Feb 16, 2015

நுகரச் சகியாதது



சொட்டுச்சொட்டாய்
துகள்த்துகளாய்
சேகரித்து
வைத்திருக்கும்
இந்தக் கர்வ மூட்டையில்
எப்பொழுதேனும்
என் வாள் முனை மோதி
தெறித்துவரும்
சிறு கல் பட்டு
கிழிந்து சொட்டுகையில்
பெருகும் வீச்சம்
என்னாலும்
நுகரச் சகியாதது!

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...