காவல்


கடவுளை முன்னிறுத்தி...

விதை விதைத்தான்
அறுவடை செய்தான்

அருள்வாக்கு சொன்னான்
ஆன்மீகத்தை விற்றான்

கம்பெனி ஆரம்பித்தான்
காதுகுத்திக் கெடாவெட்டினான்

பூசாரியாய் குறி சொன்னான்
சாதியாய் பிரிந்து நின்றான்

எதிரிக்கு சாபம் கொடுத்தான்
திருடனை மிரட்டினான்

குடம் குடமாய் பால் ஊற்றினான்
குடும்பமாய் மொட்டை போட்டான்

வேண்டுதல்கள் வைத்தான்
உண்டியலில் கொட்டினான்



கடைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்

_____________________________

51 comments:

ஷர்புதீன் said...

ஹ ஹ ஹா

Katz said...

அருமை!

அகல்விளக்கு said...

:-)

நல்லாருக்கு அண்ணா......

*இயற்கை ராஜி* said...

:-))

க ரா said...

நல்ல சிந்தனை.

வால்பையன் said...

என்னைய மாதிரி ஆளுங்க போனா அதுலயும் துப்புவோமே!

Unknown said...

அருமை..

நசரேயன் said...

ஓடியாங்க .. ஓடியாங்க கதிர் கவிதை போட்டு இருக்காரு.. எதிர் கவிதை போட சீக்கிரம் வாங்க

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை ரொம்ப அருமை.

Chitra said...

கடைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்


..... நச்.

பழமைபேசி said...

//எதிர் கவிதை போட சீக்கிரம் வாங்க//

மன்னிக்கணும்....

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அசத்தல் கவிதை

பழமைபேசி said...

//குடும்பமாய் மொட்டை போட்டான்//

சும்மாப் பொய் சொல்லப்படாது.... வூட்ல இருக்குற பொம்பளை ஆட்களுமா?? இல்லை, அவங்களை குடும்பத்துல ஒருத்தரா நினைக்கலையா??

உங்களைப் படுத்துறதுன்னு முடிவு செய்தாச்சு... பதில் சொல்லுங்க மாப்பு, ப்தில் சொல்லுங்க.....

பனித்துளி சங்கர் said...

//////கடைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்////

சிரிப்பதா !
சிந்திப்பதா !

பழமைபேசி said...

//படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்//

சாமியக் கொண்டாந்து அங்க வெக்கிற வரைக்கும் அங்கதான் துப்பிகிட்டு இருந்திருக்கிறீங்க... அடக் கடவுளே!

தாராவரத்து பழனிச்சாமி அண்ணன், பாலா அண்ணன் அல்லாரும் வாங்க, வந்து என்னன்னு கேட்டுப் போங்க சித்த!!

கமலேஷ் said...

நல்லா இருக்குங்க...

vasu balaji said...

லொள்ளப்பாரு:)

seethag said...

கதிர் ,உங்க கவிதை நாளளுக்கு நாள் நால்லாயிடே வருது.


என்னோட spoiler...

டைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்..



ஆனாலும் நான் துப்பினேன்....

திருவண்ணாமலை கோயிலுக்குள் நான் இந்த்தகய காரணங்கலுக்காக போவதே இல்லை.துப்பல் மட்டுமில்லை மற்ற எல்லாமுமே....

ஹேமா said...

கதிர்...கடவுள் காப்பாத்துவார்...தெரியாதோ !

பழமைபேசி said...

வற்புறுத்தலுக்கு இணங்கி, தாவல் இங்க இருக்கு!

சீமான்கனி said...

ஆஹா கதிர் அண்ணே....ஓஹோ கதிர் அண்ணே...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இப்படி ஒரு கவிதையும் எழுதினான் :))

காமராஜ் said...

அடடா அங்க அபடியா. இங்க முட்டுச்சந்துல.

தாராபுரத்தான் said...

