காத்திருத்தல்






வெளுத்த வானம் சுமக்கும் மௌனம்
பசி கொண்ட மிருகமாய் வறட்சி
நம்பிக்கை நூலில் சிக்குண்டு
நகரும் நாட்களோடு விவசாயி...


-0-


டைவிடாத அடைமழை
வற்றிப்போன வாடிக்கையாளன் வருகை
திறந்து போடப்பட்ட வர்ணச் சட்டிக்குள்
கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்...

-0-


காற்றில் வரும் சாம்பார் வாசம்
களித்துச் சிரிக்கிறது விழித்த பசி
மீந்து போன உணவுகளோடு விழும்
எச்சில் இலைக்காக பிச்சைக்காரன்...

-0- 


-------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------

32 comments:

க.பாலாசி said...

//நம்பிக்கை நூலில் சிக்குண்டு
நகரும் நாட்களோடு விவசாயி...//

வறுமையின் ஆற்றில் எதிர் நீச்சலடித்தபடி...

//திறந்து போடப்பட்ட வர்ணச் சட்டிக்குள்
கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்...//

மழை வேண்டி வறண்டிருக்கும் மண் குவியலாய்...

//மீந்து போன உணவுகளோடு விழும்
எச்சில் இலைக்காக பிச்சைக்காரன்...//

பசியின் விளிம்பில் தொங்கிகொண்டிருக்கும் விடையில்லா கேள்வியாக...

கவிதை அருமை என்பதைவிட எழுத்தாளுமை என்று சொல்வதே சிறந்தது.

பழமைபேசி said...

100/100 அருமை!


//இடுகை பற்றிய//

அது!

//வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.//

ஒப்புதலை அமுக்க வேண்டும்... ஒப்பமுக்குங்கள்! இஃகிஃகி!!

மணிஜி said...

எனக்கு மூன்றாவது மிகவும் பிடித்தது..மூன்றாவது ஓட்டை போட்டேன்

பிரபாகர் said...

எனக்கு பிடித்த யதார்த்த கவி தண்டோரா அண்ணன் சொன்னது போல் யாவும் அருமை.

//கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்...
//

//களித்துச் சிரிக்கிறது விழித்த பசி//

மிகவும் அற்புதமான வரிகள்...

ஓட்டும் போட்டாச்சு.....

பிரபாகர்.

அகல்விளக்கு said...

//மீந்து போன உணவுகளோடு விழும்
எச்சில் இலைக்காக பிச்சைக்காரன்...//

வார்த்தைக்கோர்வை...

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பாலாஜி
(பின்னூட்டமும் கவிதையாக)

நன்றி @@ பழமைபேசி
(ஒப்பமுக்கியதற்கு நன்றி மாப்பு)

நன்றி @@ தண்டோரா
(வாக்குக்கு நன்றி)

நன்றி @@ பிரபா
(வாக்குக்கு நன்றி)

நன்றி @@ அகல் விளக்கு

ஆரூரன் விசுவநாதன் said...

ஒவ்வொருவரும், ஒவ்வொன்றுக்காய் காத்திருக்கிறோம்.

காத்து,காத்து......

குரு said...

வார்த்தைகள் இல்லை. ஏற்றுக்கொள்வீர்

http://ngprasad.blogspot.com/2009/08/blog-post_04.html

vasu balaji said...

தண்டோராக்காப்புறம் நல்லாருக்கு கதிர் என்ற என் பின்னூட்டத்தைக் காணாமல் காத்திருக்கிறேன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்றாக இருக்கிறது கதிர்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஆரூரன்
(காத்திருப்போம், வேறென்னங்க செய்ய)

நன்றி @@ குரு
(தங்கள் அன்பிற்கு இதயம் நிறைந்த நன்றிகள் குரு)

நன்றி @@ வானம்பாடிகள்
(அண்ணா, நானும் தான். ஆனால் வரலையே அண்ணா)

Jerry Eshananda said...

ஈரோட்டில் வசிக்கும் "வார்த்தை நெசவாளியே" பின்னுகிறீர்கள்.

நிலாமதி said...

காத்திருத்தல் ..கவி வரிகள் அழகு .
உங்கள்க்விதைக்காக் காத்திருக்கிறோம். நன்றி.

Rekha raghavan said...

கதிர் சும்மா புகுந்து விளையாடி இருக்கீங்க வார்த்தைகளோடு. கவிதையை படித்து முடித்து நீண்ட நேரம் கனத்த மனதுடன் வெறுமனே உட்கார்ந்திருந்தேன். அருமை அருமை. வாக்கு பதிந்த கையோடு...

ரேகா ராகவன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிரின் இன்னொரு நெஞ்சை உருக்கும் படைப்பு.

எடுத்துக்கொண்ட விசயத்திற்குள் உங்கள் வார்த்தை விளையாட்டு அசத்துகிறது. தொடருங்கள்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஜெரி
(வார்த்தை நெசவாளி - ரசித்தேன்)

நன்றி @@ அசோக்

நன்றி @@ நிலா

நன்றி @@ ராகவன்
(மனது கனத்ததை கௌரவமாக கருதுகிறேன்)

நன்றி செந்தில்
(தொடரும் பாராட்டே என்னை உந்துகிறது செந்தில்)

thamilmullai said...

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -3

காமராஜ் said...

//திறந்து போடப்பட்ட வர்ணச் சட்டிக்குள்
கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்...//

aaha super

ப்ரியமுடன் வசந்த் said...

//கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்...//

//பசி கொண்ட மிருகமாய் வறட்சி//

உவமைகள் அருமை கதிர்....

Admin said...

நல்ல கவிதை..... இரசித்தேன்.

பித்தனின் வாக்கு said...

// இடைவிடாத அடைமழை
வற்றிப்போன வாடிக்கையாளன் வருகை
திறந்து போடப்பட்ட வர்ணச் சட்டிக்குள்
கெட்டித்துப்போன தூரிகையாய் விலைமகள்... //
நாட்டுல பஞ்சம் வராத ஒரு விசயம் இதுதான், இப்ப அதுக்கு கூட பஞ்சமா? அடக் கடவுளே.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ காமராஜ்

நன்றி @@ வசந்த்

நன்றி @@ மாதவராஜ்

நன்றி @@ சந்ரு

நன்றி @@ பித்தனின் வாக்கு
(கவலைப்படாதீங்க வெட்டாப்பு விட்டா பஞ்சம் முடிஞ்சுரும்)

கலகலப்ரியா said...

ஒவ்வொரு வரியும்.. அருமை..! பிரமாதம் போங்க..! (தாமதமாக வந்ததுக்கும்.. தாமதித்த வாக்குக்கும் மன்னிச்சிடுங்க..)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பிரியா
(என்ன பெரியவார்த்தையெல்லாம் சொல்லிட்டு)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஸ்ரீ

தேவன் மாயம் said...

லேட்டா வந்தாலும் ஒரு நல்ல கவிதை படித்த திருப்தி!

vasu balaji said...

பாராட்டுகள் கதிர். விகடன் தலைவாசலில்
http://youthful.vikatan.com/youth/Nyouth/kathir01102009.asp

Anonymous said...

தேர்ந்தெடுத்த முத்துக்களாய் ஒவ்வொரு கவிதையும் ஆனால் எல்லாம் உண்மை வலியறிந்து கோர்த்து இருக்கிறீர்கள் வார்த்தையை....

ஈரோடு கதிர் said...

நன்றி @@ தேவன் மாயம்

நன்றி @@ பாலா அண்ணா
(இப்பொழுதுதான் பார்த்தேன்)

நன்றி @@ பிரியமுடன் பிரபு

நன்றி @@ தமிழ்

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமை நண்பா

ஈரோடு கதிர் said...

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்

Unknown said...

வாழ்க்கை வலிகள்,ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி........