Apr 30, 2012

கீச்சுகள் - 16


சிந்தனையற்று இருப்பது குறித்துச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

~

மனதால் பேச எளிதாகயிருக்கிறது விட்டு விடுதலையாதல் போலே. புத்தியால் பேச மலைப்பாகயிருக்கிறது, “என்னவெல்லாம் பேசித்தொலைப்பமோ” எனும் அயர்ச்சியோடு.

~

கோடியில் அடிச்சவன விட்டுட்டு 5000 ரூவா லஞ்சம் வாங்றவனையா கைது பண்றது”- பொதுபுத்தி
#5000 கொடுக்க முடியாமத்தானே அவன் புகார் கொடுக்கிறான்.

~

கல்வி என்ற பெயரில் பிள்ளைகள்மேல் ஏவி விடப்படும் வன்முறைகளைக் காணும்போது ஒன்று புரிகிறது - இந்த நாடு நாசமாகப் போகப்போகிறது :(

~

எதிர்பாராமல் சந்திக்கும் யாரோ ஒருவர்தான் நமக்குள் ஏராளமான கேள்விகளை நிரப்பிவிட்டுச் செல்கின்றனர் #வாழ்க்கை விசித்திரமானது!

~

எதிரிகளோடுயிடும் சண்டை கனப்பதில்லை, நண்பர்களுடனான சண்டைபோல்.

~
ஃப்ளெக்ஸ் பேனர்ல பளபளனு மின்னுறதலைங்க, ரெண்டு நாள் கழிச்சு அந்த பேனர் விழும் இடத்தைப் பார்த்தா, பேனரே வெக்காதீங்கனு கும்புடு போடுவாங்க!

~

வீட்டில் ஒட்டடை அடிக்க வேண்டிய தருணங்களில், உயரமான ஆண்களுக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்கிறது!

~

கொட்டாவி விடும் குழந்தை ஒரு கூடை உறக்கத்தை ஊட்டுகிறது எனக்குள்

~

எழுதத் துவங்கும் வரை வார்த்தைகள் பிடிபட மறுக்கின்றன. எழுதத் துவங்கிய பிறகு வார்த்தைகள் தீர மறுக்கின்றன # நீளமான கட்டுரை :(

~

நிச்சயமாக அரசியலுக்கு வந்தே தீருவேன். என்னை யாரும் தடுக்க முடியாது - வடிவேலு
#ஆமா, இவர வேற ஆயிரம் பேரு அணைபோட்டுத் தடுக்குறாங்களாக்கும்!

~

ஞாயிறு மாலை டாஸ்மாக் போகிறவர்கள், மதியம் நன்றாகத் தூங்கி, குளித்து, நல்லதாக உடையுடுத்தி, நெற்றியில் பட்டைதீட்டி கொஞ்சம் பழமாக போகிறார்கள்.

~
இந்த விஜய் டிவிக்காரங்க வெச்சிருக்கிற நாலஞ்சு சினிமா பட டிவிடியை புடுங்கிட்டு வந்துடலாமான்னு இருக்கு # திரும்பத் திரும்ப போடுறே நீ! :)

~

"வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்தமிழ்கூறும் நல்லுலகில் இத யாருய்யா கண்டுபிடிச்சது #முடியல :)

~

இந்தியாவைபோலியோஇல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது # ஒரு விநாடிபோலிகள்இல்லாத நாடுனு படிச்சுஷாக்ஆயிட்டேன். :)

~

எளிதில் கடந்துபோக வேண்டியவைகளை, கடந்துபோக முடியாத 'நோய்மை' மனோபாவத்திற்குள் அடைபட்டுக் கிடக்கின்றோம்.

