Nov 8, 2011

பெருநதிப் பயணம்





ஓடும் தடமெங்கும் வெப்பம்தின்று
பள்ளங்களில் பதுங்கி நிரம்பி
பாறைகளில் தாவிப்படிந்து
சரிந்து விழுந்து குதித்து வழிந்து

தன்னைத் தாய்மையாக்கி
தன்னையே ஈன்றெடுத்து
தன்னுள்ளே தன்னைச் சலித்து
தன்னைத் தூய்மையாக்கி

தன்னுள் புகுமனைத்தும் தாவியணைத்து
நிரம்பும் அம்மணங்களைக் கழுவி
நிலைதாவும் மனங்களைக் குளிர்வித்து

தன் கனத்தை தானே தாங்கி
தன் குணத்தை எங்கும் விதைத்து
தன் மணத்தை திசைகளில் தூவி

நனைக்கும் கால்களிலும் கைகளிலும்
உற்சாகத்தை ஒட்டிவிட்டு

தத்தித்தாவி தாளம் போட்டு
நடனமாடி நளினமாயோடுது பெருநதி
ஒரு துளியும் சோர்வின்றி


நன்றி: திண்ணை

~

9 comments:

vasu balaji said...

நதியோட்டம் கவிதையோட்டம்

பிரபாகர் said...

ம்.... நல்லாருக்கு கதிர்!...

பிரபாகர்...

Vijayashankar said...

Nice.

Who is this? http://erodekathir.blogspot.com/

சத்ரியன் said...

நைஸ் நதி.

settaikkaran said...

சலசலவென்று கரைபுரண்ட கவிதை!

ஓலை said...

Nice.

'பரிவை' சே.குமார் said...

கரை புரண்ட கவியோட்டம்...

ராமலக்ஷ்மி said...

நதியின் துள்ளல் வரிகளில்...

ஸ்ரீராம். said...

நதி சொல்லும் பாடம்.

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...