தீராப்பசி





காரிருள் கவ்விய
நிலவற்ற பொட்டலில்
துணையிருந்து
இருள் தின்ற
ஒற்றை விளக்கின்
திரியை
போதுமென
நசுக்கி விட்டேன்

இடைவிடாது 
துளைக்கும் காற்றில்
சுரந்து குவியும் இருளை
இனி
நான் தின்ன வேண்டும்
இல்லையெனில்
இருள்
என்னைத் தின்ன
அனுமதிக்க வேண்டும்!

-

8 comments:

Unknown said...

இருளுக்கும் ஆசை வரும் உன்னை தின்ன .. மாறி மாறி பரிமாறி கொள்ளுங்கள் ..!

Unknown said...

உங்கள் ஒளிவட்டத்தை எப்படி நசுக்க? :) இருள் தின்று வளருமது.

தினேஷ் பழனிசாமி said...

கனவைத்தானே தின்ன வேண்டும் என்று சொன்னீர்கள் ??? இப்போது இருளையுமா?

Prapavi said...

அடடா! :-)

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - இருளைப் போக்கி ஒளி வரச் செய்ய வேண்டும். இருளைத் தின்றாலும் சரி - தவறில்லை- இருள் தின்பதற்கு அனுமதிக்க வேண்டாம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

க.பாலாசி said...

நல்ல கவிதை..

'பரிவை' சே.குமார் said...

ரசிக்க வைத்தது தீராப்பசி...
வாழ்த்துக்கள் அண்ணா...

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...