Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Apr 11, 2023

பலரை இழிவு செய்து உணர்த்தப்படும் மனிதாபிமானம் கொடூரமானது

சிலருக்கு இந்தப் பதிவு பிடிக்காமல் போகலாம். அவர்கள் மனம் அமைதியுற முன்னதாகவே வேண்டிக்கொள்கிறேன்.

* மதுரையிலிருந்து இரவில் காரில் பயணம் துவங்கவுள்ள நிலையில் மகள் கழிவறை செல்ல வேண்டுகிறாள். அனுமதிக்க மறுத்து தந்தை அழைத்துச் செல்கிறார். வழியில் மிக மோசமான விபத்தைச் சந்திக்கிறது அந்தக் கார். இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். அம்மா மற்றும் ஓட்டுனருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. மற்ற யாருக்கும் எந்த முதலுதவிகூட அளிக்கப்படவில்லை. ஆபத்தான நிலையில் இருக்கும் அம்மாவை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கிருக்கும் மருத்துவர் பணிக்கிறார். சுமார் காலை 8 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அங்கிருந்து புறப்படுகின்றனர். வழியில் உடல் நிலை மோசமடைகின்றது. ஆம்புலன்ஸ் நிறுத்தப்படுகின்றது. தாய் இறந்து போகிறார். மீண்டும் ஆம்புலன்ஸ் மதுரை நோக்கி புறப்படுகின்றது. அவர் இறந்ததை உறுதிப்படுத்த வழியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையை அணுக, அங்கிருக்கும் மருத்துவர் உறுதிப்படுத்துகிறார். அப்போது அந்தப் பெண் உதவிசெய்ய வந்த நாயகனிடம் இந்தியில் 'கழிவறை எங்கு இருக்கு?’ என்று கேட்கிறார்.
* தீபாவளி தினத்தில் காலை 11 மணி சுமாருக்குத்தான், C2 பெருங்குடி காவல் நிலையத்தில் மாமூலாக வந்த ஸ்வீட் பாக்ஸ்கள் பங்கு பிரிக்கப்படுகின்றன. பிணம் ஒன்றினை விமானத்தில் நேரடியாக அனுப்ப முயன்ற ஒரு கும்பலை விசாரிக்க வேண்டிய சூழலில் கைதி ஒருவரை ஆடிப் பாடவிட்டதோடு காவல்நிலையத்தையே ஆடவிடுகிறார் இன்ஸ்பெக்டர்.
* உடற்கூறாய்வு முடிந்து உடலை ஒப்படைக்கும்போது பிணவறை ஊழியர் ”தீபாவளி பார்த்துக் கவனிங்க!” எனத் தலையைச் சொறிகிறார். நாயகனிடம் காசு இல்லை, நாயகனின் நண்பனிடமும் காசு இல்லை, அம்மாவின் சவத்தின் முன்னே குழந்தை உண்டியலை உடைத்து காசை அள்ளிக்கொண்டு வந்து தர, அந்த ஊழியர் அதை அப்படியே இரண்டு கைகளாலும் வாங்கிக் கொள்கிறார்.
Ayothi (அயோத்தி) திரைப்படத்தில்தான் மேலே குறிப்பிட்ட காட்சிகள் வருகின்றன.
** குறிப்பிட்ட முதற்காட்சியில் இரவில் ரயில் நிலையத்திலிருந்து காலை சுமார் ஒன்பது மணி வரைக்கும் அந்தப் பெண் சிறுநீர் கழிக்காமல் (சாட்சிக்கு... அப்பா முந்தையை இரவில் மகள் கேட்டதை நினைத்துப் பார்க்கிறார்) இருந்திருக்கிறார் என ஒருவேளை உணர்த்த முயன்றதாக இருந்தால் அது இயல்பான சென்டிமென்ட் வகை அல்ல, அந்தப் பாத்திரத்தின் மீது கொடூரமான பச்சாதாபத்தை திணிக்க முற்படும் வக்கிரமான சென்டிமென்ட் மட்டுமே!
** தீபாவளி தினத்தன்று காவல் நிலையத்தில் ஸ்வீட் பாக்ஸ்கள் பங்கு பிரித்தல், இன்ஸ்பெக்டர் கொளுந்தியாவுக்கு பங்கு, கைதியை அழைத்து காலை நேரத்தில் ஆடிப்பாட விடுவதெல்லாம் எதன் பொருட்டு இந்தக் கதையில்? தன்னை அடித்துவிட்டதாக ஒரு கம்பவுண்டர் புகார் தெரிவித்த பிறகும், எந்த அலைக்கழிப்பு இல்லாமல் தங்கள் கடமையை(!) காவல்துறை செய்ததுதானே. 04.11.2021 காலகட்டத்திலும் சிக்கலான ஒரு கேஸ் தொடர்பான ஐந்து பேரையும் காவல் நிலையத்தில் அமர வைத்துக்கொண்டே இன்ஸ்பெக்டர் அந்த ஆட்டம் போடுகிறார் என்பதன் மூலம் இயக்குனர் சொல்ல வருவது என்ன?
** பிணவறை உள்ளிட்ட சில இடங்களில், ஊழியர்கள் 'பார்த்து செலவுக்கு கொடுங்க!’ என்று தலை சொறிவதோ அல்லது சில இடங்களில் வற்புறுத்தி வாங்குவதோ அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதுதான். ஆனாலும் அம்மாவின் பிணத்தின் முன்னே உண்டியலை உடைத்து கைகளில் பணத்தை அள்ளிக்கொண்டு வந்து ஒரு குழந்தை கொடுப்பதை இரண்டு கைகளிலும் ஏந்திக்கொள்ளும் அளவுக்கு அவர்களெல்லாம் மனிதாபிமானம் இல்லாதவர்களாக இருக்கவே மாட்டார்கள். இந்தக் காட்சியை வைக்க எவ்வளவு பெரிய கல் நெஞ்சம் வேண்டும்!
2011ம் ஆண்டில் எழுத்தாளர் மாதவராஜ் எழுதிய 'அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்' எனும் உண்மைச் சம்பவ பதிவில் திரு.சாமுவேல் ஜோதிக்குமார், திரு.சுரேஷ்பாபு ஆகியோர் செய்த உதவியை அடிப்படையாகக் கொண்டுதான் (களவாடி) திரைக்கதை அமைத்துள்ளனர். (பதிவு இணைப்பு முதல் பின்னூட்டத்தில்)
அந்தப் பதிவைப் படிக்கும்போதே மனம் கனத்துப்போகும், கண்ணீர் துளிர்க்கும். அதில் பின்னூட்டமிட்ட பலரும் அந்த மனிதநேய உதவியில் நெகிழ்ந்துருகியிருக்கின்றனர். யாரென்றே அடையாளப்படுத்தப்படாத வினோத் ஸ்ரீவத்சவா குடும்பத்திற்கு சாமுவேல் ஜோதிக்குமார், சுரேஷ்பாபு ஆகியோர் பலவகைகளில் முயன்று உதவிவிட்டு, “தோழா! தாங்க முடியல” என்று குரல் உடைந்து போனது எத்தனை உருக்கமானது!
குறிப்பாக இந்த நிகழ்வுகள் //“நீங்க யாரும் சாப்பிடல. தயவு செய்து விமானத்தில் கொடுக்கும் ஸ்னாக்ஸையும், டீயையும் சாப்பிட வேண்டும்” என தோழர் சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டிருக்கிறார் . அதற்குமேல் விருந்தினர்கள் செல்லமுடியாத பகுதி வந்ததும், மூத்த மகள் மோனிகா சட்டென்று சாமுவேல் ஜோதிக்குமாரின் கால்களில் விழுந்து ஓவென்று வெடித்து குலுங்கியிருக்கிறார். வினோத் ஸ்ரீவத்சவா சுரேஷ்பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ? நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” என்று கதறி அழுதிருக்கிறார். ஏர்போர்ட்டில் இருந்த அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து உறைந்துபோக, சாமுவேல் ஜோதிக்குமார் சுதாரித்து, அவர்களை எழுப்பி, “இதுல என்ன இருக்கு சார். எங்களால் இதுதான் முடியும். உங்க துயரம் அவ்வளவு பெரியது. நாம எல்லாம் மனுஷங்கதானே” என்று சொன்னாராம். வினோத் ஸ்ரீவத்சவா கண்ணீர் பெருக விடைபெற்றிருக்கிறார்.//
படத்தின் நோக்கம் என்ன...?
மொழி தெரியாத இடத்தில் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது, கடும் இழப்பைச் சந்திக்கும்போது மனித நேயத்தோடு உதவ வேண்டும்... இதைத்தானே படம் வலியுறுத்துகின்றது.
அந்தக் குடும்பத்தலைவனை அநியாயத்திற்கு வில்லன் ஆக்காமல், படம் நெடுகிலும் கம்பவுண்டர், இன்ஸ்பெக்டர், பிணவறை ஊழியர், மருத்துவக்கல்லூரி டீன் வீட்டு செக்யூரிட்டி, ஏர்-கார்கோ ஆபிஸர் என்று அத்தனை பேரையும் அல்பமான மனிதர்களாக்காமல் அந்தப் பதிவில் கடத்திய உணர்வை காட்சிப்படுத்தலில் சிறப்பாக கடத்திவிட முடியாதா என்ன?
இலங்கையில் நான் பாஸ்போர்ட் தொலைத்தபோது, விமான நிலையை காவல் நிலையத்தில் இருந்த ஒரு சிங்களக் காவலர் தன்மையோடு அனைத்து உதவிகளையும் செய்து, செல்ஃபோன் எண் கொடுத்து மேலும் உதவிகள் தேவை என்றால் அழையுங்கள் என்றார். கொழும்பு இந்திய தூதரகத்தில் காவல் பணியில் இருந்த மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஒரு மத்திய படை காவலர் மிகுந்த அன்போடும் கனிவோடும் என்னிடம் நடந்துகொண்டார். கோரோனா காலத்தில் மாவட்டம்விட்டு மாவட்டம் தாண்ட முடியாத கெடுபிடி இருந்தபோது, மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கொல்கத்தாவில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் தனிப்பட்ட முறையில் ரிஸ்க் எடுத்து ஒரு ஐபிஎஸ் அதிகாரி அனுப்பி வைத்தார். மனிதர்களிடமிருந்து மனிதம் அப்படியொன்றும் மங்கிப்போய்விடவில்லை.
இந்தக் கதை முற்றிலும் கற்பனையாக இருந்திருந்தால் மனம் உருகி அடடா என்றிருக்கலாம். இப்போதும் மனம் உருகாமல் இல்லை.
’மொழி தெரியாத இடத்தில் இழந்து தவிப்போர்’ குறித்து சசிக்குமார் இரண்டு முறை பேசும் வசனம் அத்தனை தரம். எவரையும் உலுக்கக்கூடிய ஒன்று. அந்த மகள் பாத்திரத்தில் மிகச் சிறப்பானதொரு நடிப்பின் மூலம் அந்தப் பெண் வென்றெடுக்கிறார். மேலோட்டமாக ரசித்துக் கடக்க வேண்டுமென்றால் நல்ல படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நடந்தவை நடந்தவிதமாக மட்டுமே இருந்து, திணிப்பு காட்சிகளும் செயற்கையான சென்டிமென்ட் காட்சிகளும் இல்லாமல் இருந்திருந்தால் தரமான உலகப்பட வரிசையில் வைக்க வேண்டிய கதைதான்.
ஆனால் உண்மைச் சம்பவம் ஒன்றின் வழி நெடுகிலும் மனிதர்களைக் கோரமாக்குவதன் நோக்கம் மட்டும் புரியவேயில்லை. ஒரு மனிதாபிமானத்தை உயர்த்திக்காட்ட பலரை இழிவு செய்யும் உள்நோக்கம் மிகக் கொடூரமானது.

Jan 9, 2023

உணர்தலும் உணர்ச்சிகளும் சார்ந்த இடம்

 ஒரு புத்தகம் இப்படியும் செய்யுமா என்ற பிரமிப்பின் உணர்வால் உந்தப்பட்டு இதனை எழுதுகிறேன். கடந்த சில வருடங்களாக உங்கள் எழுத்துடன் பயணிப்பதால், அதனால் பயன் பெற்றதால், பண்பட்டு வருவதால், புத்தகம் கிடைத்தபோதே "திரையெனும் திணை" மிகுந்த ஆவலை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் வாசிப்பின் ஊடேயும் வாசிப்பின் முடிவிலும் இப்படியொரு ஆசுவாசம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. எனவே இதை அனுபவப் பகிர்வு என்பதையும் தாண்டி "நன்றி” செலுத்தும் முகமாக எடுத்துக் கொள்ளவும்.



உங்கள் புத்தகம் என்ற உற்சாகத்துடன் வாசிக்க துவங்கினேன். சில பக்கங்கள் கடந்த நிலையில், அலையடிக்கும் கடல் போல மனம் ஆர்ப்பரிக்கத் துவங்கிவிட்டது . கிளம்பிய எண்ணங்களை எங்காவது கொட்ட வேண்டும் எனத்தோன்றியது. எழுதத் துவங்கினால், பல பக்கங்கள் நீளும்.

நினைவு அடுக்குகளில் மறைந்தவை, மறைத்தவை, உறைந்தவை என எல்லாவற்றையும் என் முன்னே இழுத்து விட்டது இந்தக் கட்டுரைகள்.
மிகவும் அசௌகரியமாக உள்ளது. புதைக்கப்பட்ட நினைவுகள் மீண்டால் வரக்கூடிய திணறலை என்ன செய்வது எனத் தெரியாமல் உங்களிடம் இறக்கி வைக்கிறேன். என் வார்த்தைகள் பல பக்கங்கள் நீளலாம். உங்கள் நேரத்தை விரயம் செய்கிறேனோ என்ற எண்ணம் என்னை தடுக்கவும் செய்கிறது. அதைப் புறந்தள்ளி, இளைப்பாற இடம் தேடி வேறு வழியின்றி தொடர்கிறேன்

’வேட்கையோடு விளையாடு’ வாசிப்பின் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது என்றால், ’திரையெனும் திணை’ - உணர்தலின் அடுத்த நிலைக்கு அழைத்து வந்துள்ளது. வேட்கையோடு விளையாடு சுயநேசிப்பை சொல்லிக் கொடுத்தது. அதற்குண்டான வழியில் பயணிக்கும்போது, சுய நேசிப்பிற்கு சுய மன்னிப்பு தேவை என்று நான் புரிந்து வைத்திருந்தேன். இதனைப் புரட்டி போட்டுள்ளது ’திரையெனும் திணை’.

பதிமூன்று ஆண்டுகளாக உள்ளே வதைத்துக் கொண்டிருந்த ஒரு குற்ற உணர்ச்சி - என்னில் சூழ் கொண்ட ஒரு ஜீவனை கருவிலேயே அழித்தது. அந்த நினைவு வரும்போதெல்லாம் பிறக்காத அந்த குழந்தைக்காக அழாமல் இருக்க முடியாது. கணவரும் நானும் இணைத்து எடுத்த முடிவெனினும், அவரது காரணம் வேறு, எனது காரணம் வேறு. இருப்பினும் நான் மறுத்திருந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டிருப்பார் என்ற குற்ற உணர்ச்சி இருந்து கொண்டே இருந்தது. ’வினாக்களற்ற விடைகள்’ வாசிக்கும்போது நினைவூட்டப்பட்ட அந்தக் குற்ற உணர்ச்சி மீண்டும் அழச்செய்தது. ஆனால் இதுவே அந்தச் சம்பவத்திற்காக, நான் சிந்தும் கடைசிக் கண்ணீராய் இருக்கும் என்பதை கட்டுரையின் முடிவில் உணர்ந்தேன்.

’நியாயமான காரணங்களால் தன் கனவில் உறுதியாக நிற்கும் ஒரு பெண் தன் கருவை கலைக்க விரும்பினால் அது அவரின் உரிமை’ - இந்தத் தவறுக்கு எனக்கு மன்னிப்பே கிடையாது என்று நான் என்றோ என்னுள்ளே பதிய வைத்திருந்ததை, நடந்த சம்பவத்தில தவறு எதுவுமில்லை என்று உணர வைத்தது மேற்குறிப்பிட்ட வரிகள். எப்போதாவது கீறி ரணப்படுத்தும் அந்த கூர்நினைவினை வேருடன் பிடுங்கி தூர வீசி விட்டேன் .

இத்தனை ஆண்டுகளாக என்னை நானே மன்னிக்க முடியாத ஒரு நிகழ்வு - குற்றமே இல்லை - என்பதை உணர்ந்த அந்த நொடியினை எப்படி எழுத்தில் சொல்வதென்று தெரியவில்லை.

அதே கட்டுரையில், ’அரை நூற்றாண்டுக்கு முன்பாக இயற்றப்பட்ட சட்டத்தை அப்படியே வைத்து கொண்டு மௌனம் காத்திருக்கிறோம்’ - சட்டக்கல்லாரி பாடத்திலும் சட்டசபையிலும் வைக்க வேண்டிய ‘Subject’.

ஒரு கட்டுரை மட்டுமில்லை, பல கட்டுரைகள் அதனதன் போக்கில், எனது புரிதலின் அடிப்படையில் ஒவ்வொரு வகையில் என்னைச் சுத்திகரித்துள்ளன.

’குடும்பம் விரும்புவதையே அந்த வீட்டுக்கு வந்த மருமகளும் விரும்ப வேண்டும் என்பதை ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் தெளிவாக, அழுத்தம் திருத்தமாக உணர்த்தி வெகு காலம் ஆகிவிட்டது’ - என் இருபதுகளும் இந்த வரியில்தான் ஆரம்பித்தது. அப்போது ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு முகத்தினை வைத்துக்கொண்டதெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றது. ஒருகட்டத்தில் நிஜ முகமே மறந்தும் போனது. காலமும், சூழலும், கிடைத்த வாய்ப்பும், எடுத்த முயற்சிகளும் பலவற்றை மாற்றியது என்னளவில் வரமே.

நினைவு வரத்துவங்கிய பால்ய காலத்தில் தாத்தா பாட்டி வீட்டில் சில ஆண்டுகள் வளர்ந்தேன். என் தாத்தாவின் குரலைவிட பாட்டியின் குரலே எப்போதும் சத்தம் அதிகமாயிருக்கும். பாட்டி வைத்ததுதான் சட்டம். அந்தப் பாட்டியின் மகனான என் அப்பா - நல்ல 'அப்பா' மட்டும்தான். அப்பா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், அவர் அம்மாவுக்கு தந்த தழும்புகளை நினைவுபடுத்தினால், உள்ளே கசியும் ரத்தத்தின் வாசம் இப்போதும் நாசியை நெருடும்.

எப்போதும் தன் அம்மா, அப்பாவிடம் கையில் கிடைத்ததில் அடி வாங்கி அலறுவதை பார்த்து வளர்ந்த என் கணவரிடம் அதன் சாயல் எப்போதும் வந்ததில்லை.

பாட்டி, அம்மா, மாமியார், நான் இன்னும் நெருக்கத்தில் உள்ள பல 'மருமகள்'களை நினைவுக்குக் கொண்டுவந்து அலசுகிறேன். என் கதை இப்போது நன்றாகத்தானே போய்க்கொண்டுள்ளது, எதற்கு இந்த வீண் ஆராய்ச்சி எனத் தோன்றலாம் .

என் மகனும் சில வருடங்களில் ஒரு பெண்ணிற்கு வாழ்க்கை துணையாய் மாறுவான். ஒரு அம்மாவாக ஒரு பெண்ணாக ‘சக மனுஷியின் உரிமையை’ இப்போதிருந்தே அவனுள் பதிய வைக்க வேண்டும். ’The Great Indian Kitchen’ பார்க்கும்போது தோன்றாத இந்த எண்ணத்தை, ’அவர்களுக்கு பெயர்கள் தேவையா?’ ஆழமாக விதைத்துள்ளது.

ஆண் குழந்தைக்கு ஒரு அம்மா எப்படி இதையெல்லாம் புரிய வைக்க முடியும் என்று எனக்கிருந்த பெரும் சவாலிற்கு கண்டிப்பாக இப்புத்தகம் துணை நிற்கும் .

திரைப்படங்கள் 'பாடம்' என்றால், அந்த திரைப்படத்தின் மைய கருத்தை நுணுக்கமாக மனதிற்கு கடத்தும் உங்கள் கட்டுரைகளே எனக்கு ’ஆசான்’.

’உறவுகள் இணைந்திருக்க ஆயிரம் நேச இழைகளை நெய்தாலும், விலகி இருக்க ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆயிரமாயிரம் காரணங்கள், நிலைப்பாடுகள் உண்டு’ - இந்த வரிகளைக் கட்டுரையிலிருந்து தனித்து எடுத்து சிந்திக்கிறேன். சங்கடமும் சச்சரவும் உள்ள இடங்களில் பொருத்திப் பார்க்கிறேன். பக்கமும் தூரமுமாய், ஒட்டியும் ஒட்டாமலுமாய் உள்ள உறவுகளின் நிலையினைப் புரிய வைத்த வரிகள். எதிர் தரப்பின் நியாயங்களும், அவர்தம் சூழல்களும் இப்போது விளங்குகிறது. மனதால் விலகி இருந்தாலும் அந்த உறவுகளின் மேல் புதிதாய் பிரியம் மலர்கிறது.

முப்பதுகளின் பிற்பகுதியில் கணவரை இழந்த அம்மாவிற்கு மறுமணம் செய்து வைக்க நினைத்த ஒரு மகளின் முகம் மனதை நிறைத்து விழிகளில் நீர் திரையிட வைத்தது - துணை நலம் சேறல்.

வெளிநாட்டிலிருந்து அழைத்த குடும்ப உறவு, சாணம் கொண்டு வாசல் மெழுகியது, பலகாரம், அன்றைய உணவுப்பட்டியல் என சின்னச்சின்ன விஷயங்களைக்கூட கேட்டு தெரிந்து கொண்டார். எப்போது பேசினாலும் அவர் அப்படித்தான். அவரது விசாரணை அவ்வப்போது சலிப்பளிக்கும். அந்தச் சமயம் என் மனநிலையை பொறுத்து அந்த விசாரணைகளை அக்கறை அல்லது அதிகாரம் என்று எதோ ஒரு பட்டியலில் சேர்த்து விடுவேன். ஆனால் அவருடன் பேசி முடித்த சில மணி நேரங்களில் இந்தக் கட்டுரையை வாசிக்க வைத்ததுதான் காலத்தின் கணக்கோ என்னவோ?

’குடும்பத்தை விட்டு விட்டு தனித்து போவோருக்கு தம்மையும் அறியாமல் ஒரு பதட்டம் இதயத் துடிப்பினூடே கலந்திருக்கும். அதை அவ்வளவு எளிதில் தணித்து விட முடியாது. அதை எந்தக் கருவி கொண்டும் அளக்கவும் முடியாது’ - இந்த வரிகளை வாசித்து முடிக்கவும், அத்தனை விசாரணைகளுக்கும் பின்னாலிருந்தது ’எது’ என்று தெளிந்தது. மனதின் ஒரு ஓரத்தில் இருந்த எண்ணக் கசடை துவைத்து காயப்போட்டது ’Pathemari’ குறித்து பேசும் ’துவைக்காத சட்டை’.

இதே கட்டுரையில் ’அப்பா எனும் வாசனையை...’ இந்த வார்த்தைகளை விட்டு நகர முடியவில்லை. ஏனெனில் என் அலமாரியில் யாருக்கும் தெரியாமல் அப்பாவின் வாசத்தை ஒளித்து வைத்துள்ளேன்.

பிரிவின் வாதைக்கு விலையேது? பிரிவை நினைத்து எத்தனை அழுதாலும் , எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வற்றாதுபோல. பிரிந்தாலும் அவர்கள் மேல் கொண்ட பிரியம் ஊறி கொண்டே இருப்பதாலோ என்னவோ.

’PAD MAN’ திரைப்படத்தைச் சொல்லும் கட்டுரையில், ஒரு தலைமையாசிரியரின் அணுகுமுறையை குறிப்பிடும் போது - ’அந்த மொழி சரி, தவறு என்று பார்த்த சில நிமிடங்களில் நாம் தீர்மானிக்க முடியாது’ - இந்த ஒரு வரி அந்த தலைமை ஆசிரியரின் மேல் எந்த நிழலும் விழாமல் நிதானிக்க வைக்கிறது. ஒரு இடம் நோக்கி பயணிக்கையில் வழியில் காணும் ஒரு மலையின் அழகோ, ஆற்றின் போக்கோ சில வினாடிகள் நின்று கவனித்து ஒரு உற்சாகத்தை கொடுத்து, சரி கிளம்பு என்று வழியனுப்பும். சேர வேண்டிய இடம் சேர்ந்த பின்னும்கூட இடையில் கிடைத்த அனுபவம் இனித்துக்கொண்டே இருக்கும். அதுபோலவே இந்த கட்டுரை கூட்டிச் செல்லும் இடம் வேறெனினும் இந்த வரியும் நினைவில் ஊறிக்கொண்டே இருக்கும். பார்த்த மாத்திரத்தில் யாரையும் எடை போடும் புத்தியை நிச்சயம் நிதானிக்க வைக்கும் .

நீர்ஜா திரைப்படத்தின் கட்டுரை 2018-ல் கொடுத்த தாக்கமும் அதை தொடர்ந்த உரையாடல்களும் இப்போதும் நினைவில் உள்ளது. அப்போது இருந்த புரிதலின் அடிப்படையில் - தனவேல் முருகனின் பெற்றோரையும், நீர்ஜாவின் தாயையும் , என் அம்மாவையும் ஒரே புள்ளியில் நிறுத்தியது அந்த கட்டுரை. இப்போது வாசிக்கையில் எந்த வரி அந்த வேலையை செய்ததோ, அது என்னை பார்த்து கண் சிமிட்டியது. ’அந்த கட்டுரையை வாசித்துணர்ந்த அன்றைய தினத்தில் அம்மாவிற்கு மீண்டும் ஒருமுறை நான் மகளாக பிறந்தேன்’ என்றால் அது மிகையாகாது. அன்றிலிருந்து எங்களுக்குள் ‘மாறாததும் மாற்ற முடியாததும்’ என்றிருந்த எல்லாமே திருத்தி எழுதப்பட்டு வருகிறது .

ஓட்டமுறி வெளிச்சம் திரைப்படம் - கொடூரத்தின் வலியை உயிரில் ஊடுருவ செய்கிறது உங்கள் வார்த்தைகளின் வலிமை - மிகுந்த சிரமத்துடன் அயர்ச்சியுடனும் வாசித்து முடித்தேன். அந்த படத்தை பார்க்கவே முடியாது என்ற முடிவுக்கு வரச் செய்துள்ளது கட்டுரை .

இப்படி ஒவ்வொரு கட்டுரையிலும் சிலிர்த்ததை , சிலாகித்ததை, கரைத்ததை, கரைந்ததை எனச் சொல்லிக் கொண்டே போகலாம் .

’முனைகளிடையே நிகழும் அதிர்வு’, ’காடுகொல்லி’ - எங்கிருந்துதான் வார்த்தைகள் வசப்படுகின்றதோ?!

கடந்த 15 நாட்களாக இப்புத்தகத்துடன் பயணிக்கிறேன். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் நான் உணர்த்ததில் ஒரு பகுதியை மட்டுமே சொல்ல முற்பட்டேன். இத்தனை நீண்ட பதிவாக அமையும் என எதிர்பார்க்கவில்லை.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒன்றிரண்டு கட்டுரைகளை என்னால் 100% முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. மீள் வாசிப்பு செய்து, திரைப்படத்தை பார்த்து, மீண்டும் வாசிக்கும்போது வசப்படும்.

எல்லோரிடமும் உறங்கி கொண்டிருக்கும் ரகசியங்கள் ஏராளம்.
’மூன்றாம் நபருக்கு தெரிந்த ரகசியம் வெளியில் வராமல் போவதில்லை’ என்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பீர்கள். அந்தப் பயத்திலேயே இரண்டாம் நபருக்குகூட தெரியாமல் புதைத்து கொண்டவை நிறையவே .

ஆழ்மன ரகசியங்களை கண்ணீரில் கரைந்து கொண்டே காகிதத்தில் எழுதி நெருப்பிலிடும் ஒரு பயிற்சி முறை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதன் பிறகு மனம் மிகவும் இலேசாகி விடும் என்பார்கள்.
அப்படி ஒரு ’மகத்தான’ அனுபவமாகவே இப்புத்தகம் அமைந்தது.

மனதின் பாரம் குறைந்துள்ளது .

’திரையெனும் திணை’ என்று எப்படி உங்கள் எண்ணத்தில் உதித்ததோ தெரியவில்லை - இந்த புத்தகத்திலேயே சில நாட்கள் வாழ்ந்திருந்தேன் என்றுதான் குறிப்பிட வேண்டும் .

#திரையெனும்திணை - உணர்தலும் உணர்ச்சிகளும் சார்ந்த இடம்.

‘கண்ணாடியில் முகம் பார்க்கும் போது சற்று உற்றுப் பார்த்தால், அவர்கள் அங்கு பிரதிபலிக்கலாம்’ என்று முடியும் ஒரு கட்டுரை .

உங்கள் எழுத்தைவிட அகம் காட்டும் கண்ணாடி வேறில்லை.


*

திரையெனும் திணை பெற்றிருக்கும் மிகக் கனமானதொரு அங்கீகாரம்! 

Oct 24, 2019

நஞ்செனினும் தூயது புகட்டு


முக்கியமான துறை ஒன்றில் உயர் பொறுப்பில் இருப்பவர். சில நேரங்களில் என்னிடம் ஆலோசனைகள் கேட்பார். இரண்டு நாட்களுக்கு பயணத்தில் இருந்தபோது பின்னிரவில் வாட்சப்பில் அவரிடமிருந்து  யாராவது நம் குறைகளை துல்லியமாக சுட்டிக் காட்டினால் என்ன செய்யனும்?” என்ற கேள்வி ஒளிர்ந்தது.

நிதானமாக என்னவென உள்வாங்க வேண்டும். அதில் உண்மை இருப்பின் ஏற்றுக்கொள்ள வேண்டும்என்று பதில் தந்ததோடு, மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

சிறிது நேரத்தில் அவருக்கு வந்திருந்த ஒரு கடிதத்தின் சில பகுதிகள் ஸ்க்ரீன் ஷாட் வடிவில் அனுப்பி வைக்கப்பட்டன.

அவருக்கு கீழே பணியாற்றும், அவரைவிட வயது குறைவானவரிடமிருந்து, அவருடைய சமீபகால நடவடிக்கைகள் குறித்த விமர்சனக் கடிதம் அது. என்னிடம் பகிரப்பட்ட கொஞ்சம் பகுதிகளை வாசித்தவரையில், அந்தக் கடிதத்தில் பெரும் அக்கறை இழையோடியது புரிந்தது. அதே நேரம் மிகக் கூர்மையான, கடுமையான விமர்சனங்கள். ஏறத்தாழ தோலுரித்த தன்மை.

அவருக்கு வந்திருந்த விமர்சனத்தில் என் பார்வைக்கு வந்தது 10-15% இருக்கலாம். அதிலிருந்த சிலவற்றை எனக்குப் பொருத்திப் பார்த்துக் கொண்டேன். பாகற்காய் ஜூஸில் கொஞ்சம் நிலவேம்பைக் கலந்ததுபோல் இருக்கத்தான் செய்தது.

ஒருநாள் கழித்து... எதிலிருந்து தொடங்குவது எனத் தெரியாமல்...

எனக்கு அனுப்பினதை வச்சு பார்க்கும்போதே விமர்சனம் ரொம்ப கடுமையா இருந்த மாதிரி இருந்துச்சே!என்றேன்

நேர்மையாகவும் இருந்தது!

ம்ம்ம்...

ரொம்ப பதட்டமாகிட்டேன். ஆனா நிதானத்தை கை விட்றக்கூடாதுனு என்னைக் கட்டுப்படுத்தி மீண்டும் மீண்டும் வாசிச்சேன். இதோ இப்பவும் படிக்கிறேன், இனியும் படிப்பேன். எவ்ளோ வலி கொடுத்தாலும், அது என் நல்லதுக்குத்தான் என்பதில் சந்தேகம் இல்லை. எதும் கோவமெல்லாம் இல்லை. எனக்கு கீழே இருந்தாலும், இப்ப இன்னும் கூடுதலா மதிக்கிறேன்என்றார்

ம்ம்ம்ம்ம்ம்....

உண்மையச் சொல்லனும்னா இன்னும் கடுமையா இருந்ததையெல்லாம் உங்ககிட்ட சொல்ற தைரியம் வரல. அதனாலதான் கொஞ்சம் மட்டுமே அனுப்பினேன்."

ஓ... அப்படியா... இனிமே எதாச்சும் தேவைன்னா நான் உங்ககிட்ட அட்வைஸ் கேட்டுக்கிறேன்

ஏ......ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!?”

அனுப்பின கொஞ்சூண்டு படிச்சு, அதில் என்னை பொருத்திப் பார்த்ததுக்கே ஆடிப்போய்ட்டேன். முழுசா படிச்சிட்டு, இன்னும் கூடுதலா மதிப்பேன்னு சொல்றதெல்லாம் வேற லெவல் ஆச்சே!

*

முதலில் அவர் கேட்டபோது நிதானமாக என்னவென உள்வாங்க வேண்டும். அதில் உண்மை இருப்பின் ஏற்றுக்கொள்ள வேண்டும்என்று சொல்லியிருந்தாலும், சொல்லுதல் யார்க்கும் எளிய தானே!

விமர்சனம் பல நேரங்களில் அவ்வளவு நேர்மையாக எல்லாம் வந்துவிடுவதில்லை. அதிலிருக்கும் சிக்கல், குறிப்பிட்ட ஒரு விசயத்திற்கான விமர்சனம் வருவதாக இருந்தாலும், அது சுற்றமும் நட்பும் சூழ, உடன் இருந்த அனைத்து விசயங்களையும் இணைத்தபடிதான் வரும். அதில்தான் நேர்மை சிதறிப்போய்விடுகிறது.

விமர்சனம் என்பது மருந்து. நஞ்செனினும் தூயது புகட்ட வேண்டும் என்கிறபோது மருந்தும் தூய்மையானதாக, தேவையான அளவில் மட்டுமே இருத்தல் நலம். சரியான மருந்தை மறுப்பேதுமின்றி ஏற்பது எதனினும் மிகவும் முக்கியம்.

Aug 4, 2018

உதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2


கண்களில் கண்ணீரோடு தான் சில வரிகளைக் கடந்தேன் அண்ணா.. பத்து வயது கடந்த நிலையிலேயே என் மகளும் இந்த வலியை அனுபவிக்கிறாளே என்று நிறைய கஷ்டப்பட்டுருக்கேன்.. அந்த மாதிரியான சமயங்களில் அவளின் முகம் கொஞ்சம் வாடினாலும் .. அவளை நாங்கள் பள்ளிக்கு செல்ல அனுமதிப்பதில்லை...

எங்கள் இருவரின் வலியையும் தாயாய் உணர்ந்த என்னவரால் அந்த வலி கூட சுகமாக மாறிவிடும் பல வேளைகளில்...

ஆண்கள் கூட புரிந்து கொள்ளும் வேதனையை அதை நன்றாக உணர்ந்த பெண்கள் புரிந்து கொள்ளாதது வேதனையான விஷயம்...

*

I remember the day .. During 3 rd of my periods ..the situation took me to travel..
After get inside the train with in 2 hours my bleed started unconditional.
Full dress wetted. All knows that the express trains particularly in north side sleeper also we can't travel..near bathrooms and pathways oocupaid by passengers...

I started cry..my husband went to see ttr for a ac coach. That s the most untorable pain in my life in heart and body...

I take one towel and wipe the seat where i sit..with water.. And wrape me with a big bedsheet ...which i bring for sleep...

200 Nos more than i crossed to reach the new coach...

Where i sit there also all know abt my periods all are talk about that..

After this incident i ask myself why i was cry..
That s because of pain.. Or bcoz of shy..
Still i don't know ..

But most unconditional moment..
That struck on my mind..

Even i use napkins during..that much over bleed that's s also a 3 rd day how could it hpn i don't know.

Feeling painful..

*

தங்களின் பதிவால் நிச்சயம் பல நல் உள்ளங்கள் பெண் களின் வலியை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன. பொய்மை விலங்கை உடைக்க முயற்சி எடுத்த தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி

*

கடையில் போய் நாம் கேட்டாலும் அதை பேப்பரில் மடித்து தரும் நிலைதான் இருக்கிறது

*
நாம இன்னும் நிறைய மாற வேண்டியிருக்கிறது இந்த விஷயத்தில்

*

இன்று பல பள்ளிகளில் இயற்கை உபதைகளில் இருந்து விடுபட அனுமதி கேட்பதற்கே இளவயது பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். இதுதான் உண்மை.

*

ஆண்களுக்கு இதெல்லாம் ஜென்மத்தில் புரியப் போவதில்லை என்ற என் எண்ணத்தை உடைத்து விட்டீர்கள்.

*

அறியாமையை உணர வைக்கிறது....

*

நாம் இன்னும் நாப்கின் பற்றி பேசுவதையே taboo வாக கருதிக்கொண்டிருக்கிறோம்.. Tampon எனும் வகை பேட்கள் இன்னும் சவுகரியமானவை என்கிறார்கள் அதை உபயோகித்தவர்கள்.. இளம் தலைமுறைக்கு அதை பழக்க அம்மாக்கள் தயங்குகிறார்கள் ஏனெனில் அவர்களுக்கே அது ஏற்கமுடியாததாகவும் அச்சமாகவும் இருக்கிறது.. நீச்சலுக்கு செல்ல, கறைப்படும் என்ற கவலையில்லாமல் இருக்க என்று பல விதமாய் உபயோகம். வலி தவிர வேறு எதுவும் அந்நாட்களில் பெண்களின் அன்றாடத்தை கட்டிப்போடக்கூடாது.. இன்னும் கடக்கவேண்டியத்தொலைவு நிறைய இருக்கிறது..

*

எனது வீட்டில் இரண்டு பெண்களுக்கும் மனைவிக்கும் இதுவரை அவர்கள் சென்று வாங்கியதாய் ஞாபகம் இல்லைங்க..அந்த பயமும் ஒரு மன இறுக்கம் இல்லாமல் இன்றும் எதிர்கொள்கிறார்கள் எனது பெண்கள்.இது அவர்களின் சிறு வயதிலேயே கற்பிக்கும் ஒரு முக்கியமான பாடம்

*

இன்னும் நிறைய பதிவுகள்,கட்டுரைகள் வர வேண்டும்.

*

உணரவேண்டிய பதிவு....ஆண்கள் மட்டுமல்ல சில பதவியில் இருக்கும் பெண்களும்..... நான் ஆசிரியையாக வேலை செய்து கொண்டிருக்கும் போது.....வலியுடனும் வேதனையுடனும் விடுமுறை கேட்டும் கிடைக்காத தருணம் இதைப் படிக்கும் போது நினைவில் வந்தது.....

*

நீங்க சொன்ன மாதிரி தனிதட்டு , தனிப்படுக்கைன்னு கிராமங்களில் இன்னும் இருக்குங்க .

*

பெண்ணாய் இதை உணர முடிகிறது, மேலும் இன்றைய பல ஆண்கள் தங்கள் மனைவி மற்றும் மகளின் மாதவிடாய் சமையங்களில் ஏற்படும் மன பிரச்சனைகளை புரிந்து மிகவும் அனுசரனையாக நடந்து கொள்ளகிறார்கள் இதுவும் மிக பெரிய மாற்றமே

*

நீங்க எழுதியிருக்கும். மாணவி, தலைமையாசிரியை நிகழ்வு குறித்து ஒரு கருத்து. பெரும்பாலும் பெண்களுக்கிடையில் இந்த மாதவிடாய் பெரிய விடயமே இல்லாதது போல் ஒரு பாவனை இருக்கும். அதிலும் வயது மூத்த பெண்கள் இளவயது பெண்களின் வயிற்றுவலிக்கு, 'என்னமோ எங்களுக்கு இல்லாதது மாதிரி.. எல்லோருக்கும் உள்ளதுதான்..' என்கிற ரீதியில் அதை பார்ப்பது வழக்கம்.  இம்மாதிரியான அனுபவங்களை சித்தி, அத்தை, அக்கா என்று வயது மூத்த பெண்கள் எங்களிடம் காட்ட தான் செய்தார்கள்.

இளவயதில் இருக்கும் மாதவிடாய் சிரமங்கள், அதீத இரத்தப்போக்கையும் வயிற்றுவலியையும் புரியாத புதிர் தன்மையையும் கொண்டதாக இருக்கும் என்பதை மூத்தவர்கள் புரிந்துக் கொள்ள தவறுகிறார்கள். இதுவும் ஒரு வகையில் இன்று வரை சமூகத்தில் தொடரும் மாமியார் - மருமகள் பிரசனையைப் போன்றதுதான்.

*

முட்டு வீட்டுல முழுசும் ஓய்வில் இருக்கும் பழக்கம் தான் ,ஆதலால் அந்த நாளில் பெண்கள் ரொம்ப நல்ல சத்தான ஆகாரம் உண்டும்,உடலில் ஏற்படும் அசதியை போக்கவும் தான் அந்த முட்டு வீடு.

*

நாங்கள் இன்னும் கூட இப்படித்தான் இருக்கிறோம்....அந்தக் கடினமான நாட்களை கடத்துதல் என்பது வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாபெரும் சவால்...தான்...

*

ஒரு தந்தையாக, கணவனாக உங்கள் கூற்று 100% சரியே. தவிர உங்கள் கையாளும் முறை அபாரம். அதற்காக உங்களுக்கு தலை வணங்குகிறேன். பொதுவாக பெண்களின் பிரச்சனையை இப்போது ஆண்கள் சுலபத்தில் புரிந்துகொள்கிறார்கள் என்பது பெரும் நிம்மதியை கொடுக்கிறது. நன்றி அய்யா."தீட்டுஎன்று இப்போதும் தொடர்வது குறித்து கேள்விகளுண்டு" என்று குறிப்பிட்டிருந்தீர்கள். முன்பெல்லாம். பெண்களுக்கு தீட்டு வந்தால் இன்றயத்தை போல பாட்ஸ் எதுவும் கிடையாது. தவிர உடல் உபாதைகள் இருக்கும். அந்த நேரத்தில் அவளுக்கு ஓய்வு தேவை. அதனாலேயே அவர்களை ஒரு வட்டத்துக்குள் மறதி மூன்று நாட்களுக்கு பத்தியமாக பாதுகாத்தார்கள். அதனால் தான் என்னவோ சுலபமாக இந்த ஸ்கேனிங்கும் இல்லாமல் 15 பிள்ளைகள் பெறமுடிந்தது. இப்போ அந்த வழக்கம் அருகிப்போனதால் ஒரு பிள்ளைக்கும் 15 ஸ்கானிங் என்றாகிவிட்டது. எப்போ இந்த வழக்கம் தவறான நோக்கில் பார்க்கப்பட்டது என்று எனக்கு தெரியவில்லை. பாஞ்சாலி சபதத்தில் தான் வீட்டுக்கு விளக்காக இருப்பதாக பாஞ்சாலி கூறும் செய்தியை பார்க்கும் பொது அப்போதெல்லாம் அவர்கள் இதை மறைத்துப் பார்க்கும் செய்தியாக பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் இதில் இன்னொரு பக்கமும் இருக்கிறது. இந்த சவாலில் எனக்கு நிச்சயமாக உடன்பாடு இல்லை. ஒரு பெண்ணாக அவளுடைய உணர்வுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் முற்போக்காக சிந்தித்தாலும் கூட ஒரு பெண் எந்த அளவுக்கு இத்தகைய சவால்களையும் விரும்புகிறாள் என்பதையும் பார்க்க வேண்டும். நிசஹகாயமாக அவளுக்கு இத்தகைய சவால்கள் சங்கடத்தைக் கொடுக்கும். யார் இந்த சவால்களை முன்வைத்தார்களோ எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணாக என்னால் இதை நினைத்ததுக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் என்னை ஒரு பிற்போக்கு வாதி என்று முத்திரை குத்தாலம். இந்த விஷயத்தில் நான் பிற்போக்குவாதியாகவே இருக்க விரும்புகிறேன். பெண்ணின் மாதவிடாய் என்பது இயற்க்கையாக நடக்கக் கூடிய ஒரு சம்பவம். அந்த நேரத்தில் அவளுக்கு இருக்கும் மனநிலை, உடல் மாற்றம், வலி என்பன எல்லாம் வெறும் சவாலுக்கு உரியதா? அதை இப்படி பகிரங்கமாக விளம்பர படுத்துவது... சரியா என்று எனக்கு தெரியவில்லை. அது பாட்டுக்கு நடந்துகொண்டு போகட்டுமே... விட்டுடலாமே.

*

இதை பற்றி எழுதுவதற்கு ஒரு தைரியம்மும் முற்போக்கு சிந்தனையும்,பெண்கள் மீது நல்ல அன்பும் வேண்டும்.

*

இது குறித்து எனக்கு சில ஆதங்கம் உண்டு. அந்த காலத்தில் தீட்டுன்னு சொல்லி ஒதுக்கி வைத்ததுக்கு முக்கியமான காரணங்கள் இருந்தது. அந்த மாதிரி நாட்கள்ள உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். அப்போ அவங்களுக்கு முழுமையான ஓய்வும் அவசியம் தேவை. அந்த காலத்தில் இதெல்லாம் கிடைச்சது. ஆனா இப்போ, அந்த கஷ்டத்தோட வீட்டு வேலைகளையும் செய்து, வேலைக்கும் போயிட்டு வந்து, குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பெண்கள் பற்றிய சிறு அக்கறை கூட யார்கிட்டயும் இல்லை. அந்த காலத்தில் ஒதுக்கி வைச்சாங்க, இந்த காலத்தில் வீட்டுக்குள்ள சேர்த்திக்கறாங்க. ஆனா அந்த காலத்தில் கிடைத்த ஓய்வும் கவனிப்பும் தொலைந்து போயி மேலும் சிரமங்கள் மட்டுமே மிச்சமானது


*

திரு அக்ஷய் குமார் பல சமூக அக்கறை கொண்ட படங்களில் நடித்திருக்கிறார்... திறந்தவெளியை தவிர்த்தல் மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையின் அவசியத்தை உணர்த்தும் படம்...

தலைமை ஆசிரியையின் பார்வையும் செயலும் தவறென்பது எனது கருத்து.. பள்ளியின் தேர்ச்சி சதவீதம் நூறாகயிருக்க வேண்டும்.. அனைவரும் எண்பது விழுக்காடுக்கு அதிகமாக மதிப்பெண்கள்... இத்யாதி.. இல்லையேல் மாவட்ட கல்வி அதிகாரி மெமோ... etc., ஒவ்வொரு முறையும் ஒரு மாணவி தன்னை சந்தித்து ஏதாவது கேட்கையில்(However naughty or notorious he/she maybe)... இவள் சொல்வது உண்மை"யோ" எனும் பார்வைதான் இருக்க வேண்டும்... இவர்கள் /இவள் எப்போதும் இப்படித்தான் என்ற... Pre(determined /conceived )closed mind to be shunned. அவரது பதவி, வயதுக்கு முதிர்ச்சியான பார்வையிருந்திருக்க வேண்டும்...

பள்ளி /கல்லூரி மாணவியோ அல்லது பணிக்கு செல்லும் பெண்களோ அல்லது விடுதியில் தங்கியிருப்பவர்களோ (கோவை), விரும்பத்தகாதது நடப்பின் துணிச்சலோடு தட்டிக்கேட்பது மற்றும் தன் சம்பந்தப்பட்டவர்க்கு தெரிவிப்பது பற்றி சிறு பிராயத்திலிருந்தே ஊக்குவித்தல் அவசியம். நீ பாட்டுக்கு பதிலே பேசாம வா... வேறு தெருவில போய்வா.. அலுவலக மேலதிகாரி. Transfer, harassment or CR etc., ஏதாவது ஒன்றிற்கு பயம்... A psychological war within herself subdues her..

மறுபடியும் அதே பள்ளி மாணவி.. பல வழிகளில் சொல்லியிருக்கலாம்... துண்டு சீட்டில் எழுதி.. சைகையால்.. அருகே சென்று மெதுவாக செவியில்.. வெளியே சென்றபோது பின்தொடந்து சென்று.. அதைவிட்டு அதேயிடத்தில் அழுதுகொண்டே.... மாற்றம் தேவை பெற்றோர் /ஆசிரியர்களிடம்...

*

In Dubai I have never seen a used napkin anywhere whether in a public or private toilet but in all my working places in India I have seen used napkins flooding in female toilets . No one takes it seriously..

*


உதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :1


ஒரு கட்டுரை குறித்து ”அருமை... மிகவும் அருமை” என்பது போன்ற பின்னூட்டங்கள் மட்டும் உவப்பளிப்பதில்லை. இசைவான மற்றும் மாற்றுப் பார்வையை அளிப்பதுவும், இன்னொரு தளத்திற்கு நகர்த்துவதுமான உரையாடல் என்பதே அந்தக் கட்டுரையின் வெற்றியெனக் கருதுவேன்.

உதிரத்தின் நிறம் உரிமை – எனும் கட்டுரை குறித்து ஃபேஸ்புக் / வாட்சப்பில் பகிரப்பட்ட கருத்துகள் தொகுப்பு -1


*******

My wife crying After reading this. She wants to say thanks to you. She will call you soon

*

ஒவ்வொரு பெண்ணும் ஒரு கொடுமையான அனுபவத்தை கடந்துதான் வந்திருகக் வேண்டும். ஆனால் நான் எல்லாவற்றையும் கொஞ்சம் உடைக்கப் பழகிக் கொண்டேன். அந்த கட்டுக்கோப்புகளை நான் தாண்டும்போது தட்டிக் கொடுப்பது ஆணாக இருந்தாலும் தடுப்பது பெண்கள்தான்.

அலுவலகத்தில் கையில் எடுத்துக் கொண்டு பாத் ரூம் போனால் உடன் இருக்கும் தோழிகள்தான் கிண்டலடிப்பார்கள் மறைத்துக் கொண்டு போ என்று. ஆண்கள் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை

இந்த சமூகம் இந்த விஷயத்தில் திருந்தும் என்பது நம் காலத்தில் இல்லை. இன்னமும் flex அடித்து சீர் செய்கிறார்கள்

*

உண்மையில் உங்க பேட்மேன் சேலன்ஜ் அப்போதான் அதுல என்ன இருக்குன்னே பார்த்தேன்...திருமணமான இந்த 14 ஆண்டுகளில்... நானும் செஃல்பி எடுத்தேன்... ஆனா போடல... ஏன்னு எனக்கும் தெரியல...

*
ஏற்கனவே தெரிந்த/அறிந்த விஷயம் என்றாலும், பிற்போக்காகத்தண்நாம் அதைக் கையாள்கிறோம்.

என்னுடைய பத்து வயதில் என் அப்பா இதைப்பற்றிய புரிதலை எனக்கு ஏற்படுத்தினார்.

"தீட்டு என்பதெல்லாம் இல்லை. மாதத்திற்கு ஒருமுறை ரத்தம் சுத்திகரிக்கப்படும்போது தேவையற்ற ரத்தம் வெளியேறுகிறது. அதில் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் அந்த நேரத்தில் பெண்களை தொடக்கூடாது என்கிறார்கள்" இதுதான் அவர் கூறியது.

என் இரண்டு பெண்களுக்கும் (தற்போது 14,7 வயது) சிறு வயதிலேயே மாதவிடாய் பற்றி என்னால் முடிந்த அளவு சொல்லி மனதளவில் அவர்களை தயார்படுத்தி இருக்கிறேன். இது என் அப்பாவிடமிருந்து நான் கற்றது...

நீங்கள் இதை ஒரு சமூகத்திற்கே கற்றுக் கொடுக்க முயல்கிறீர்கள்.
இந்தக் கட்டுரை படிப்பவர் மனதில் ஒரு புரிதல்/மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

*

From this article I got one point about my research. Thanks Anna

*

This should taught by mothers to their sons. Then these issues will solve meticulously. Even I remember the days my mom scolded me asking about this.

*

மாத விடாய் நாட்களின் தாக்கம் கூட ஒவ்வொரு பருவத்திலும் மாறுகிறது. அதையெல்லாமும் கூட குடும்பத்தினருக்கு சொல்லிக் கொடுக்கணும். பதின் பருவக் குழந்தைகளுக்கு பள்ளிகளில் பாடமாகச் சொல்லிக் கொடுக்கலாம். தமிழ்நாட்டுல எத்தன பள்ளிகளில் இது நடக்குதுன்னு தெரியல. இங்கல்லாம் பெண் குழந்தைகள் பயமில்லாமல் தெளிவா எதிர் கொள்ளறதப் பாக்கறப்போ, நான் முதல் முறை அழுததுதான் நினைவுக்கு வருது. ஆனால் இப்போஎனக்கு நடக்கும் உடல் மாறுபாடுகளை என் குழந்தைகளிடம் பகிர்கிறேன். மகளுக்கு இன்னும ஆரம்பிக்கலைன்னாலும், எல்லாமே தெரியும்.

பள்ளித்துறையின் சமீபத்திய மாறுதல்கள் நம்பிக்கை கொடுக்குது. பாக்கலாம்...

*

The understanding has to come from small age. That is why i like the work you people are doing. If we teach the kids it will improve a generation

*

எம் பையன் எனக்கும் மகளுக்கும் நாப்கின் வாங்கி வருகிறான். அந்த நாட்களைப் பற்றிய ரகசியம் வீட்டில் இல்லை. எங்கள் வலி பற்றிய வெளிப்படை பேச்சு வீட்டில் உண்டு

*
உண்மை நிகழ்வுகளை உன்னதமான எழுத்துக்களால் உனக்கே உண்டான வடிவில். பெரும்பாலான பெண்களிடம் இன்றைக்கும் இருக்கும் தயக்கத்தை மிகவும் அழகாக எடுத்துரைத்து மனதில் எழுச்சியை ஏற்படுத்தியதற்காக பாராட்டுக்கள்

*

நேர்த்தியாக வெளிப்படுத்துதல்...
வீண் வார்த்தைகள், கற்பனை புனைவுகள் கடும் சொற்கள் ஏதுமின்றி படித்து, சிந்திக்கவைப்பது உங்களது எழுத்தின் சிறப்பு

