கீச்சுகள் - 16


சிந்தனையற்று இருப்பது குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

~

மனதால் பேச எளிதாகயிருக்கிறது விட்டு விடுதலையாதல் போலே. புத்தியால் பேச மலைப்பாகயிருக்கிறது, “என்னவெல்லாம் பேசித்தொலைப்பமோ” எனும் அயர்ச்சியோடு.

~

கோடியில் அடிச்சவன விட்டுட்டு 5000 ரூவா லஞ்சம் வாங்றவனையா கைது பண்றது”- பொதுபுத்தி
#5000 கொடுக்க முடியாமத்தானே அவன் புகார் கொடுக்கிறான்.

~

கல்வி என்ற பெயரில் பிள்ளைகள்மேல் ஏவி விடப்படும் வன்முறைகளைக் காணும்போது ஒன்று புரிகிறது - இந்த நாடு நாசமாகப் போகப்போகிறது :(

~

எதிர்பாராமல் சந்திக்கும் யாரோ ஒருவர்தான் நமக்குள் ஏராளமான கேள்விகளை நிரப்பிவிட்டுச் செல்கின்றனர் #வாழ்க்கை விசித்திரமானது!

~

எதிரிகளோடுயிடும் சண்டை கனப்பதில்லை, நண்பர்களுடனான சண்டைபோல்.

~
ஃப்ளெக்ஸ் பேனர்ல பளபளனு மின்னுறதலைங்க, ரெண்டு நாள் கழிச்சு அந்த பேனர் விழும் இடத்தைப் பார்த்தா, பேனரே வெக்காதீங்கனு கும்புடு போடுவாங்க!

~

வீட்டில் ஒட்டடை அடிக்க வேண்டிய தருணங்களில், உயரமான ஆண்களுக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்கிறது!

~

கொட்டாவி விடும் குழந்தை ஒரு கூடை உறக்கத்தை ஊட்டுகிறது எனக்குள்

~

எழுதத் துவங்கும் வரை வார்த்தைகள் பிடிபட மறுக்கின்றன. எழுதத் துவங்கிய பிறகு வார்த்தைகள் தீர மறுக்கின்றன # நீளமான கட்டுரை :(

~

நிச்சயமாக அரசியலுக்கு வந்தே தீருவேன். என்னை யாரும் தடுக்க முடியாது - வடிவேலு
#ஆமா, இவர வேற ஆயிரம் பேரு அணைபோட்டுத் தடுக்குறாங்களாக்கும்!

~

ஞாயிறு மாலை டாஸ்மாக் போகிறவர்கள், மதியம் நன்றாகத் தூங்கி, குளித்து, நல்லதாக உடையுடுத்தி, நெற்றியில் பட்டைதீட்டி கொஞ்சம் பழமாக போகிறார்கள்.

~
இந்த விஜய் டிவிக்காரங்க வெச்சிருக்கிற நாலஞ்சு சினிமா பட டிவிடியை புடுங்கிட்டு வந்துடலாமான்னு இருக்கு # திரும்பத் திரும்ப போடுறே நீ! :)

~

"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்தமிழ்கூறும் நல்லுலகில் இத யாருய்யா கண்டுபிடிச்சது #முடியல :)

~

இந்தியாவைபோலியோஇல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது # ஒரு விநாடிபோலிகள்இல்லாத நாடுனு படிச்சுஷாக்ஆயிட்டேன். :)

~

எளிதில் கடந்துபோக வேண்டியவைகளை, கடந்துபோக முடியாத 'நோய்மை' மனோபாவத்திற்குள் அடைபட்டுக் கிடக்கின்றோம்.

