வண்ணப்பிறைகள்



நினைவின் இமைகளில்
ஒவ்வொரு முறையும்
அமர்த்துகிறாய்
ஒரு துளி உற்சாகத்தை
அந்த முதல் சந்திப்பினைப்போலவே!

***

உதிர அணுக்களில்
வியர்வை உப்புக்களில்
முத்த ஈரத்தில்
கருவிழியின் வெளிச்சத்தில்
இடையறக் கலந்திருக்கும்
இனிய மாயம் ஒருபோதும்
புரிவதேயில்லை


***

என்னை நீயும்
உன்னை நானும்
அறியும் முன்னேயும்
கடந்து போயிருக்கின்றன
எத்தனையோ பிறைகள்

என்னை நீயும்
உன்னை நானும்
அறிந்த பின்னும்
கடந்து போகின்றன
எத்தனையோ பிறைகள்
வண்ணங்களைத் தூவியபடி!

***

1 comment:

சித்தாரா மகேஷ். said...

//நினைவின் இமைகளில்
ஒவ்வொரு முறையும்
அமர்த்துகிறாய்
ஒரு துளி உற்சாகத்தை
அந்த முதல் சந்திப்பினைப்போலவே!//

முதல் சந்திப்பு என்றும் மனதை விட்டு அகலமுடியாதுதான்.அருமை சகோதரா.
Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?