மனித
சமூகத்தின் அடுத்த
பெரும்பிணி ’மது’
-
பைக் என்பது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதில், விரைவாக செல்வதற்கான வாகனம் என்பதை மறந்து, சாகசம் செய்வதற்கும், வித்தை காட்டுவதற்கும், நேரடியாக ’மேலே’ செல்வதற்குமானது என நினைக்கிறாங்க போல # யோவ்.... கொஞ்சம் மெதுவாத்தான் போயேன்?
-
கருப்பட்டியை புறந்தள்ளி வெள்ளை
அஸ்கா
சர்க்கரை தின்னும் நாகரிகத்திற்குக் கொடுத்த விலை
“ஆரோக்கியம்”
-

எனக்கு
என்
தந்தையின் தாத்தா
பெயர்
தெரியாது, என்
மகளுக்கு என்
தாத்தாவின் பெயர்
தெரியாது. #இதனால்
அறியப்படும் நீதியாதெனில் “அம்புட்டுதான்”
-
உண்மையைக் கண்டுதான் பல
நேரங்களில் பயம்
கொள்கிறோம்!
-
ஒரு
கோலி
குண்டுக்குள் பொதிந்து கிடக்கும் அழகு
புரியாதவனுக்கு, பூமிப்பந்துக்குள் பொதிந்து கிடக்கும் அழகு
புரிந்துவிடவா போகிறது!
-
ஜூலை
மாதம்
5 ஞாயிறு
என
மகிழும்போதே, 5 திங்கள் என
மகிழ்ச்சியின் “ஃப்யூஸ்” பிடுங்கப்படுகிறது #திங்கட்கிழமை இல்லா
நாட்காட்டி எங்கே
கிடைக்கும்?
-
இந்த ஃபேஸ்புக்கை உருவாக்கின ’மார்க் சக்கர்பெர்க்’கை உடனடியா பொடணிய புடிச்சு அழுத்தி தமிழ் கத்துக்கொடுத்து, இங்கே ’இலக்கியம் / சாதி / கட்சி” ஆகியவற்றுக்காக மாய்ந்து மாய்ந்து செய்யப்படும் புரட்சிக் கருத்துகளைப் படிக்க வைத்து ’இரத்த வாந்தி’ எடுக்க வைக்கனும்பா.
# யான் பெற்ற இன்பம்(!) பெறுக மார்க் சக்கர்பெர்க்!
# யான் பெற்ற இன்பம்(!) பெறுக மார்க் சக்கர்பெர்க்!
-
டாஸ்மாக் சரக்குல என்னவோ
தப்பிருக்கு. முன்ன
சரக்கு
போட்டுட்டு அடிச்சுக்குவாங்க, இப்ப
சத்தம்
மட்டும்தான் போடுறாங்க #டாஸ்மாக் சூழ்
உலகு
-

யாரையாவது ”எப்டியிருக்கீங்க” எனக்கேட்க “நல்லாருக்கேன்” எனும்
பொய்(!)கூடப்பிடிக்கிறது
“ம்..
இருக்கேன்”என
அலுப்பாக வரும்
உண்மை
பிடிப்பதில்லை
-
நண்பர்
: ஏன்
தாடி
வெச்சிருக்கே! நான்:
ஷேவ்
பண்ணல!
@#$%#$% # இதனால்
அறியப்படும் நீதி
யாதெனில் ‘இனிமே
கேட்கவே மாட்டாரு!’
-
ஒவ்வொரு இரவும்
டாஸ்மாக் வாசலோரம் கிடந்து மிதக்கும் ’மேதகு
குடிமகன்’களைக்
காணும்போது ’நல்’அரசு நாளும் செழிக்குமெனும் நம்பிக்கை மிகுகிறது.
-
இச்சமூகப் பெருங்கடலில் எவ்வளவு சிறிய
துளி
நான்.
# அடங்கு!
-
இப்ப
ரயில்
எல்லாம் கூட
சரியான
நேரத்துக்கு வந்துடுது, ஆனா
இந்த
IRCTC முன்பதிவு தளம்
மட்டும் எப்பவுமே தாமதமாவே இயங்குது #’வல்லரசு’ இந்தியா
-
மகள்
வளர்ந்து கொண்டிருக்கிறாள் தாயாக!
-
எவ்வளவுதான் முயன்றாலும், எல்லா
நேரத்திலும் உணர்ச்சிகள் கட்டுக்குள்ளேயே இருப்பதில்லை.