அண்ணன் அல்லாரும் வாங்க, வந்து என்னன்னு கேட்டுப் போங்க சித்த!!
// என்னுங்க?..

sathishsangkavi.blogspot.com said...

wav... Super.....

Karthick Chidambaram said...

மிக அருமையான கவிதை. கடவுளை யாரவது காபற்றுங்களேன் ?

ராமலக்ஷ்மி said...

//கடைசியாக//ச் சொன்ன காட்சியை எங்கோ காண நேர்ந்ததில் பிறந்த கவிதை என்பது என் அனுமானம். சரிதானா?

Anonymous said...

:-D

Deepa said...

Very nice!

VELU.G said...

ஹ ஹ ஹ ஹா

SUPER

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நசரேயன் said...
ஓடியாங்க .. ஓடியாங்க கதிர் கவிதை போட்டு இருக்காரு.. எதிர் கவிதை போட சீக்கிரம் வாங்க
//

:))

அம்பிகா said...

எல்லாம் அவன் செயல்.

சசிகுமார் said...

நல்ல இருக்கு நண்பா

க.பாலாசி said...

//கடைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்//

அய்யோ பாவம்... நல்ல கவிதை...

vasan said...

க‌திர்,
க‌ட‌வுள் க‌விதையின் முடிவு ம‌ட்டும் "நச்"
ம‌ற்றெல்லாம் 'ந‌றுக். நறுக்..ந‌றுக்'தான்.
வ‌லி தாங்க‌ முடிய‌ல்ல‌...

சாந்தி மாரியப்பன் said...

//கடைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்//

நச்.. ஆனாலும் பிரயோஜனமில்லை. கொஞ்சம் தள்ளி துப்பிட்டு போறாங்களே :-(((

கலகலப்ரியா said...

நல்லாருக்கு கதிர்... (ஆனா காவலுக்கு காவல் வைக்கல போலயே... எடுத்துக்கிட்டு தாவிட்டாங்க போலயே)

Unknown said...

கவிதை கலக்கல்.ஒவ்வொரு வரியும் அருமை.

dheva said...

//கடைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்//

அப்டியா....? இப்படி எல்லாமா நடக்குது..?

செல்வா said...

நல்லா இருக்கு ...!!!

Paleo God said...

http://palaapattarai.blogspot.com/2010/06/blog-post_24.html

ஹி ஹி..!

Kumky said...

ம்.

Paul said...

ஹா ஹஹஹா.. நல்ல இருக்கு.. :-)

பிரேமா மகள் said...

கொடுமைதான்... எங்க போய் முட்டிக்க?

ஜெட்லி... said...

சூப்பர்...

KANA VARO said...

புரிந்தும் புரியாமல் .... அருமை

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

//குடம் குடமாய் பால் ஊற்றினான்//


எதிர் கவுஜைகளில்
குடம் குடமாய்
குவாட்டர்கள்..

AkashSankar said...

மனதில் குப்பைகளை வைத்துக்கொண்டு... கடவுளை எங்கு வைத்தால் என்ன...

r.v.saravanan said...

ஹா ஹா கவிதை நன்று கதிர்

goma said...

பிடிக்காதவர் படத்தை மாட்டி “இங்கே துப்பவும்” என்று போடாமல் விட்டார்களே...நல்ல வேளை.
கடவுளைக் காவலுக்கு வைத்தால் அவனைக் கடவுள் பார்த்துகொள்வார்.

நாம் யார் கடவுளைக் காப்பாற்ற...?

செந்தில்குமார் said...

வெகு நாட்களுக்கு முன் ஒரு நாளிதழில் படித்தது
மேலை நாடுகளில் நமது கடவுளின் உருவம் பொதித்த நவின கழிவரை சாதனங்கள் உருவாக்கப்படுகின்றன என்பது அந்த செய்திதாளில் நான் வாசித்தது

கவிஞர் அன்ரே சொன்னார் மனிதராய் பார்த்து திருந்தாவிட்டால்...ம்ம்கும்ம்ம்..