Jun 7, 2013

குற்றச் சுமை





பால் பேதங்கள் துறந்து
எல்லைகள் தகர்த்து
எதையும் பகிரும்
தோழி ஒருத்தியை
ஏதோ ஒரு இரவின்
நித்திரைக் கனவில்
கலந்து கூடியதை

சொல்லத்தவிர்த்து
மனம் உதறி
விழி கூசிப்பிரிகையில்
கூடுதலாய்ச் சேர்கின்றன
குற்றப் பத்திரிக்கையில் 
குறுகுறுக்கும் சில பக்கங்கள்!

-

2 comments:

பத்மா said...

:))

Unknown said...

ஒரு ஆணின் உச்சபட்ச நேர்மை குற்ற உணர்ச்சியாக வழிகிறது ..!

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...