கீச்சுகள் - 14




ஊர்ல உலகத்துல அங்கங்க ”நாலு பேரு” நம்மள படுத்துற பாடு பெரும்பாடு. ஆனா அந்த “நாலு பேரு” கருப்பா செவப்பா, நெட்டையா குட்டையானு கூட தெரியறதில்ல!

*


சாலையோரம் போதையில் கிடந்த குடிமகனை மானசீகமாக வணங்கிக் கடந்தேன், சாலை போட நான் அளிக்கும் வரி(!)யை விட அவனே அதிகம் பங்களிக்கிறான்.

*

“அன்பு / காதல் / கோபம் / இன்பம்.......etc” எனும் உணர்வுகளுக்கான வரையறைகள், அவரவர் மனதுப்படி மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன.

*

மின்சாரம் தொலையும் இரவுகள் உணர்த்துகின்றன, வானத்தில் நட்சத்திரங்களும் இருக்கின்றன என்பதை  
#நகரம்

*

மறதி ஓர் விடுதலை!

*

சிரிப்பே வராத மாதிரி ‘ஜோக்’கை சொல்லிட்டு, நாம சிரிக்கலையேனு ஏக்கமா பார்க்கிறவங்களைப் பார்க்கும் போதுதான் சிரிப்பு பொத்துக்கிட்டு வருது.

*

சமூக இணையதளங்களில் நம்மை தொடர்பவர்களின் / நட்பில் இருப்பவர்களின் எண்ணிக்கையை எண்ணி(!) நாம் கொள்ளும் கர்வம் அல்பத்தனமாக இருக்கின்றது! :(

*

அவளை அவனுக்குள் தொலைத்தான் / அவனை அவளுக்குள் கண்டெடுத்தாள் # புரியலதானே!? எப்பவுமே அவ’ள்’தான் புத்திசாலி! # புரியுதுதானே!? :)

*

கழுத்த சாய்ச்சு செல் பேசிட்டு ஒருகைல வண்டி ஓட்டுறவங்கள விட்டு, ஒழுங்கா ஓட்டுறவங்கள குறிபார்த்து விழுகுறாங்களே! அவங்க நல்லவங்களா கெட்டவங்களா?

*

வார்த்தையால் வாங்கும் அடிக்கு அன்பால் திருப்பி அடித்தால் ஊடல் முடியப்போகிறதென அர்த்தம்.

*

இத்தன தண்டச்செலவு செய்ததற்குப் பதிலா, 3-இடியட்ஸ்க்கு தமிழில் ”SUB TITLE” மட்டும் போட்டிருக்கலாம் # கடுப்பேத்தும் ‘நண்பன்’

*

’முக்கியமான மேட்டர் பேசனும்’னு பீடிகையோட பீதியைக் கிளப்பிட்டு, உப்புச்சப்பில்லா மேட்டர் பேசுறவங்கள யாருகிட்டே புடிச்சுக்குடுக்கலாம்?

*

வயது கூடக்கூட முதுமையோடு சுயநலமும் கூடுகிறது!

*

”தவறாகப் புரிந்துகொள்வதில்” மிகச் சரியாக இருக்கின்றோம் பல நேரங்களில்!

*

ஜல்லிக்கட்டை நிறுத்தச்சொல்லிப் போராடுறவங்க மாடு துன்புறுதேன்னு போராடுறாங்ளா? இல்ல சகமனிதனை இரத்தக்காவு கொடுக்குறமேன்னு போராடுறாங்ளா?

*

கடவுளை அதீதமாய் நம்புபவனின் ஆச்சரியங்களில் ஒன்று ”கடவுளை நம்பாதவனுக்கும், எப்படி நல்லது நடக்கிறது!?”


*

பீத்தப் பிடிவாதங்கள் சில நேரங்களில் பெரும் பாடுபடுத்துகின்றன.
உதா’ரணம்’: “குளிர் காலத்திலும் பச்சத் தண்ணியிலதான் குளிப்பேன்”

*

பிரதமர் அலுவலகம் ’ட்விட்டரில்’ இணைந்தது. அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அறுவாளாம் #பழமொழி

*

எதைக் கேள்வியுற்றாலும், ஏதாவது ஒரு நிலைப்பாடு எடுக்கத் துடிக்கிறோம்.

*

ரூ.1000 கடனைத் திருப்பிக்கேட்ட அண்ணன் தம்பி இருவர் படுகொலை. 32 & 26 ரூவா வறுமைக்கோடுனு இருக்குற நாட்ல 1000 ரூவா ரொம்ப பெரிய தொகைதானே :(

*

ஜனவரி 26-ஐக் கூட நம்ம விருப்பத்துக்கேத்த மாதிரி வெள்ளிக்கிழமைல வரவெச்சு 3 நாள் விடுமுறை கொண்டாட நமக்கு உரிமையில்லை. இதுல என்ன குடியரசோ போங்க :)

*

கொள்ளையடிக்கப்பட்ட சென்னை வங்கியில் கண்காணிப்பு கேமரா இல்லை. # துணி மாத்துற ரூம்ல, கழிவறைல கூட கேமரா இருக்கு. பாவம் வங்கி ரொம்ப ஏழை போல!