-
வெளியிடங்களில் காணும்
எந்தவொரு குழந்தையும், நம்
நெருங்கிய உறவுக்
குழந்தை ஒன்றை
நினைவில் கொண்டு
வந்துவிடுகிறது.
-
மலைப்பயணங்களில் மேலே
ஏறி
விட்டு,
இறங்குகையில் எளிதாக
இருக்கின்றது. வாழ்க்கைப் பயணங்களில் ஏறி
விட்டு
இறங்குகையில் கொடியதாக இருக்கின்றது.
-
அன்பு
எனும்
மிருகம் அங்கங்கே இல்லாமல் இருந்திருந்தால், இந்த
மனிதக்காடு எப்போதோ அழிந்திருந்திருக்கும்!
-
உதவி
செய்வதில் சிறிதென்ன பெரிதென்ன. அளிப்பவருக்கு சிறிதாக இருப்பது பெறுபவருக்கு பெரிதாக இருக்கலாம். ஆக,
உதவி
= உதவி.
-
”நம்மை நாமாக”
பலநேரங்களில் நாமே
ஏற்றுக்கொள்வதில்லை
-
உனக்குப் பிடித்ததை நீ
செய்யும் உரிமையைவிட, எனக்குப் பிடிக்காததை என்னிடம் செய்வதைத்தடுக்கும் உரிமை
எனக்குண்டு #தள்ளிநின்னு தம்
அடிடா
தங்கம்

-
தொடர்பேயில்லாத ஒரு
ஆளை
திடீரென “டேய்”
என
அழைக்கும் இரண்டெழுத்துச் சொல்லில் கோவப்படுத்திட முடியும்.
-
நம்மீது நாமே
அன்பு
செலுத்த இன்னும் ஒரு
பொழுது
#விடியல்
-
சத்தமில்லாமல் வரும்
பல
படங்கள் ஜெயிக்குது. ஓவர்
அலம்பலோடு வரும்
படங்கள் பெரும்பாலும் ஊத்திக்குது! #TamilCinema
-
அழகிய
மாலைப்
பொழுதில், கையில்
ஆவி
பறக்கும் அழகானதொரு தேநீர்க் கோப்பை.
# தற்காலிக சொர்க்கம்!
-
காலையில் தட்டில் ஊற்றப்படும் குழம்பு என்னவென்று கண்டுபிடிக்க முனைவதில் துவங்குகிறது, ஒவ்வொரு ஆணின்
அன்றைய
தேடல்.
-
கர்நாடகம் காவிரி
தண்ணிவிடலனு புலம்பும் சமூகம்/அரசியல் காவிரியை சாகடிக்கும் சாய,தோல் கழிவுகளை தினமும் சகிக்கும் மொன்னைத்தனத்தை என்ன
சொல்ல?
-
நிலாவுக்கு சுற்றுலா செல்ல
ரூ.700
கோடி
# போடாங்ங்ங்... அங்க
போயி
வடை
சுடுற
பாட்டியைப் பார்க்கிறதுக்கு 700 கோடியா?
ஆணிய்யே புடுங்கவேணாம்!
-
பொய்
வழக்கு
போடும்
ஒரு
அதிகாரியையும் விடக்கூடாது- ஸ்டாலின் # பள்ளிக்கூடத்துல “எய்தவனிருக்க அம்பை
நோவானேன்”னு
படிக்கல போல!
-
விஜய்
பிறந்தநாள் GHல்
பிறக்கும் குழந்தைக்கு தங்கமோதிரம் -ரசிகர்
மன்றம்
#தில்
இருந்தா குழந்தையின் அம்மா
கட்டைவிரலுக்கு மோதிரம் போடுங்களேன் .
-
புலிகளிடம் நேரிடையாக கோபப்பட முடிவதில்லை. வீட்டில் தயிர்சாதம் தின்று
எலி
பிடிக்கும் பூனையிடம் மிக
எளிதாக
கோபத்தைக் காட்டமுடிகிறது.
-
ஆங்கிலத்தை அவிழ்த்து விட்டுட்டு இந்தியை மட்டும் ஏன்
தடுத்தாங்க #ஊர்ல
மார்வாடி பொண்ணுக இருக்காங்க, இங்கிலாந்து ராணி
பேத்தினு ஒன்னுமேயில்ல!
-
எல்லோருக்குள்ளும் அவ்வப்போது ஒரு
வெற்றிடம் உருவாகின்றது. வெற்றிடமும் எதன்மூலமோ நிரம்புகின்றது. ஆனால்
வெற்றிடம், நிரம்புதல் இரண்டுமே மாயை.
