தகிக்கும் பனியுருண்டை




உள்ளங்கையில் அழுத்தி
விரல்கள் மடக்கிவிடப்பட்ட
தகிக்கும் பனியுருண்டை
நீ!

அந்த முத்தங்களை நாம்
கடற்கரையில்
புதைத்திருக்கலாகாது
ஓயாத அலை
வருடிக்கொண்டேயிருக்கிறது!

ஒளி பிடுங்கிச்செல்லப்பட்ட
இருள் வெளியெங்கும்
கவிதையாய்
உன்னை இட்டு
நிரப்பியிருக்கிறாய்
துழாவும் கைகளில்
பிடிபடும் வரிகளில்
பிரியத்தின் வாசனையுண்டு

பிரியத்தின் சுவட்டை
அழிப்பது
அத்தனை ளிதல்ல
நாவிலூறிய தேனின் சுவையை
நினைவிலிருந்து
அழிப்பதற்கு ஒப்பானது!