Nov 14, 2011

தழும்புகள்




 


பிறரின்
காதல் குறித்து
கதை கேட்கும் ஆர்வத்தில்
மீண்டெழுந்து வருகிறது
தொலைந்த காதலின்
எஞ்சிய வாசனை!



~0~

வாழ்ந்து தீர்ப்பதைவிட
வசதியாகவும் சுகமாகவும்
இருக்கின்றது...
நினைவுச் சிறகில்
அப்பிக்கிடக்கும் காதலை
இதமாய் கோதிப்பார்க்க!

 


~0~
-

5 comments:

KSGOA said...

\\நினைவுச் சிறகில் அப்பிக்கிடக்கும்
காதலை இதமாய் கோதிப்பார்க்க//
நல்லா இருக்குங்க.

Anonymous said...

பிறரிடம் கதை கேட்கும் ஆர்வமே நினைவுகளை இதமாய் மீட்டிப் பார்க்கத்தானோ

நாடோடி இலக்கியன் said...

எஞ்சிய வாசனையை ர‌சித்தேன்..

க.பாலாசி said...

எஞ்சிய வாசனைதான் இம்சை...

நல்ல கவிதை...

Unknown said...

செம.....மலரும் நினைவுகளால் அழகான கோர்க்கப்பட்ட கவிதைகள்...

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...