Showing posts with label துணுக்குகள். Show all posts
Showing posts with label துணுக்குகள். Show all posts

Nov 22, 2010

பகிர்தல் (22.11.2010)


சேமிக்காத மழை: 

எனக்குத் தெரிந்து இந்த ஆண்டுதான் தொடர்ந்து பல நாட்களாக நம் பகுதியில் இவ்வளவு மழை பெய்கிறதென்று நினைக்கிறேன். ஓரேயடியாய் பேய் மழையாய் இல்லாமல் அவகாசம் விட்டு அவ்வப்போது ஆர்பாட்டாம் இல்லாமல் பெய்துவருகிறது. சில பழைய சுற்றுச்சுவர் கட்டிடங்களில் கேரளா போல் பாசி பிடித்திருப்பதைக் காண முடிகிறது.

நகர்புறத்தின் நடுவே இருக்கும் சாக்கடைப் பள்ளங்களில் மழைநீர் கரை புரண்டோடி அக்கம் பக்கம் இருக்கும் குடிசைகளை இழுத்துச் செல்வதை என்றைக்கும் தடுக்க முடியாதது. காரணம், எல்லாக் குப்பைகளையும் சாக்கடைகளில் கொட்டி ஏதோ ஒரு இடத்தில் தேங்க வைப்பதுவும், மழை நீர் சேமிப்பு என்றால் அது எந்தச் சேனலில் வருகிறது என்பது போன்ற அக்கரையின்மையின் வெளிப்பாடே!. காங்கிரீட் காடுகளுக்குள் பெய்யும் மழையை துரத்தியடிப்பதில் இருக்கும் வேட்கை, நிலத்துக்குள் புகுத்தி சேமிக்கும் வள்ளமையை எந்த கண் துடைப்புச் சட்டத்தால் திணித்திட முடியும்!


மூச்சு முட்டும் பேச்சு :

ஒவ்வொரு முறையும் சாலைகளில் செல்லும் போது, கவனிக்கத் தவறாதது, இன்றைக்கு எத்தனை பேர் கைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். சராசரியாக 1 கி.மீ தூரம் செல்லும் சாலைகளில் எதிரில் வருபவர்கள், பக்கவாட்டில் இருப்பவர்கள், நடமாடுபவர்கள் எனக் கவனிப்பதில் குறைந்தது 30% பேர் கைபேசியில் பேசிக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. பத்து வருடங்களுக்கு முன் பேசியதை விட போன் மூலமாக குறைந்தது பத்து மடங்காவது சராசரியாக பேசுகிறோம் என நினைக்கிறேன். அப்படிப் பேசிப்பேசி என்ன சாதித்தோம் என்பதுதான் தெரியவில்லை. சினுங்கும் போனைப் பார்த்தாலே அயர்ச்சி கூடுகிறது.

இதையும் கொஞ்சம் பாருங்களேன்…

 


நல்ல கேள்வி

எந்த அரசாங்கமும் இதுவரை வாங்காத அளவுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது. ம்ம்ம் குட்டு மட்டுமா!?

இன்றைய லேட்டஸ்ட் குட்டு….
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் (கேரளாக்காரர்!!!!) நியமன வழக்கில் நியமனம் குறித்த சீல் வைத்த கவரில் கோப்புகளை அளித்த அட்டர்னி ஜெனரலிடம் கவரைப் பிரிக்காமலே உச்ச நீதிமன்றம் கேட்கிறது ஊழலில் கைதாகி ஜாமின்ல வந்தவரை எப்படி, ஊழல் கண்காணிப்பு ஆணையரா போடுறீங்க

இலவச விளம்பரம்:

எங்கள் அரிமா சங்க இதழ் சுவடுகளின் இந்த வருட ஆசிரியர் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது. இதுவரை இரண்டு இதழ்கள் வெளிவந்திருக்கிறது. இன்னும் மூன்று இதழ்கள் இருக்கின்றன. சொட்டும் கவிதைகள் பக்கத்தில் பதிவர்களின் கவிதைகளைப் பயன்படுத்தி வருகிறேன். குறுங்கவிதைகள் அனுப்ப விரும்பும் பதிவர்கள் எனக்கு மடலிடவும். ஏற்கனவே வலைப்பூவில் வெளியான கவிதையாக இருந்தாலும் சரி.

சுவடுகள் இதழ்களை வாசிப்பதற்கான சுட்டி சுவடுகள் - ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்

உயிர்களின் விலை :

ஈரோடு நகரத்தின் நான்கு முக்கியச் சாலைகளிலும் அகலமாக தடுப்புச் சுவர் கட்டிவிட்டார்கள். அந்தத் தடுப்புச் சுவர் எதிரெதிராய் வாகனங்கள் வரும், இடது வலது சாலையை பிரிப்பதற்கு என்பதைத் தாண்டி. விளம்பரப் பலகைகளி நடுவதற்கே என்பது போல் அவ்வளவு அகலம். அதுவும் மிக நெருக்கமாக நடப்பட்டிருக்கும் பலகைகளால் எதிர் சாலையில் வரும் வாகனங்கள் தெரியாமல், இடது பக்கச் சாலையிலிருந்து வலது பக்கம் திரும்பும் இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் அவ்வப்போது அடிபட்டு வருவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. விளம்பரப் பலகை மூலம் வரும் காசு பணத்திற்கு முன் உயிரா முக்கியம் ((:

கொஞ்சம் ’கிறிச்’சுகள் (அட...... ட்விட்ஸ்ங்க)

தோல்விகள் துன்பங்கள் என வலிக்க வலிக்க சுயசரிதையில் எழுதும் வாய்ப்பு வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது!

