வறுமைக்கோடு





லட்டு, ஜிலேபி
அல்லது
சர்க்கரையையேனும்
தேடி வந்திருந்த
எறும்புக் கூட்டமொன்று
வேறு வழியின்றி
ராகிவடை மேல்
மொய்த்துக் கொண்டிருந்தது

கொஞ்சம் சர்க்கரையை
கோடை மழைபோல்
வீசிவிட்டு வந்திருக்கிறேன்
வறுமைக்கோடு
கரைந்தழியுமென
ஒரு கவிதையெழுதும்
விருப்பத்தோடு!

7 comments:

ராமலக்ஷ்மி said...
This comment has been removed by the author.
ராமலக்ஷ்மி said...

அருமை.

கும்மாச்சி said...

ஆதங்கத்தில் எழுதப்பட்ட கவிதை அருமை.

கிருத்திகாதரன் said...

மிக அருமை..விருப்பமும்.

Prapavi said...

Nice

Pandiaraj Jebarathinam said...

தூவிய சர்க்கரையும்
துவண்டு போகும்
தூவியவனின் வறுமை கணக்கின்
துயரம் கேட்டால்...

Unknown said...

ம்ம்....விருப்பம் நிறைவேரட்டும்..