கீச்சுகள் - 39



இந்த தேசத்தின் ஆகச்சிறந்த வளர்ச்சியை கொசுக்களின் எண்ணிக்கையில் உடனடியாக உணர முடிகிறது.

···

மனிதனின் சிக்கலை மனிதனும் நாயின் சிக்கலை நாயும்தான் நன்கு உணர முடியும்!

···

கச்சத்தீவை மீட்க முடியாது - மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு பதில்.
# பாஸ் அடமானம் வெச்சஇந்திய தீபகற்பத்தைஎப்ப மீட்பீங்க!

···

பயணித்த எல்லாச் சாலைகளும் நான் தெரிவு செய்ததல்ல! இடமும் வலமுமாய் பிரிந்த இடத்தில், ஏதோ ஒன்றில் திரும்பியதும் கூட!!!

···

ஊருக்கு பண்ற அறிவுரையை, ஒரு நாளைக்காவது ஆள் உயர கண்ணாடி முன்னாடி தைரியமா செய்து பார்த்துடனும்!

···

விபத்து ஒருபோதும் வசதி வாய்ப்புகளை, காதலை, அந்தஸ்தை, கதாநாயகத்தனத்தை, மிஞ்சியிருக்கும் கடமையை என எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை!

···

வீட்டுக்காரம்மா ஊருக்குப் போனா 'ஹைய்யா...ஜாலி' னு ஸ்டேட்டஸ் போடத் தெரியுது.
கருமம் 'டீ'க்கு சரியான அளவுக்கு சர்க்கரை போடத்தான் தெரியல.

···

பாலியல் கொடுமைகளுக்குபெண் / அழகு / ஆடை / கவர்ச்சிஎன பல காரணங்கள் சொல்வோர், ”அது ஆணின் கேடுகெட்ட செயல்என்பதை மட்டும் மறப்பது ஏன்?

··· 

பதிலே சொல்லாதவனிடம், ’பதில்கள் இல்லைஎன்று மட்டுமே அர்த்தமில்லை. பதில் சொல்ல வேண்டிய அவசியமற்ற நிலையும் இருக்கலாம்.

··· 

போதும் போய்விடலாம் எனத் தோன்றுகையில்.. இல்லை இருக்கலாம் எனவும் தோன்றுகிறது!

···
 
ஹமாம் சொல்ற ”10 சரும நோய்கள்ஆர்பிடெக் சொல்ற ”6 தசை நார்கள்என்னென்னனு யாருக்காச்சும் தெரியுமா? அட அவங்களுக்கேயாச்சும் தெரியுமா?

···

எதையெல்லாம் உண்மையென நம்புகிறோமோ அது அப்படி இல்லாமல் இருப்பதுபோலவே, எதையெல்லாம் பொய்யென நம்புகிறோமோ அதுவும் அப்படி இல்லாமல் இருப்பதுண்டு

··· 

திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது...” எந்தப் படமா இருந்தாலும் முதல் நாளே டிசைன் பண்ணி வெச்சுக்கிறாங்க!


···

எந்த நோய் வந்தாலும், அப்போதைக்கு அந்த நோய்தான் உலகத்தின் கொடிய நோயாக மனதுக்கு தோன்றுகிறது! :)

···

ஒரு காலத்தில்ஃபேக் ஐடிஎன்பதை, பேய், பிசாசு, பூதங்கள் தான் வைத்திருக்கும், மனிதர்கள் வைத்திருக்க மாட்டார்கள் என நினைத்தேன்! :)

···

மழைக்கு ஒதுங்குகையில் மனதுக்கு உகந்தவர்களோடு உரையாடுதலில் உணரலாம் சொர்க்கம் இப்படியும் இருக்குமென!

···

கோபப்பட்டு குழந்தைகள் முறைக்கும் தருணங்களில் கடவுளும் கூட நடுக்கம் கொள்வான்!

···

சமீப காலங்களில் இரண்டு நிகழ்கின்றன...! 1. எதையுமே நிழற்படம் எடுத்துக் கொள்வது! 2. எடுத்த நிழற்படங்களை பார்க்காமலேயே இருந்துவிடுவது!

··· 

வரவர காவிரி மாதிரி ஆயிடுச்சு தூக்கம், மகிழ்ச்சி, காசு, எழுத்து etc திடீர்னு வறண்டுடுது, திடீர்னு வெள்ளமா அடிச்சிக்கிட்டுப் போகுது!

··· 

ஒருசுதந்திரம்என்பது மட்டுமே உன்னை எல்லாத் தவறுகளுக்கும் அனுமதிக்கிறதெனில், அது சுதந்திரம் அல்ல, அதுவும் ஒருவித விலங்கு தான்! #மீள்

··· 

ஒரு வாரக்கடைசியில் ஆடி 18 ஒரு வாரக்கடைசியில் ரம்ஜான் ஒரு வாரக்கடைசியில் சுதந்திர தினம்! யாருப்பா சொன்னது ஆடி மாசம் சரியில்லாததுனு!? :)

··· 

மழை பெய்கையில் உங்களுக்கு வருவதாகச் சொல்லும் நினைவுகள், மழை பெய்யாதபோதும் எங்கள் நினைவில் வரலாம்! # மழை பெய்யாத ஊரில் வேற என்ன செய்றது!

··· 

புது டச்-ஸ்க்ரீன் போனில் எண்களை ஒத்தும்போது தவறுதலாக விழ, ’இந்த புது டச்-ஸ்கீரின் படுத்துதுங்கனு மக்கள் வெட்கப்படுறதே ஒரு அழகியல்தான்!