000000

நான்காவது ரவுண்டில் சேர்ந்த நண்பன் ராவா ஒரு புல் அடிப்பேன் எனச்சொல்ல, பாதி மப்பு காலி, ஒரு கிங்பிஷர்பீர் என ஆர்டர் செய்தபோது புல் மப்பும் காலி

000000


அரிசி, கோதுமை, பால் எதிலும் நினைச்ச இலக்கை அடைய முடியறதில்ல, தீபாவளிக்கு டாஸ்மாக் சேல்ஸ் 200+ கோடி டார்கெட் சொல்லி அடிக்கிறாங்க # பெருமை


000000


ஊழல் செய்பவர்கள், ஊழலில் அமைதிகாப்பதில்லை. அது குறித்து பேசும் போது ஒட்டுமொத்தமாய் அமைதி காக்கிறார்கள் # வாழ்க பணநாயகம்


000000


பீரையும், ஒயினையும் சேர்த்தா, முறைப்பெண்+மல்லிகைபூ மாதிரி செம காம்பினேசன் போல # பில்டப்பு


000000


இரண்டு திருமணமானவரோடு மாணவிஓட்டம்போலீஸ்வலைவீச்சு’- இன்னும் எத்தனை நாளைக்குத்தான்ஓட்டம்’ ‘வலைவீச்சுனே ஒப்பேத்துவீங்க  #வார்த்தைப் பஞ்சமோ


000000


குதூகலமாய், உற்சாகமாய் பேசவாவது செய்யும் பிரதமர் எப்போதான் கிடைப்பாங்க இந்தியாவுக்கு # பேராசை


000000


இந்தியாவில் உச்ச நீதி மன்றம் என்று ஒன்று இல்லாமல் போயிருக்கக் கூடாதா? # மன்மோகன்சிங்


000000



சின்னக் குழந்தைகள் வீதிகளில் தீபங்களோடு. டிவிக்களிலிருந்து பிய்த்தெடுப்பதற்காக வேணும் இத்தருணங்கள் தொடரட்டும். # கார்த்திகை தீபம்


000000


RADIA னு பேர் வச்சதுக்குப் பதில் RADIO னு பேர் வச்சிருக்கலாம் # Niira Radia Tapes


000000



Oct 30, 2010

பகிர்தல் (30.10.2010)

நுட்பத்தின் கனம்:

மூன்று வருடங்களாக அவதானித்துக் கொண்டு வருகிறேன். வழக்கமாக கடிதம் கொடுக்க வரும் பையன். எப்போதும் முகத்தை இருக்கமாகவே வைத்திருப்பான். இயந்திரத்தனமாய் கடிதத்தை மேசை மேல் கிட்டத்தட்ட போடுவது போல் வைத்துவிட்டு, கையொப்பம் பெற்றுச் செல்பவன். கடந்த இரண்டு வருடம் போலவே, மூன்றாவது ஆண்டாக கவனிக்கிறேன், ஏனோ நேற்றிலிருந்து வணக்கம் சொல்ல ஆரம்பித்துவிட்டான். இன்று கூடுதலாக சிரித்தான். அவன் போன பின் தான் ஆச்சரியப்பட்டாசு மனதிற்குள் வெடித்தது அட தீபாவளி வருதுல்ல. ஊர்ல எல்லோருமே நுட்பமாத்தான் யோசிக்கிறாங்க போல. நானும் பல இடங்களில் அந்தப் பையன் பயன்படுத்தும் நுட்பத்தை கூடுதலான அல்லது குறைவான கனத்தோடு பயன்படுத்தாமலா இருந்திருப்பேன்.

பன்னாட்டு முனையம்:

சமீபத்தில் சென்னை பன்னாட்டு விமான நிலைய முனையத்தில் கண்ட சில காட்சிகள் நான் இண்டியேண்ட்டா என்று பெருமையாய் மார்தட்டிக் கொள்ளும் வகையில்தான் இருந்தது. இது போல்தான் இந்தியாவின் மற்ற ஊர்களிலும், பன்னாட்டு முனையங்கள் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. 


