கீச்சுகள் தொகுப்பு - 51

குழந்தைகள் அழுதுகொண்டே எதாவது பேச வரும்பொழுதுமுதல்ல அழுகாம பேசு!” என அதட்டுவது அதிகாரத்தின் உச்சமா? அன்பின் எச்சமா!?

-

பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் விடுமுறையென்றால் அந்த நாளை எல்லோருக்குமான விடுமுறை தினம் என்பது போலவே குடும்பம் கருதுகிறது!

-

எல்லாத் தாமதங்களுக்குப் பின்னாலும் காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக அந்தக் காரணங்கள் மிகப் பிடித்தமானதாகவும் இருக்கின்றன.

-

அன்பில் நிகழ்த்தப்படும் ஒரு வன்முறைநான் எது செய்தாலும் நீ கோபப்படவே கூடாது!”

-

அடிமைப்பட்டிருப்பது குறித்து கிஞ்சித்தும் வெட்கமில்லை. ஆனால் அடிமைப்பட்டிருக்கேன் என ஒப்புக்கொள்ள மட்டும் அநியாயத்திற்குக் கூசுது!

-

வாட்ஸப்ல புத்திசாலித்தனமா ஆசைப்படுறது நம்ம Last seen தெரியக்கூடாது, ஆனால் மத்தவங்க Last seen தெரியனும் :)

-

யாராச்சும் செல்ஃபி போட்டால், அதைசெல்ஃபினு கண்டுபிடிச்சு சொல்றதை ஆகச் சிறந்த கண்டுபிடிப்பா நம்ம சனம் நினைக்குது!

-

ஐஸ் பக்கெட் சேலஞ், ரைஸ் பக்கெட் சேலஞ் மாதிரி பாஸ்வேர்டு எடுத்துட்டு "Free WiFi சேலஞ்ச்" னு ஆரம்பிச்சா கொஞ்சம் புண்ணியமாப் போவும்!

-

துணிக்கடை ஆளுயரக் கண்ணாடியில் பூதாகரமாத் தெரிஞ்சவுடனே முடிவெடுத்துட்டேன், ”இனிமே கண்ணாடி வெச்சிருக்கிற துணிக்கடைப் பக்கம் போகக்கூடாதுனு!

-

பச்சைக் கலர்ல போர்டு வெச்சுட்டாவே அதுஇயற்கை அங்காடிஆயிடும்னு..... அவங்களும் நினைக்கிறாங்க, இவங்களும் நினைக்கிறாங்க!

-

ஆசைப்படுவது என்னவோ இரண்டங்குல நாக்குதான்ஆனால் நாள் முழுக்க, ஏன் ஆயுள் முழுக்கவும் வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பதென்னவோ வயிறுதான்! #தொப்பை

-

எவ்ளோ வயசானாலும் பிறந்த நாளில் வாழ்த்தும்போது கொஞ்சூண்டு வெட்கம் பூக்குமே, அதுமட்டுமே அவர்கள் இன்னும் மிச்சம் வைத்திருக்கும் குழந்தைத்தனம்!

-

கொடும் மரணங்கள் விதைத்துச் செல்லும் துக்க வித்தை அறுத்தெறிய தலைமுறைகள் போதாது.

-

என்னவேலைசெஞ்சா உடம்பு குறையுங்கிறதைவிட, என்னசாப்பிட்டாஉடம்பு குறையும்னுதான் எல்லாருமே கேக்குறாங்க!

-

உடல் நலத்துக்கு தினமும்ஆப்பிள்சாப்பிடுறாங்களோ இல்லையோ, கையில ஒரு "ஆப்பிள் போன்" வச்சுக்கிறது அந்தஸ்த்துனு நினைக்குது சமூகம்!

-

தமிழில் நாம எதையாவது அனுப்ப, மொபைலில்அது பொட்டி பொட்டியாத் தெரிய, அதைப் படிக்க முடியாம ஆட்கள் படும் பதட்டம் இருக்கே... க்யூட்! :)

-

கூட்டத்தோடு நகரும் பெண்ணொருத்தி சூடியிருக்கும் மல்லிகை வாசமாய் மழை வாசம் வந்து போனது மனம் போல் கொஞ்சம் நிலம் எங்கேனும் குளிர்ந்திருக்கும்

-

பதின் பருவத்திற்குள் மகள் காலடி எடுத்து வைத்தபின், ஆண்டு தோறும் மகளுக்கு ஒரு வயது கூடுகையில், தந்தைக்கு இரண்டு வயது கூடுகிறது.

-

குழந்தைக்கு வித்தியாசமான பேரு சொல்லுங்கனு கேக்குறதும், அப்படியே நாம சொன்னாலும் முதல்லையே முடிவு பண்ணின பேரையே வெச்சுடுறதும்தான் இப்ப ஃபேஷன்

-

அகால மரணம் குறித்து கேள்விப்படுகையில் எங்கே, எப்படி, என்ன வயசு எனக் கேட்பது ஒரு கணம் தன்னை அதில் பொருத்தி நிம்மதி அடைந்துகொள்ளவும்தான்!

-

3 comments:

Unknown said...

Superb sir

Unknown said...

கொடும் மரணங்கள் விதைத்துச் செல்லும் துக்க வித்தை அறுத்தெறிய தலைமுறைகள் போதாது.////ஒன்று ஒன்றும் மிகவும் அற்புதமான வரிகள்.அருமை .

Unknown said...

ஒரு தொகுப்பா போடலாம்....க்யூட்