Dec 29, 2014

ஆறாம் அறிவு



ஐந்து அறிவுகளை மட்டும்
வைத்துக்கொண்டு
மிஞ்சியிருக்கும்
வனமொன்றில்
தத்தித்தாவியோடி
பழங்கள் பூக்கள்
இலைகள் தானியங்களில்
பசியாறியவனுக்கு
ஆறாம் அறிவின்
துணைகொண்டு
மிஞ்சிப்போனதை
பெருங்கருணையோடு
பிச்சையிட்டு
பசியாறப் பழக்கிவிட்டீர்கள்

அவ்வப்போது
அரிசி மூட்டைச் சந்தில்
சுருட்டி வைக்கும்
நெகிழிப் பைகளை
என்ன செய்வதெனத்
தெரியாத நீங்களா
அவன் சுமந்தலையும்
அந்த நெகிழிச் சாபத்தை
என்ன செய்து தீர்ப்பதெனச்
சொல்லியிருக்கப் போகிறீர்கள்!

-

7 comments:

Rathnavel Natarajan said...

அருமை சார்.

Unknown said...

Superb. ..

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...

Unknown said...

எந்த பகுத்தறிவு பிராணிகளிடமிருந்து மனிதனை பிரித்துக்காட்டுகிறதோ,கனவுகளால்,நிராசைகளால்,அறிவால் வருத்தியும் வைக்கிறது..
நெகிழிச்சாபம் தான் புரியல..

Unknown said...

கல்வெட்டில் பெயர் பொறித்திருப்பது கூட ஆறாம் அறிவின் வேலையா இருக்குமோ?

Vijayashankar said...

Nice!

//நெகிழிச் சாபத்தை // Context?

'பரிவை' சே.குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...

முதியதோர் உலகு

அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...