May 13, 2019

ஒரு சொட்டு முதிர் துயரம்





குவித்து வைத்த வெயில்
போகத்தின் உதிரும் முடிச்சு
கழுத்தினடியில் வளரும் மச்சம்
இனி கிட்டாதொரு உறைந்து கிடக்கும் முத்தம்
மலர் கொய்யும் திடநிலை மழைச் சொட்டு
குழந்தையொன்றின் கடும் பசி

இதில் ஏதோவொன்றை
இல்லையில்லை
எல்லாவற்றையும் ஒத்தது
ந்த ஒரு சொட்டு முதிர் துயரம்!

2 comments:

Malar Selvam said...

"மலர் கொய்யும் திடநிலை மழைச் சொட்டு"~~ஆலங்கட்டி மழைக்கு என்ன ரசனையான ஒரு சொல்லாடல்!!��

மதிஒளி சரவணன் said...

நேர்த்தியான சொல்லாடல்.

முதியதோர் உலகு

அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...