Sep 26, 2011

டாஸ்மாக்



போதை சூழ் மனிதர்களிடம்
போதையற்று உழல்வதே
ஒரு போதை!

-0-

சபதத்தோடு தொடங்கும் குடி
மதுக்குப்பி தீர்கையில்
தீர்த்துவிடுகிறது சபதத்தை!

-0-

தழுவித் தஞ்சம்புகும் மது
திறக்கிறது அம் மனங்களையும்
சிலநேரம் அம்மணங்களையும்!

-0-

பசியாய் அன்பும் உணவாய் வம்பும்
அவ்வப்போது பரிமாறப்படுகிறது
மதுபான மேசைகளில்!

-0-

கூடுதலாய்ச்சேரும் மதுத்துளிகள்
ஒரேநேரத்தில் எழுப்பவல்லது
உறங்கும் கடவுளையும் சாத்தானையும்!

-0-

வரம்புகள் மீறப்படும்
மதுச்சுற்றிலும் உணரலாம்
சிறுதுளி பெருவெள்ளம்

-0-

10 comments:

மோனி said...

பெற்றேன் பேறு :-)

அசோக்ப்ரியன் said...

Super thala

தமிழன்வலை said...

படிச்சா சந்தோஷத்தில் மனசு peg peg nu அடிச்சுக்குது

everestdurai said...

"டாஸ்மாக்" அருமை

Anonymous said...

மிக நன்று ( மிதமாக இருக்கு )

vasu balaji said...

எல்லா கட்டிங்கும் சூப்பர் மேயரே. கலக்கல் கவிதைகள்னா டாஸ்மாக் காரன் கம்ப்ளெயிண்ட் பண்ணீருவான்ல:)))

Paleo God said...

சியர்ஸ்! :)

'பரிவை' சே.குமார் said...

போதைப் பிண்ணனியில் தேன் கவிதைகள்.
அருமை அண்ணா.

பழமைபேசி said...

மச்சி, கோட்டர் சொல்லேன்!

jalli said...

'baru'kkulley nalla naadu..

முதியதோர் உலகு

அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...