~

பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும் - கருணாநிதி
# அவங்க எல்லார்த்தையும் குளிர்காலத்துல கொடைக்கானல் அனுப்பிடலாம் விடுங்க! :)

~

கருணாநிதி, எம்ஜிஆர். ஜானகி, ஜெயலலிதா, வைகோ யாருமே தமிழர் கிடையாது - அன்புமணி.
# அண்ணே குஷ்பு அக்கா பேரைச் சேர்க்காம விட்டுட்டீங்க! :)

~

தலை கனத்திருப்பதால்தான் ஆணி அடி வாங்கிக் கொண்டேயிருக்கிறதோ? #தத்துப்பித்து டவுட்டு :)

~

அன்பு வலி(மை)யானது

~

இன்றையிலிருந்து கடை பிடிக்க வேண்டும் என நினைக்கும் எதுவுமே, அன்றைக்குள்ளாகவே அதன் அடர்த்தியை இழந்து விடுகின்றது!


~

அவர்களை அவமானப்படுத்த அவர்களிடம் ஒருபோதும் அனுமதி பெறுவதேயில்லை!

~

எங்கெங்கு எப்போது 'கரண்ட் கட்' செய்யலாம்?” லிஸ்ட் போடும் மின்வாரியம்! # எப்போது கரண்ட் விடலாம்னு


~

எழுதிவிட்டு ENTER தட்டிய ட்விட்டுகளைவிட, ”செரி வேணாம் விடுஎன அழித்தவைகளே அதிகம்!

~
வாடா போடாகல்லூரித் தோழனை 17 ஆண்டுகள் கழித்து இணையம் வாயிலாக மீட்டு, பேசினோம் பேசினோம் கடந்தகாலம் கரையக்கரையப் பேசினோம் #வாழ்க இணையம்

~
ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டை முற்றிலும் ஒழிப்போம்னு சத்தியம் செய்து தேமுதிக, மதிமுக ஏன் பாமக / காங்கிரசோ கூட அடுத்த முறை ஆட்சியமைக்கலாம்

~

அன்பு இகழப்படும் தருணங்கள் கொடிது

~
இனிமேபெரிய்ய்ய்ய்ய அளவுலகொள்ளை அடிக்கிறவங்கதான் தலைப்புச் செய்தியா இருப்பாங்க போல #அரசியல் கொள்ளையர்களுக்கு இது பொருந்தாது!

~

நம்மை நாமே ஏமாற்றுவதைவிட, மற்றவர்கள் ஏமாற்றுவது குறைவுதான்

~

பொய் ஒரு (ளை)லை

~

இடைத்தேர்தல் பணிகளுக்கு 32 அமைச்சர்கள்
#
நல்லவேளை, ஆளுநர் ரோசய்யாவை பட்டியலில் சேர்க்காம விட்டாங்களே!

~
மனதுக்கு உகந்தவர்களுக்கென ஒரு மணத்தை மனமே தக்கவைத்துக்கொள்கிறது!

~

தன்னை வணங்க வரும் பக்தனைச் சமமாக நடத்தும் வரம் கூட கடவுள்களிடம் இருப்பதில்லை

~

மீசைஆம்பள சிங்கம்ங்ற உணர்வைத் தருதாமே - விஜய்டிவி நீயாநானா
#காடுகளில் ஆம்பள சிங்கம் என்ன வேல பண்ணுதுன்னு பாருங்க, பொழப்பு நாறிடும் :)


~
எது சந்தோசம் என்பதில்தான் எல்லாருக்கும் பெருங்குழப்பம்

~

8 comments:

arul said...

simple and nice post

Mahi_Granny said...

:D

'பரிவை' சே.குமார் said...

அருமை... அருமை...

ஓலை said...

Vaazhththa vayathillai - pazhamai kitta anuppi vidunga !

Kalakkal. :-)

Rathnavel Natarajan said...

அனைத்தும் அருமை சார்.

shammi's blog said...

nice to read and think ....

Kayathri said...

அத்துனையும் அருமை தோழரே....:):)
//கல்வி என்ற பெயரில் பிள்ளைகள்மேல் ஏவி விடப்படும் வன்முறைகளைக் காணும்போது ஒன்று புரிகிறது - இந்த நாடு நாசமாகப் போகப்போகிறது :(//

Saravanan TS said...

அனைத்து பதிவுகளும் எனது உள்மனத்தின் தோன்றிய எண்ணங்களின் நகல் போல் உள்ளது. அருமையான பதிவு

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...