*

கோபங்கள் தேயும் இடங்களில் அன்பு வந்து நிரம்புகின்றது

*

நம்மைப்பற்றி நமக்குத் தெரிந்ததையே வேறொருவர், வேறு வார்த்தைகளில் சொல்ல உணர்ச்சி வயப்படுகிறோம் #பாராட்டு / விமர்சனம்

*

வகைதொகை இல்லாம எல்லார் வீட்லேயும் 2012 படம் பார்க்கிறதப் பார்த்தா.... ஒருவேளை 2012ல் உலகம் அழிஞ்சுதான் போயிடுமோனு தோணுது :)

*
புன்னகையை உணர்த்திட வார்த்தைகள் போதாது, உதடுகளில் விரிவடையும் வரிகள் அவசியம்!

*


எல்லாம் புரிந்துகொண்டு, நம்மை அப்படியே ஏற்றுக்கொண்டிட ஓர் உறவு வேண்டும் எனும் சுயநலத்தில் ஒருவனும் இதுவரை வென்றதில்லை

*

இந்த சினிமாவுல மட்டும்தான் கொட்டும் மழையில பிணத்தை அடக்கம் பண்றது / டூயட் பாடுறது / சண்டை போடுறது எல்லாம் நடக்குது!

*

நம்ம ஊர்ல ”இந்த சிவப்பழகு / ஏஜ் மிராக்கிள் க்ரீம்” விக்கிற வெண்ணைங்க, ஏன் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் போய் யேவாரத்த பெருக்கக்கூடாது!?

*

நிழற்படங்களை வைத்தே பலரை முற்றிலும் புரிந்துகொள்ள முயல்கின்றோம்!

*

மனிதன் தனது கீழ்மைகளுக்கு, தன்னை விலங்கோடு ஒப்பிடுகிறான் என்பது, எப்போதாவது விலங்குகளுக்கு புரிஞ்சுட்டாப் போதும், அன்றோடு சோலி சுத்தம்:)

*


பழிவாங்கும் உணர்வின் அடர்த்தியை பெரும்பாலும் எதிராளியே தீர்மானிக்கின்றான்

*

யாருமே நமக்காக இல்லையென்று மனதில் வெற்றிடம் தோன்றும்போது, யாருக்காகவும் நாமும் இல்லையோ என்பதை உணர்ந்தால், மனதில் ஏதோ நிரம்பும்!

*

தெரிந்தவர்களைச் சந்திக்கும்போது எப்படியிருக்கீங்க எனக்கேட்க “கிரேட்”னு சொல்பவர்களில் பாதிப்பேர் ”கிரேட்”ஆக இல்லைனு அவங்க கண்ணு சொல்லிடுது

*

மேதை படம் 10 ஆண்டுக்கு முன்னே வந்திருந்தா பாடமாம்.
தினத்தந்தியில் விமர்சனம் எழுதியவரின் கைகளை கண்களில் ஒத்திக்கத் தோணுது! # டீகடை

*

எப்பொழுதாவது உண்மையை ஒப்புக்கொள்வதின் போதை அபரிதமானது!

*

கல்வியை வணிகப் பொருளாக்கக் கூடாது - கலாம்.
கல்யாண ஜூவல்லர்ஸ்க்கு பிரபு நடத்துற புரட்சிப் போராட்டம் மாதிரியே இருக்குங்கய்யா!

*

ஒருவன் உருவாக்குவதை, இன்னொருவன் எளிதில் தட்டிப்பறிக்கிறான் # சந்தை

*

இணையத்தில் பெண்கள் ஆண்களை எளிதாக பெயர் சொல்லி அழைக்கின்றார்கள். ஆண்கள் பெண்களை அவ்வளவு எளிதில் பெயரிட்டு அழைப்பதில்லை # நிஜமாவா!?

*

பிச்சைக்காரர்களைப் பார்த்து பரிதாபப்பட்டு அருகிலிருக்கும் நண்பரை அழைத்து “பாவம் 5 ரூவா போடுங்க”னு சொல்றீங்களே! அம்புட்டு நல்லவனாய்யா நீங்க?

*

6 comments:

vasu balaji said...

கதிரானந்தரின் பொன்மொழிகள்:))

Anonymous said...

யாருமே நமக்காக இல்லையென்று மனதில் வெற்றிடம் தோன்றும்போது, யாருக்காகவும் நாமும் இல்லையோ என்பதை உணர்ந்தால், மனதில் ஏதோ நிரம்பும்...//

பிடித்தது...

தொடருங்கள் உங்கள் த்வீட்சை...

வேர்கள் said...

கதிர்,
ஒரு பார்வையாளனாக இந்த உலகை,ஏன் உங்களையுமே நீங்கள் பார்த்துகொள்வதை சொல்லும்போது, எங்களையும் நாங்களும் ஒருமுறை
பார்த்துகொள்கிறோம்...
நன்றி

ராமலக்ஷ்மி said...

/மறதி ஓர் விடுதலை!/

மிகச் சரி.

ganesh said...

கதிர்,

அன்பு / காதல் / கோபம் /இன்பம்.......etc” எனும் உணர்வுகளுக்கான வரையறைகள், அவரவர் மனதுப்படி மட்டுமேதீர்மானிக்கப்படுகின்றன.

மிகச் சரி.

Selvaraj (Edappadi, Salem) said...

nise anna.....