~

பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும் - கருணாநிதி
# அவங்க எல்லார்த்தையும் குளிர்காலத்துல கொடைக்கானல் அனுப்பிடலாம் விடுங்க! :)

~

கருணாநிதி, எம்ஜிஆர். ஜானகி, ஜெயலலிதா, வைகோ யாருமே தமிழர் கிடையாது - அன்புமணி.
# அண்ணே குஷ்பு அக்கா பேரைச் சேர்க்காம விட்டுட்டீங்க! :)

~

தலை கனத்திருப்பதால்தான் ஆணி அடி வாங்கிக் கொண்டேயிருக்கிறதோ? #தத்துப்பித்து டவுட்டு :)

~

அன்பு வலி(மை)யானது

~

இன்றையிலிருந்து கடை பிடிக்க வேண்டும் என நினைக்கும் எதுவுமே, அன்றைக்குள்ளாகவே அதன் அடர்த்தியை இழந்து விடுகின்றது!


~

அவர்களை அவமானப்படுத்த அவர்களிடம் ஒருபோதும் அனுமதி பெறுவதேயில்லை!

~

எங்கெங்கு எப்போது 'கரண்ட் கட்' செய்யலாம்?” லிஸ்ட் போடும் மின்வாரியம்! # எப்போது கரண்ட் விடலாம்னு


~

எழுதிவிட்டு ENTER தட்டிய ட்விட்டுகளைவிட, ”செரி வேணாம் விடுஎன அழித்தவைகளே அதிகம்!

~
வாடா போடாகல்லூரித் தோழனை 17 ஆண்டுகள் கழித்து இணையம் வாயிலாக மீட்டு, பேசினோம் பேசினோம் கடந்தகாலம் கரையக்கரையப் பேசினோம் #வாழ்க இணையம்

~
ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டை முற்றிலும் ஒழிப்போம்னு சத்தியம் செய்து தேமுதிக, மதிமுக ஏன் பாமக / காங்கிரசோ கூட அடுத்த முறை ஆட்சியமைக்கலாம்

~

அன்பு இகழப்படும் தருணங்கள் கொடிது

~
இனிமேபெரிய்ய்ய்ய்ய அளவுலகொள்ளை அடிக்கிறவங்கதான் தலைப்புச் செய்தியா இருப்பாங்க போல #அரசியல் கொள்ளையர்களுக்கு இது பொருந்தாது!

~

நம்மை நாமே ஏமாற்றுவதைவிட, மற்றவர்கள் ஏமாற்றுவது குறைவுதான்

~

பொய் ஒரு (ளை)லை

~

இடைத்தேர்தல் பணிகளுக்கு 32 அமைச்சர்கள்
#
நல்லவேளை, ஆளுநர் ரோசய்யாவை பட்டியலில் சேர்க்காம விட்டாங்களே!

~
மனதுக்கு உகந்தவர்களுக்கென ஒரு மணத்தை மனமே தக்கவைத்துக்கொள்கிறது!

~

தன்னை வணங்க வரும் பக்தனைச் சமமாக நடத்தும் வரம் கூட கடவுள்களிடம் இருப்பதில்லை

~

மீசைஆம்பள சிங்கம்ங்ற உணர்வைத் தருதாமே - விஜய்டிவி நீயாநானா
#காடுகளில் ஆம்பள சிங்கம் என்ன வேல பண்ணுதுன்னு பாருங்க, பொழப்பு நாறிடும் :)


~
எது சந்தோசம் என்பதில்தான் எல்லாருக்கும் பெருங்குழப்பம்

~

8 comments:

arul said...

simple and nice post

Mahi_Granny said...

:D

'பரிவை' சே.குமார் said...

அருமை... அருமை...

ஓலை said...

Vaazhththa vayathillai - pazhamai kitta anuppi vidunga !

Kalakkal. :-)

Rathnavel Natarajan said...

அனைத்தும் அருமை சார்.

shammi's blog said...

nice to read and think ....

Kayathri said...

அத்துனையும் அருமை தோழரே....:):)
//கல்வி என்ற பெயரில் பிள்ளைகள்மேல் ஏவி விடப்படும் வன்முறைகளைக் காணும்போது ஒன்று புரிகிறது - இந்த நாடு நாசமாகப் போகப்போகிறது :(//

Saravanan TS said...

அனைத்து பதிவுகளும் எனது உள்மனத்தின் தோன்றிய எண்ணங்களின் நகல் போல் உள்ளது. அருமையான பதிவு