Mar 4, 2014

எக்மோர் ரயில்



எக்மோர் ரயில்
ஊத்துக்குளியில்
நிற்கிறது
இறங்கிய
மனதை
இழுத்து
அமர வைத்தாகிவிட்டது
ஈரோடு வரப்போகிறது
இறங்கியாக வேண்டும்
கொடுமுடி
கரூர்
திருச்சி
தாம்பரமென
எக்மோர் வரை
ரயில் வாசத்தோடு
செல்ல விழைகிறது
மனம்

ஈரோட்டில்
மனதுதிர்த்த
உடலொன்று
உடன் பயணிக்கும்
சாத்தியங்களுமுண்டு!

-

3 comments:

Unknown said...

பயணம் .. அலாதி அனுபவம் ..!

திண்டுக்கல் தனபாலன் said...

அட...! சூப்பர்...!

Unknown said...

மண் பாசம் அவ்வளவு லேசிலே விடாது !

முதியதோர் உலகு

அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...