Sep 30, 2016

பிரியத்தின் தலைகோதியபடி



இறுதியாய்க் கோர்த்திருந்த விரல்களினூடே
உயிரின் கதகதப்பிருந்தது
எனினும் நம் உள்ளங்கைகளினூடே
ஒரு மௌனம் கதைத்திருந்தது
அறைந்து உறைந்து போன பார்வைக்கு
ஒளிவர்ணம் தீட்டிய படியும்
அணைத்து உணர்த்திய வாசனைக்கு
மலர்களைத் தூவியபடியும்
பகிர்ந்த ஆதிச்சொல்லையும்
பகிரப்போகும் இறுதிச்சொல்லையும் தேடி
துள்ளி விளையாடும் பிரியத்தின்
தலைகோதியபடியும் காத்திருப்பேன்!

முதியதோர் உலகு

அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...