Oct 16, 2014

உத்திரவாதச் சில்லுகள்






தேன் பூச்சிகள்
ஒரு போதும்
தேன் கூட்டில்
சான்றிதழ்களைச்
சேகரிப்பதில்லை

கூடு கலைத்தோ
பெட்டியில் வளர்த்தோ
சர்க்கரைப்பாகு கலந்தோ
விற்பனை செய்பவர்களுக்குத்தான்
தேவைப்படுகிறது
பளிச்சிடும் வண்ணத்தில்
ப்யூர்
ஒரிஜினல் எனும்
உத்திரவாதச் சில்லுகள்!

-

2 comments:

ராமலக்ஷ்மி said...

உண்மைதான்:)!

Unknown said...

ம்ம்ம்ம்ம்

விதைக்கப்படும் துயரங்கள்

  நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான்.  உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...