்போவதா?

*

வெற்றிகளுக்கு காரணமாய் அமைந்த பெரும்பான்மையான முடிவுகளின் பின்னால் ஒரு ஆரோக்கியமான கோபம் இருந்திருக்கும்.

*

முத்த வாசனையென்பது உயிர்க் காற்றின் மணம்.

*

சன்னல்களைத் திறந்து ஒரு கையில் கடலையும் மறுகையில் மேகத்தையும் தொட கனவில் அனுமதியுண்டு.

*

வெறும் பாறை மேல் பெய்யும் பெருமழை எதையும் இடம் பெயர்த்தி விடுவதில்லை. ஆனால் மண் எப்போதும் தன்னை இடம் பெயர்த்திக்கொள்ள அனுமதிக்கிறது.

*

உயர்ந்திருத்தல் என்பது மற்றவர்களிலிருந்து விலகி நிற்றல் அல்ல, மற்றவர்களின் மத்தியில் உறுதுணையாய் நம்பிக்கையாய் நிற்றலே!

*

என் கனவில் புத்தன் வந்து சொல்லும் வரை பேராசையோடு காத்திருப்பது குறித்து கவலையேதுமில்லை.

*

உங்களை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். உங்களிடம் திறமை இருக்கிறதென இன்னொருவர் நம்பிவிட்டால் அதற்காகவேணும் உங்களை நம்ப ஆரம்பித்து விடுங்கள்!

*

கடவுள் இருக்கிறார்!என்பதை நீங்கள் உணர்ந்த தருணங்களைவிட, “அய்யோ.. கடவுளே நீ இருக்கியா!?” எனத் தேடிய தருணங்களே அதிகம்!

*

மூலத்தை அறியாத வரைக்கும் அப்போது அறிந்துகொள்வதே மேம்பட்டதாய் இருக்கிறது.

*

நினைவு எனும் காட்டாறு!

*

"மரணம்" எனும் பரிசுத்தமான உண்மையை எத்தனை பேருக்கு உண்மையில் பிடிக்கிறது இங்கு!

*

எல்லோருக்கும் உண்மை வேண்டுமாம்! உண்மையைச் சொல்வதும், கேட்பதும் உண்மையில் அத்தனை எளிதா!?

*

பகையின் வேரில் வெம்மை பாய்ச்ச ஒரு பெரு மழை போதும்.

*

மழையெல்லாம் வேண்டுதல் வச்சு விளம்பரம் தேடுறதுல வர்றதில்ல... அதுவா மனமிரங்கி பெருங்கருணையோட வந்திறங்கணும்...

*

கூடல் கைகூடிடா முதிர் மோகப்பொழுதொன்றில் முத்தங்கள் தின்று பசியாறுவது போலே அந்த அருவியில் எத்தனை முறைதான் நனைந்து வெம்புவதோ!?

*

ஈர விடியலில் மனம் முளைக்கும்!

*

சில புறக்கணிப்புகள் நமக்கும் தேவை, உண்மையில் அவர்களுக்கும் அவசியமான தேவை!

*

கற்றுக்கொள்தல் மிக எளிது, அறிவின் அத்தனை கண்களும் திறந்திருப்பது போதும்.

*

கற்றுக்கொள்வதை ஒதுக்க ஆரம்பிக்கிற தருணத்திலிருந்து வாழ்க்கை மெல்ல புளிப்பேறத் துவங்குகிறது.

*
மகிழ்ச்சியும் ஒரு மொழியே! :)

*


No comments: