கீச்சுகள் - 33



எல்லாக் கட்சிக் கூட்டங்களிலும் சூப்பர் டூப்பர் கூட்டம். சேர் போட்டு உட்கார வெச்சு, காசு தந்து
# வாடகைத் தொண்டர்கள் வாழும் காலம் இது!

·

8 am, 12 pm, 4 pm, 9 pm, 1 am எத்தனைவாட்டி குளிச்சாலும், அடங்காம எரியுதே.
# என்னா வெயில்டா சாமீ :-(

·

ஒற்றைப் பறவை
வானில் அளக்கிறது
உறவுப் பறவைகளின்
பயணப்படா தொலைவினை.

·

கம்மஞ் சோற்றைத்தான் அமிர்தம்னு சொல்லியிருப்பாங்களோ!?

·

கர்நாடக பாஜக சட்டசபை ஆளுக எல்லாம் சேலம் சித்த வைத்திய சாலையில் கணக்கு வெச்சிருக்காங்களோ? அடிக்கடி இதே வேலையா திரியறாங்க!

·

பிள்ளைகளை அவர்களின் வயது, வளர்ச்சியைவிடக் குறைவாக அன்பெனும் பெயரால்(!) “குழந்தைத்தனமாகநடத்த முயல்வதும் குற்றமே!

·

பிள்ளைகளின் வளர்ச்சி, வயதைப் பொருட்படுத்தாமல், அன்பென்ற பெயரில், அவர்களின் நிலைக்கு குறைவாககுழந்தைகளாகபாவிப்பதும் ஒருவகை குற்றம்தான்!

·

கார் வாங்க வீடு தேடிவந்து லோன் தந்துட்டு, மாடு வாங்க லோன் தர யோசிக்கிற சமூகத்தில்தான் காபிக்கு வாங்குற பால் விலை அதிகம்னு கவலைப்படுறோம்

·

எத்தனை ரிதமாய் ஊதினாலும், அவசர ஊர்தியின் சங்கொலியை ஒருபோதும் ரசிக்க முடிவதில்லை!

·

சனிக்கிழமை பள்ளிக்கூடம் வெச்சுட்டாங்களாம், இந்தகுட் ஃப்ரைடேசனிக்கிழமை வந்திருக்கக்கூடாதானு கேலண்டரை திட்டுது எங்க வீட்டு வாண்டு!

·

 “அங்கே 2 மணி நேரம் மட்டும்தான் பவர் கட்டா?” எனக் கேட்கும் ஊர்களைப் பார்த்து சென்னைபோடா வெண்ணைஎன்கிறது.

·

ஆரம்பிக்கும் தருணத்தில் முடிவு தெரிவதில்லை. முடிவுறும் தருணத்தில் ஆரம்பம் நினைவில் இருப்பதில்லை!

·

மனசும் ஓர் இசைக் கருவியே!

·

இந்த தினத்தின் முதல் ரகசிய முடிச்சு அவிழ்ப்பு 'விடியல்'

·

வெளுத்துப்போற மசுருக்கு சாயம் பூசுறதுல காட்டும் அவசரத்தை / கவனத்தை, உளுத்துப்போற மனசைப் பாதுகாக்க ஒருபோதும் காட்டுவதேயில்லை!

·

உண்மை என்பதையும் விட, ஓங்கிக் குரல் கொடுப்பவனையே உலகம் உடனே திரும்பிப் பார்க்கிறது!

·

6.54க்கு போன கரண்ட் 7.18க்கே வந்துடுறதா? பொறுப்பில்லா EBக்கு கடும் கண்டனங்கள்!
# நடுசாமத்துல புடுங்கினா மட்டும் பொறுப்புல குறைச்சலில்லை

·

அரசியல்வாதி - பொதுஜனத்திற்கு இடையே இருக்கும் இடைவெளிக்கு நிகரானதொரு இடைவெளி, சமூகவலைதள ஆட்கள் - அதில் இல்லாதோர் இடையே நிலவுகிறது.

·

சமையல் அறையில் கரித்துணி காணாம போறதுக்கெல்லாம் CBI விசாரிக்க மாட்டாங்க என்பதைப் புரிய வைக்கமுடியாத தருணங்களைக் கொண்டதும்தான் வாழ்க்கை!

·

7 ரூபா போட்டு ஒரு கிளாஸ் மொக்கை(!) ”டீ குடிக்கிறதுக்கு, 10 ரூபா போட்டு ஒரு சொம்பு கம்மங்கூழ் தாராளமா குடிக்கலாம்!
#புத்திக்கொள்முதல்

·

வாழ்தல் இனிது. வாழ்தல் அறம். வாழ்வு தவம்.

·

குடும்பமா கிளம்பும் போது கார் டயர் பன்ச்சரா இருப்பதைக் காண கொடுப்பினை வேண்டும். #இடுக்கண் --> நகுக

·

ரொம்ப வருசங்களுக்குப் பிறகு நடு சாமத்தில் தண்ணீர் பிடிக்கும் மக்கள். #அதுவும் மார்ச் மாசமே :-(




போராடி மட்டும் என்னவாகிடப் போகிறது என்கிறீர்கள் நீங்கள்!
போராடாமல் மட்டும் என்னவாகிடப்போகிறது என்கிறார்கள் அவர்கள்!

·

இன்று பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது - செய்தி # இதுக்கும் பழக்கதோசத்துல இப்பவே போய் க்யூல நின்னுடுவாங்களே!

·

எல்லாமுமே ஒரு விடைபெறுதலின் வரைதான்!

·

குழந்தைகள் கடைப்பிடிக்கும் மௌனத்தில் பொதிந்திருக்கும் கோபம் உலகின் அதி வலிமைமிகு கோபம்

·

எதிரி விரும்புவதைச் செய்வதைவிட செய்யாமலே இருப்பதும் வீரம்!

·

இயலாமையின் முதற்கட்டம்…. கோபம், இறுதிக் கட்டம்….. சபித்தல்!

·

அழுகையும் சிரிப்பு போன்ற ஒரு வெளிப்பாடுதானே! அழுகைக்கு ஏன் இத்தனை ஒளிவு மறைவு தேவைப்படுகிறது!

·

மூனு பெக்-லிருந்து நாலு பெக்-க்கு மாறுவது வீரமல்ல, மூனு பெக்கிற்குப் பதில் இரண்டோடு எழுந்துவிடுவதுதான் வீரம்!

·

8 மணிக்கு போக வேண்டிய கரண்ட் 8.03க்கு போகுது. கூடங்குளத்துல நா.சா. கம்பெனிக்காரங்க கரண்ட் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களோ?

·

Mobile, SMS, Gtalk, Facebook, Twitter, Skype, WhatsApp இன்னும் எத்தனையெத்தனையோ எல்லோருக்குமிடையே, எனினும் மௌனமே பேசுகிறது பல உறவுகளில்

·

மனிதன் அதிகமாக அஞ்சும் ஒரு சக உயிரினம்மனிதன்

·

அறிமுகங்கள் முடிந்து, ஆர்வங்கள் பகிர்ந்து, எல்லாம் கரைந்த ஒரு நற்பொழுதில்(!) எளிதாய் ஆரம்பிக்கிறார்கள்பொறணிபேச!

·

உள்ளங்காலில் ஒரு கொசு கடித்துக் கொண்டிருக்கிறது. ரொம்பவும் பஞ்சத்தில் அடிபட்ட கொசு போல! :)

·

"அதெல்லாம் டைவர்ஸ் ஆயிருச்சுங்க" வெகு சகஜமாக புழங்குகிறது கிராமங்களிலும்.

·

கெடா விருந்துக்குக்கு அழைக்கப்பட்டிருக்கும் தினம் ஆசிர்வதிக்கப்பட்ட தினமா இல்லையா!? நீங்களே சொல்லுங்க!

·

காலையில் சமையலறையில் கூடமாட ஒத்தாசை செய்தால், அன்றைக்கு மதிய சோறு கூடுதல் சுவையாய் இருக்கின்றது #அனுபவதானிப்பு

·

சுமக்க முடியாததை ஏன் இறக்கி வைக்கக்கூடாது?

·

குடிஆரம்பத்தில் சுவாரஸ்யம், பின்னர் அது பழக்கம், ஒரு கட்டத்திற்குப் பிறகு அது நோய்!



நமக்கு நாமே தரக்கூடிய எளிய பரிசுமௌனம்

·

நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே!?” எனும் பீடிகைகளில் தப்பா நினைக்க ஏதோ ஒன்று இருக்கவே செய்கின்றது!

 ·

இதென்னடாது காலண்டர்ல பிப்ரவரி 28ம் தேதிய கிழிச்சா, மார்ச் ஒன்னாம் தேதி வருது. #நடுவுல கொஞ்சம் தேதியக் காணோம்

-


3 comments:

Venkat said...

"அழுகையும் சிரிப்பு போன்ற ஒரு வெளிப்பாடுதானே! அழுகைக்கு ஏன் இத்தனை ஒளிவு மறைவு தேவைப்படுகிறது!" - நல்ல கேள்வி! ஏன் என்றால் அழுகை ஒரு மனிதனின் பலவீனம் என்று சமூகத்தால் பார்க்கப்படுகிறது! இது என் அனுபவம்! அனைத்து கீச்சுக்களும் நன்று!

குரங்குபெடல் said...

'மூனு பெக்-லிருந்து நாலு பெக்-க்கு மாறுவது வீரமல்ல, மூனு பெக்கிற்குப் பதில் இரண்டோடு எழுந்துவிடுவதுதான் வீரம்! '


எப்டி அண்ணே . .

இப்டி எல்லாம் . . .




அனைத்தும் அருமை

குட்டிபிசாசு said...

சூப்பரப்பு