Sep 29, 2015

அதுவே போர் அதுவே விடுதலை





நான் சேகரித்து வைத்திருக்கும்
பிரியமிகு சொற்களில்
முல்லையின் வாசம்
நுரைத்துப் பொங்கிக் கொண்டிருந்தது

முத்தமும் மோகமும்
என்னவெனக் கிறங்கி கேட்ட
கணத்தில்தான் சொன்னேன்
அதுவே போர் அதுவே விடுதலை

கனகச்சிதமாய் உதிர்த்த
வரியொன்றின் உள்ளும் புறமும்
உன் பெயர் வரியோடிய
சொற்களை நிரப்பி வைத்திருந்தாய்

சடசடக்கும் அடைமழையில்
வெடவெடக்கும் குளிரில்
வேறெதும் கேட்கத் தோன்றவில்லை
காதோரம் கதகதக்கும்
கொஞ்சம் சொற்களைத் தவிர!

-

1 comment:

chandana easwaramurthy said...

அழகான கவிதை,
கொஞ்சும் நு வந்திருக்கலாம்.

முதியதோர் உலகு

அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...