*

Melted down. Thanks for the sharing

*

இதில் நானும் இன்னும் ஒரு குற்றவாளி தான் சார் .... வேண்டுமென்று தவிர்ப் பதில்லை இருந்தாலும் இது பற்றி கண்டு கொள்வதில்லை. கிட்டத்தட்ட 30 வருடங்கள் அம்மா & அக்காவெல்லாம் அந்த நாட்களில் தனி அறை , தனி படுக்கை , காலையில் குளித்து முடித்து பின் சமையல் , என்னென்னவோ வாங்க எத்தனை முறை கடைகளுக்கு அனுப்பினாலும் இந்த நாப்கின் வாங்க மட்டும் சொல்லாமல் , அவர்களே வாங்கி வந்து வீட்டில் ஒதுக்குப்புறமாக வைப்பது , இது போல பல வகைகளில் தள்ளியே இருந்ததால் அதைப் பற்றிய எந்த அறிவும் & யோசனையும இல்லாமல் கடந்து வந்து விட்டு இப்போது வூட்டம்மா அந்த அளவு கட்டுப்பாடு இல்லாமல் சாதாரண நாட்கள் போல கடப்பதை பார்த்து மகிழ்ச்சி தான் இருந்தாலும் அந்த நாட்களில் அவர்கள் வலியை உணர எண்ணினாலும் அது பற்றி பேசியதே இல்லை என்பது தான் எனக்கு குற்றவாளி போன்று உணர வைக்கும் சார் , ஆனாலும் அடுத்த முறையாவது அந்த நாட்களில் விசாரிக்க வேண்டும் என்று நினைப்பேன், ஆனால் செய்ததில்லை, இந்தக் குற்ற உணர்ச்சியால் தான் அந்த பேட்மேன் சேலஞ்ச்ல கூட கலந்து கொள்ள மனம் இடம் தரலை

*
இன்றளவிலும் எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும் பெண்களாகிய எங்களுக்கு உங்களவு யோசிக்கவோ கேக்கவோ பேசவோ வருத்தப்பட ஆளில்லை என்பதே நிதர்சனமான உண்மை பெண் ஜென்மத்திற்க்கே உண்டான வலிகள் வேதனைகள் அனுபவித்தே ஆகவேண்டும் அவ்வளவுதான்

*
அந்த ஆரோக்கிய சூழல் பள்ளியில் மட்டுமல்லாமல் , சமூகத்திலும் , குறிப்பாக வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆண்களின் பங்கு சரிசமமானது.

*
தங்களால், என்னால் இவ்வளவு உணர்ந்து கொள்ள முடிந்தமைக்கு நன்றி.

ஆனால் சென்னை வெள்ள பேரிடர் துயரத்தின்பொழுது சென்னைGST bhavan யில் உள்ள அதிகாரிகள் ஒண்றிணைந்து whatsapp group எற்படுத்தி இச்சிறியோனையும் அக்குழுவில் உள்ள நல்லிதயமீக்க நண்பரினால் இணைக்கப்பட்டேன்.
எவ்வாறு இக்குழு உருவானதெனில் அத்துறையில் உள்ள கருணையே வடிவான உயர் பெண் அதிகாரி அப்பேரிடாரின் பொழுது கூவம் அற்றங்கரையின் பாலத்தில் நின்று கவனித்தப் பொழுது குடிசைவாழ் பெண்களின் மேற்குறித்த துயரத்தை மனதில் உள்வாங்கி whatsapp group தொடங்கி சென்னையின் அனைத்து குடிசைப் பகுதிகளிலும் நாப்கின்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் தேவையானப் பொருட்கள் வழங்கி இறுதியில் whatsapp group அவரால் நல் உள்ளங்களுக்கு வாழ்த்துச் சொல்லி முற்றுப் பெற்றது சார்.
இச்சிறியோனும் அவர்களால் அன்றுணர்ந்தேன் வலியை இரு பெண் குழந்தைகளின் தகப்பனாக..

*
Excellent ....
இதை எழுதக்கூட ஒரு தைரியம் வேணும்....
கடவுளையே சபிக்கத் தோணும் பல கடினமான நேரங்கள்ல....
என்ன செய்ய....

*

படித்தவர்களே சில நேரங்களில் சில இடங்களில் பேச முடியவில்லை

*
இன்றைக்கும் எங்கள் நிறுவனத்தில் மாதவிடாய் ஏற்பட்டதை வெளிப்படையாக சொல்ல தயங்கும் பெண்களே அதிகம்.

*
People don’t have awareness about mensuration .. let us forward max

*

இங்கே பல பெண்களின் நிலைப்பாடு இது தான்..மெனோபாஸ் காரணமாக பதினைந்து நாட்களாக உதிரப் போக்கு அவஸ்தை மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு முடிந்து இன்று ஓரளவு பரவாயில்லை என்று பணியில் வந்தேன் .திங்கள்தான் பணியில் சேரலாம் என்று இருந்தேன் ..கடுமையாகத் தான் பேசினார்கள் எங்கள் தலைமை ...கண்களில் நீரொடு கடமை யாற்ற வேண்டிய சூ ழல் .நீங்க அந்த பெண் கிட்ட கேட்டத்தும் அவள் ரியாக்சனும் நெகிழ வைத்து விட்டது .பெண்கள் எல்லோரும் இதைக் கடந்து வந்தாலும் சக பெண்களிடம் ஏன் இப்படி இருக்கிறார்கள்..சில இடங்களில் மாமியார் தொல்லை..சில இடங்களில் கணவர் .சில இடங்களில் உயரதிகாரிகள்...

பெண்களுக்கான பிரச்சனைகளை இவ்வளவு அழகாக பெண்களால் கூட சொல்ல முடியாத அளவு அருமையாக நட்புணர்வுடன், தந்தையுள்ளத்துடன் எழுதிருக்கீங்க...

*

படிப்பவர்களை யோசிக்கவும் பின்பற்ற வைக்கவுமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது

*

இந்த விடயங்களில் நம் வீடுகளில் பெண்களுக்குப் பெண்களே தனிமைப்படுத்துகிறார் களே... அம்மாக்கள் நாசூக்காகவும்.... மாமியார்கள் அதட்டலாகவும் ... பிறகு நாம் என்ன செய்ய ...

*


பள்ளிக்கு செல்லும் குழந்தை மாலை வரை ஒரே நாப்கினை பயன்படுத்தினால் புற்று நோய்க்கான வாய்ப்பு அதிகம் என்பதால் 20162ல் ஜேஸீஸ் மண்டலம் 17-ன் தலைவரின் சிறப்பு திட்டமாக நாப்கின் லெண்டிங் மிசின் இன்சினேட்டர் மிஷின்களை அரசு பள்ளிகளில் நிறுவும் திட்டத்தை கொண்டு வரப்பட்டது. அது 2016 ஆம் ஆண்டு தேசிய தலைவரின் திட்டமாக அறிவிக்கப்பட்டு இந்தியா முழுவதும் செயல் படுத்த பட்டது.

*

பெரிய படிப்பில்லாதவராக இருந்தாலும் எங்க அப்பா, இதில் ரொம்ப அட்வான்சாக இருந்தாங்க. நான் சிறுவனாக இருந்தபோது அம்மா மறைத்து வைத்திருந்த நாப்கினை எடுத்து இது என்ன என கேட்க, அம்மா என்னை திட்டிவிட்டு அதை பிடுங்கி வேறு மறைவான இடத்தில் வச்சிட்டாங்க.

அப்பா தோட்டத்தில் இருந்து வந்தவுடன் இதை நான் சொல்ல, உடனே அப்பா அந்த நாப்கினை எடுத்து வந்து எனக்கு புரியும் வகையில் சொன்னாங்க.

*

நான் எனது வகுப்பறையில் குழந்தைகள் இது பற்றி வெளிப்படையாக ,உரிமையாக , தைரியமாக வெளிப்படுத்த வழிகாட்டி உள்ளேன்

*

ஆணுக்குத் தெரிந்தாலும் தெரியக்கூடாத விஷயமாக ஏன் பார்க்கிறது இச்சமூகம்.!!!

*

முகத்திரையை கிழிக்கும் அற்புதமான விவரணை ங்க அண்ணா....

*

Excellent uncle... my husband mugam sulikkum pothu ennaku romba kastamaa irrukum...periods pathi naan ethana mura sonnaalum atha purinkittathe illa...

*

Fantastic..Happy to come know that important and positive thought processes are going on...This will simply help both the gender to uplift mankind..

*

very touching anna. But here college girls are conveying freely. This trend should spread in nook and corners

*



வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...