ஒரு கழிவறைக்குச் சென்று விட்டு திரும்பும் போது நண்பர் “மாப்ள நம்ம லட்சணத்த பாரேன் எனச் சுட்டிக் காட்டினார், தானாக கதவு மூட கருவியை பொருத்திவிட்டு பார்த்திருப்பார்கள் போல, திறக்கும் போதெல்லாம் சுவற்றில் இடித்ததோ என்னவோ,  சுவற்றையே குடைந்து விட்டார்கள். குடைந்த இடத்தை கொஞ்சம் பூசி மெழுக ஒப்பந்தப் பணத்தில் காசு இல்லாமல் இருந்திருக்குமோ என்னவோ. முக்கியமான நகைச்சுவை என்ற வென்றால் கழிவறைக்குள் ஒரு EXIT என்ற பலகை வேறு. எங்கே உட்கார்ந்து யோசிச்சாங்களோ தெரியல!

மகிழ்ச்சி:

சில வாரங்களுக்கு முன் எழுதிய ஒரு வேளை சாப்பாடு ஒரு ரூபாய் இடுகைக்கு கிடைத்த வரவேற்பு மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. வாசித்த பலர் அந்த உணவுச்சாலை உரிமையாளரைத் தொடர்பு கொண்டு வாழ்த்தியதும், பொருளாதார உதவி புரிந்ததும் நன்றிக்குரியது. அந்த இடுகையை BUZZ மற்றும் மின் மடல்கள், குழுமங்கள் வாயிலாக நிறையப் பேர் தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருந்திருக்கின்றனர். திரு.வெங்கட்ராமன் சார்பாகவும் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பதிவர் லக்கியின்  உதவியால் நான் எழுதிய கட்டுரையை ஒட்டிய ஒருபக்கச் செய்தி புதிய தலைமுறை வார இதழில் படங்களுடனும் திரு.வெங்கட்ராமன் அவர்களைப் பற்றிய விபரங்களுடனும் வெளிவந்துள்ளது. புதிய தலைமுறை மற்றும் பதிவர் யுவகிருஷ்ணா ஆகியோருக்கு நன்றிகள்.

கடுப்பு (அ) ஆச்சர்யம்:

ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு மதிய உணவை வழங்கிவரும் திரு. வெங்கட்ராமன் அவர்கள் சொன்னதில் ஆச்சரியத்தையும் கூடவே கடுப்பையும் ஏற்படுத்திய சுவாரசியமான தகவல். ஒரு ரூபாய்க்கு சாப்பாடு வழங்குவதை ஊக்கு(!)விக்கிறோம் பேர்வழி என ஒரு தம்பதி தங்கள் மகனின் பிறந்த நாளுக்கு 15 ரூபாய் கொடுத்து பதினைந்து பேருக்கு உணவு வழங்குங்கள் என்று கூறினார்களாம், அடுத்து வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர், நான் 5000 ரூபாய் தந்தால், 5000 பேருக்கு உணவு கொடுப்பீர்களா  என்றும் கேட்டிருக்கிறார். உண்மையிலேயே அவர்களுக்கு புரிதலில் ஏதும் பிரச்சனையா என்ற ஆச்சரியமும், மனிதர்களில் இப்படியுமா என்ற கடுப்புமே வருகிறது, என்ன செய்ய?

விடாத எந்ந்ந்ந்ந்...திரன்:

இந்த மாதம் பேசுவதற்காக ஏறிய மூன்று மேடைகளிலும், பேசியவர்களில் பெரும்பாலானோர் தவறாமல் குறிப்பிட்ட ஒரு வார்த்தை எந்ந்ந்ந்...திரன். எதைப் பேசினாலும், அதற்கு ஒரு விளம்பரம் என்று நினைக்கும் நிறுவனத்திற்கு எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றோம், இங்கு எழுதுவது உட்பட. (பொறுப்பி : இன்ன்ன்ன்னும் படம் பார்க்கல)


சுட்டதில் பிடித்தது:

தன்கையே தனக்குதவி

துணுக்குகள்:

உதகை மலை ரயில் மலையளவு பிரச்சனைகளை சந்திக்கின்றது... (செய்தி )

இந்த எதுகை மோனைக்கு ஒன்றும் குறைச்சலில்லை

-000000-

ஸ்ரீரங்கத்தில் ஜெ. 100 ரூவா நோட்டுகளில் காணிக்கை. (செய்தி)
மக்களோட பாடு பரவாயில்ல போல 500 / 1000 ரூவா நோட்டாத்தான் ஓட்டுக்கு வாங்குறாங்க

-000000-

திருப்பதி கோவிலில் ஊழல் தலைவிரித்தாடுகிறது...(செய்தி)
அட புடிச்சு மொட்டையடிச்சு விடுங்கப்பா!!!!  (எப்பவோ விகடனில் வந்த ட்விட்டு)

-000000-

காலங்காத்தால பொசு பொசுன்னு பெய்யுற மழை..  சுகமோ சுகம்

-000000-

தமிழ்நாட்டில் 10,430 தனியார் பள்ளிகள் உள்ளன...(செய்தி)

கல்வியை மட்டும்தானே(!) வித்துட்டோம்.
சரக்கு சப்ளை கவர்மெண்ட் கைவசம்தானே இருக்கு..

-000000-

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...