Oct 13, 2012

கீச்சுகள் - 27


யார்யாரோ ஊட்டும் அவநம்பிக்கைகளை விட, யாரோ ஊட்டும் நம்பிக்கையில்தான் நகர்கின்றன நாட்கள்!

-



மரணம் பொதுவானது

-

உலகத்திலேயே வெளியான முக்கால் மணி நேரத்துலவெற்றி நடைபோடுவது தமிழ் சினிமா ஒன்றாகத்தான் இருக்கமுடியும்
#இந்த வெற்றிநடை ரவுசு தாங்க முடியல

-

அதுவேற’! இதுவேற’! #உலகத்தின் மிகஅரியதத்துவம்!

-



நிரம்பியிருக்கும் பணப்பைகளை விட, காலியாக இருக்கும் பணப்பைகளே 'சுமையானது

-

வாராத மழை வருமா!?. குளிக்காத என் பைக் இன்றாவது குளிக்குமா!?
#ய்ய்ய்யேக்கம்!

-

ஒருவரையே Blog Follow பண்ணி, Google+ Add பண்ணி, Twitter Follow பண்ணி கடைசியா Facebook Friend ஆக்கும்போது புரிகிறது உலகம் உருண்டையேதானு!

-

தக்கிமுக்கி IRCTC வேலை செஞ்சா பேங்க்காரன் பணம் தரமாட்டேங்கிறான். பேங்க பணம் தர்றேனு சொன்னா IRCTC தொங்குது.
#பேங்ல வேற காசு இருக்கனுமாமே!

-

பெரும்ப*லான சமரசங்கள், அதில் கிடைக்கும் லாபத்தை கவனத்தில்கொண்டே அமைகின்றன.
# * குறில் அல்லது பா நெடில் :)

-

என்கிட்ட  நல்லா நோட் பண்ணுங்க...  என்கிட்ட.... ஒருத்தர் போன்ல பேசிட்டே, அங்கே "நான் important call இருக்கேன், disturb பண்ணாதீங்கனு யார்கிட்டையோ சொன்னப்பத்தான் புரிஞ்சுது, ஊர்ல அடிக்கடி பலபேரு சொல்ற important callக்கு உண்மையான அர்த்தம் என்னானு! :))))



-

கரண்ட் கட் ஆனா (பதிலும்கூட வராதுனு தெரியாம) EB ஆபிஸ்க்கு போன் போட்டு, “கரண்ட் எப்ப சார் வரும்னு கேட்கும் அப்புராணிகள் நிறைந்த உலகம் இது

-

அழுக்கும் ஒரு நிறம் தான்!

-

Good Morning. Have a "Good Day"னு சொல்றதுக்குப் பதிலா Good Morning. Have a "Milk Bikis" Day-னு மாத்தி சொல்றது தப்பா! தப்பா!! தப்பா!!!?

-

எதிர்பார்த்த அளவு எது நமக்கு கிடைக்கலையோ அதுபத்தியே தான் சிந்தனை, பேச்சு இருக்கும் #காதல் - முத்தம் - குடி - பணம் - பதவி - இன்ன பிற! :)


ஹேப்பி நியூ இயர், ஹேப்பி கவ் பொங்கல், ஹேப்பி டமில் நியூ இயர், அப்புறம்... ஹேப்பி விநாயகர் பர்த் டே-னு கூட சொன்னீங்க...  சரி பரவாயில்ல... இப்ப ஹேப்பிபந்த்டே சொல்றீங்களே...  # உலகத்துல நீங்கெல்லாம் அம்புட்டு ஹேப்பியாவாடா இருக்கீங்க!

-

ஆழ்ந்த உறக்கம் ஒரு வரம்.


-

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து மட்டும் SMS சொல்லுங்க, கொஞ்சம் கொழுக்கட்டை, சுண்டல் கொடுத்தா கொறஞ்சா போய்ருவீங்க! # வரும் ஆனா வராஆஆதுடா!

-

அள்ளிக் கொடுத்தாலும், கிள்ளிக் கொடுத்தாலும்அன்பு = அன்பு

-



இறுதியாகக் கணக்கிட்டுப் பார்த்தால், வாழ்க்கையில் இழந்ததும், ஈட்டியிருப்பதும்வெறும்மனிதர்கள் மட்டுமே!

-

திருவள்ளுவர் ஏன் 1330 குறள்களோடு மட்டும் நிறுத்திவிட்டார்? # எதிர்காலத்தில் மனப்பாடம் செய்ய வேண்டிய பிள்ளைகள் பாவம் எனக்கருதி இருக்குமோ?


-

ஒரு கை பிடி திராட்சையை ஒன்றாய் தின்றாலும், ஒவ்வொன்றாய் தின்றாலும் அளவு ஒன்றுதான், ஆனால் சுவை வேறுவேறு

-

இலவசமாக ஒருநாள் கிடைக்கும் மரணத்தை, ஏன் சிலர் அவசர அவசரமாக விலை கொடுத்து வாங்குகிறார்கள்!

-


கடலை மிட்டாய்க்குள் இத்தனை சுவையை, ஒளித்து வைத்த(இறை)வன் ரசனை மிகுந்தவனாகத்தான் இருப்பான்

-

ஒரு கையில் புகை வழியும் சிகரெட், மறுகையில் ஆவி பறக்கும் தேநீர். அழைக்கும் அலைபேசியை ஆட்கொள்ள மூன்றாம் கை இன்றி தவிக்கிறான் தேநீர்க்கடையில்!

-

மத்திய அரசு செய்யும் காரியங்கள் குறித்து உங்களுக்கு சரிவர புரியவில்லையெனினும் கவலைப்படாதீர்கள், அது சர்வ நிச்சயம், உங்களுக்கு எதிரானதேதான்!

-

3 comments:

VANGAPESALAM said...

திருவள்ளுவருக்கு 7ம் நம்பர் ராசியாக இருக்குமோ

சமுத்ரா said...

அருமை...நல்ல வலைத்தளம்...நன்றி

கிருத்திகாதரன் said...

Arumai.....sema...

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...