மூப்பெய்தும் இரவு உறங்க அழைக்கிறது
ஒரு மடியின் கதகதப்பு வேண்டுமாயிருக்கிறது
புடவையில் பழமையின் வாசனை இருக்கவேண்டும்
மெல்லத் தலை கோதும் விரல்கள்
முதிர்ந்ததாய் சற்று முடிச்சிட்டதாய்
இருத்தல் பிடித்தம்
வீசும் சொற்களில் வெற்றிலையும்
வாசனைச் சுண்ணாம்பும் கொட்டைப் பாக்கும்
கலந்த ஒரு வாசனை வேண்டும்
இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால்
அது ஆயாவின் பிரியமாகவும்
அம்மாயியின் வாசனையாகவும் இருத்தல் போதும்!
கனவிலும் கூடுதல் அன்பாய்
இருக்கப் பிரியப்படுகிறேன்!
-
Subscribe to:
Post Comments (Atom)
வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்
பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...
-
பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அற...
-
ஒரு படைப்பாளி மனதில் மிதந்து கொண்டிருந்த விசயங்களை இறக்கி வைக்கும் ஒரு தளமாகவே பெரும்பாலும் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறான். ஆரம்பத்தில் இலக...
-
வழக்கமான பொழுதுகள் வழக்கம்போல் கடந்து போக , துக்கம் பீடிக்கும் நொடிகள் நகர மறுத்து மனதிற்குள் கனத்தை ஏற்றிக்கொண்டே இருக்கின்றன. நேற்ற...
3 comments:
அருமை
உண்மைதான் அந்த மடிக்கும் ,தலைவருடலுக்கும் மனம் ஏங்குகின்றது..
நேசம் சொல்லும் அருமையான கவிதை அண்ணா....
அந்த மடிக்கும்... தலை வருடும் கைகளுக்கும் இன்னும் கொடுப்பினை இருந்தும் வாழ்க்கை ஓட்டத்தில் தூர தேசத்தில்... மனம் ஏங்குகிறது அண்ணா...
Post a Comment