Jul 2, 2013
நானுமற்ற தனிமை!
எவர் கனவிலோ நான்
என் கனவில் எவரோ
எவர்களில் சில அவர்கள்!
***
ஏக்கமாய் கூவும் குயில்
எப்போதும் அறிவதில்லை
ஏக்கப்பிணி ஒரு தொற்றென!
***
உதிர்ந்து கிடக்கும் இறகில்
வரிவரியாய் வாசிக்கிறேன்
உழைப்பின் வரலாற்றை
***
செயல்களில்
உணர்த்திடாத
நேசிப்பையா
கவிதைகளில்
உணர்த்திடப்
போகிறோம்
***
அவசரத் தேவை
யாருமற்ற தனிமை
அது நானுமற்றதாய்!
***
சுமந்து திரியும்
மௌனங்களை
எந்த வார்த்தைக்குள்
இறக்கி வைக்க!
-0-
Subscribe to:
Post Comments (Atom)
விதைக்கப்படும் துயரங்கள்
நமக்கு வாழ்க்கை மீதிருக்கும் காதல் அலாதியானது. செய்யும் அத்தனையும் அதற்கானதுதான். உண்பது, உடுத்துவது, உழைப்பது, உறங்குவது எனும் அடிப்படைத...

-
வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந...
-
அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...
-
வலையுலக வாழ்வில் மிக நெகிழ்ச்சியான நிகழ்வு இன்று இனிதே நிறைவேறியது. சென்ற ஆண்டு கொஞ்சம் ஆசையோடு நடத்திய பதிவர் சங்கமம் கொடுத்த உற்சாகம் எங்க...
8 comments:
Nice!
அருமையான கவிதைகள் சார்
ஏக்கப்பிணி ஒரு தொற்றென!// அழகான வரி!
சுமந்து திரியும்
மௌனங்களை
எந்த வார்த்தைக்குள்
இறக்கி வைக்க!//உண்மைதான் முடியாது
கவி அருமை
அன்பின் கதிர் - கவிதை அருமை - செயல்களீல் உணர்த்த இயலாதவைகளையா நாம் கவிதையில் உணர்த்திடப் போகிறோம் - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அருமையான கவிதைகள் அண்ணா.
எல்லாக்கவிதைகளுமே அருமை.
அதுதானே ?
செயல்களில் உணர்த்த முடியாததையா.
Post a Comment