··· 

சர்னு சீறும் கோபத்தை சட்டுனு பிடிச்சு, கசக்கி வாயில போட்டு மென்னு எச்சிலோடு கலந்து துப்பிட்டு, வேற வேலையைப் பார்க்கனும் என்பதைத்தான் பாரதி "ரௌத்திரம் பழகு"னு சொல்லியிருப்பாரோ!? 

···


துக்குனியூண்டு புழுவிற்குத்தான் பெரிய மீன் சிக்குகிறது!

···

அவ்வப்போதுமின் வெட்டுமூலமாக, தமிழகத்தில்தான் இருக்கிறோம் என்பதை மீண்டும் நினைவூட்டத் துவங்கியிருக்கிறார்கள்.

···

வாழ்க்கையெனும் பெருங்கடனை சக மனிதர்களிடம் செலுத்தும் அன்பின் மூலமே அடைக்க முடியும்!

···

ஒரு தவறை உணர்ந்து(ம்) ஏற்றுக்கொள்ள மறுக்கும்போதுதான், வாழைமரத்தடியில் கன்றுகள் முளைப்பதுபோல அடுத்தடுத்த தவறுகள் வேகமாய் முளைக்கின்றன.

···

நெகிழச் செய்யும் இறுக்கச் செய்யும் எது ஒன்றும் தரா இன்பத்தையும் வலியையும் சுகத்தையும் சுமையையும் கலந்தும் தரும்! #அன்பு

···

ஒரு பக்கம் ஆற்றில் கடும் வெள்ளம், மறு பக்கம் குடிநீர் கேட்டு சாலை மறியல்... ஊரையும் நாட்டையும் நல்லாத்தாம்யா வெச்சிருக்கோம்!

···

தமிழ் நாட்டிய(!) உலகம் கண்டுபிடித்த, தமிழ்ப்படுத்த முடியாத அருமையான ஒரு கலைச்சொல்கெமிஸ்ட்ரி”. # 6 முதல் 60வது வரை!

···

குழந்தைகள் குழந்தைத்தனமாய் செலுத்தும் தாயன்புக்கு முன்பு, தாயே கூட சில நேரங்களில் தோற்றுப் போய்விடலாம்.

···

முடியாது’ ’முடியும்என்ற இரண்டுமே நம்பிக்கைதான். ஆனால் இரண்டும் ஒன்றல்ல!

···

5 வருசம் 10 வருசம் படிச்சு IAS ஆகி ஆட்சியர் ஆகுறதுக்குப் பதிலா, 5வது / 10வது மட்டும் படிச்சுட்டு அரசியல்வாதி ஆகிடுங்க! #யாராருக்கோ

···

பொதுவாக அவர்கள் யாரிடமும் கருத்துக் கேட்பதில்லை ஆனாலும் யாரும் அவர்களிடம் கருத்து சொல்லாமல் போவதில்லை!

···

திருமதி தமிழ்” 100 நாள் வெற்றிவிழா கண்ட நிலையில்கூட எவரும் அதை திருட்டு DVDல் பார்க்காமலிருப்பதற்கு இன்னொரு பெயர்தான்அறம்

···

ஓசில கிடைக்குதேனு ஒரே நேரத்தில் மூனு எளநி குடிப்பதைத்தான் 'காஞ்ச மாடு கம்புல பூந்தமாதிரி'னு சொல்லியிருப்பாங்களோ!?

···

இயற்கையின் பெருங்கருணைக்கு முன் மனிதன் ஒரு யாசகன் மட்டுமே!

···

சீக்கிரம் ஒரு சபதம் எடுக்கவேண்டும்இனிமேல் சபதமே போடக்கூடாதுஎன்று!

···

வன்மம் உரமாகட்டும் அன்பு விதையாகட்டும்!

···

நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் மிக அழகானதாக, நளினமானதாக இருப்பதில் "பச்சை மிளகாயும்" ஒன்று!

···

முந்தாநேத்து பொறந்த கொழந்தை ஒன்னுக்கு போறமாதிரி 4 துளி மழை அதுக்கு 7பேர் குடை #பெரியோர்களே தாய்மார்களே உங்க கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லையா

···

ஓங்கிய மரங்கள் தாலாட்ட குளிர் தாவியணைக்க மென் இருள் மெலிதாய் உரச மனம் ஒப்பும் நட்புகளோடு புரியும் உரையாடல் உன்னதம்.

···

நிரம்பியோடும் நதி பேரழகு அன்பு தளும்பும் மனம் போல்.

···

உங்கள் மீது நான் புகாரின்றி இருப்பதற்கு முன் என்மீது நான் புகாரின்றிருத்தல் அவசியப்படுகிறது!

···

சாமி பார்க்க லேட்டாகும் எனசிறப்பு தரிசனம்எனும் பெயரில் கௌரவமாக காசு பிடுங்குவதற்குப் பெயரும் லஞ்சம் தான்!

···

4 comments:

Unknown said...

இரு வரியில் வாழ்க்கை பயணப்படுகிறது ...!

Unknown said...

#”திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது...” எந்தப் படமா இருந்தாலும் முதல் நாளே டிசைன் பண்ணி வெச்சுக்கிறாங்க!#
இதில் தவறேதுமில்லை ,பலபடங்கள் டப்பாவிலே முடங்கி கிடக்கிறதே கதிர் தொடரட்டும் உங்கள் கீச்சுக்கள் !

KSGOA said...

எல்லா கீச்சுகளுமே நன்றாக இருக்கிறது......

Edhayan said...

கீச்சுக்கள் அனைத்தும் சுகமான கீதங்கள் ...