Jun 7, 2013

குற்றச் சுமை





பால் பேதங்கள் துறந்து
எல்லைகள் தகர்த்து
எதையும் பகிரும்
தோழி ஒருத்தியை
ஏதோ ஒரு இரவின்
நித்திரைக் கனவில்
கலந்து கூடியதை

சொல்லத்தவிர்த்து
மனம் உதறி
விழி கூசிப்பிரிகையில்
கூடுதலாய்ச் சேர்கின்றன
குற்றப் பத்திரிக்கையில் 
குறுகுறுக்கும் சில பக்கங்கள்!

-

2 comments:

பத்மா said...

:))

Unknown said...

ஒரு ஆணின் உச்சபட்ச நேர்மை குற்ற உணர்ச்சியாக வழிகிறது ..!

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...