Sep 30, 2016

பிரியத்தின் தலைகோதியபடி



இறுதியாய்க் கோர்த்திருந்த விரல்களினூடே
உயிரின் கதகதப்பிருந்தது
எனினும் நம் உள்ளங்கைகளினூடே
ஒரு மௌனம் கதைத்திருந்தது
அறைந்து உறைந்து போன பார்வைக்கு
ஒளிவர்ணம் தீட்டிய படியும்
அணைத்து உணர்த்திய வாசனைக்கு
மலர்களைத் தூவியபடியும்
பகிர்ந்த ஆதிச்சொல்லையும்
பகிரப்போகும் இறுதிச்சொல்லையும் தேடி
துள்ளி விளையாடும் பிரியத்தின்
தலைகோதியபடியும் காத்திருப்பேன்!

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...