-
80% டாஸ்மாக் ஊழியர்கள் தினமும் குடிக்கிறார்கள். # குடிங்கப்பா குடிங்க நல்லாக்குடிங்க, குடி
வெளங்கீறும்!
-
கோபத்தின் எல்லைகள் வியப்பானவை. நாம்
கோபப்படும் நபர்,
அதை
சகித்துக்கொண்டு அனுமதிக்கும் தூரமே
கோபத்தின் எல்லை.
-
சிக்னலில் டீசலை
மிச்சம்பிடிக்க, பழைய
லொடலொட
நகரப்பேருந்தை அணைத்து, பச்சை
விழுகையில் இயக்கும் ஓட்டுனரிடம் இருப்பதன் பெயர்தான் தன்னம்பிக்கை
-
படம்
எடுக்கும் நாகம்
அழகாயிருக்கிறது என்பதற்காக அதன்
விஷமும் இனிக்குமென்று நினைத்தால், பாம்பு
முட்டாளோ, குற்றவாளியோ அல்ல.
-
சிறகுகள்…. பறவைகளுக்கு வெளியே…
நமக்கு
மனசுக்குள்.
-
உறவுகளற்றவன் மட்டும் அனாதையல்ல. சிக்கல்களில் உழலும்போது மனதைப்
பகிர்ந்துகொள்ள மனிதர்களற்றவர்களும் அனாதைதான்
-
அன்பு
மொழிக்கு இலக்கணம் தேவையில்லை!
-
பிடித்தவர்களின் படங்களை எப்போது பார்த்தாலும், அதில்
ஒரு
கவிதை
வாசம்
வீசுகிறது!
-
அவசரத்
தேவை
”அமைதி”
-
’கள்ளக்காதல்’ என்ற
அடைமொழியோடு எழுதத்
துவங்கும் ஊடகவியாளர்களின் பேனாவில் மையோடு
விரசமும் கலந்து
விடுகிறது.
-
தூவும்
மழையில் மண்
மட்டுமா நனைகிறது, மனதும்தான்.
-
மனிதர்களின் அரசியல் பற்று
என்பது
மூடநம்பிக்கையாகவும், அதீத
பக்தியாகவும் உருமாறியிருக்கின்றது.
-
பிரியமும் உரிமையும் இருக்குமிடத்தில்தான் பிணக்கு மிகுகிறது
-
அடுத்ததா தமிழர்களிடையே சாதிக்கலவரம் வந்தால், அது
ஃபேஸ்புக்லதான் வரும்னு நினைக்கிறேன்!
-
குழந்தைப் பருவத்தில் வந்த
குழந்தைத்தனம்தான் எப்போதும் நம்மிடம். ஆனாலும் முதிர்ந்தவர்களைப்போல் சதா
நடித்துக் கொண்டேயிருக்கின்றோம்.
-
அவசரத்திற்கு எழுதப்
பேனா
கேட்கும்போது மூடியை
கழட்டிக்கொண்டு தருபவர்களிடம், எப்படியாவது பேனாவை
அடித்துவிடவேண்டும் என்றே
தோன்றுகிறது
-

சம்பாதிப்பதும், சம்பாதித்ததை வங்கியில் செலுத்துவதும் அவ்வளவு எளிதல்ல. தானியங்கியில் பணம்
எடுப்பதும், அதைச்செலவிடுவதும் அவ்வளவு கடினமல்ல.
-
நேரத்தைச் சேமிக்க வந்ததாக நினைக்கும், கைபேசியும் இணையமும்தான் அதிக
நேரத்தைத் தின்கின்றன.
-
குறைவான விலை
என்பதால் குடிபோதையில் வண்டியோட்டி தண்டம்
அழுகிறார்களென்றே, பெட்ரோல், பீர்
விலை
ஏத்தி
மக்களை
காக்க(!)
நினைக்குது அரசு!
-
காரியங்கள் சொதப்பித் தொலையும் போதுதான் புரிகிறது, அதிலிருந்த கவனமின்மை எனும்
கயமைத்தனம்!
-
நம்மை
நாமே
கண்டிராத கோண(ல)த்தில் படம்
எடுப்பதில் வல்லரசாக விளங்குகிறது வாக்காளர் அட்டை,
ஓட்டுனர் உரிமங்களுக்கு படம்
பிடிக்கும் அரசாங்கம்
-
முன்னிரவு நேரம்
கொண்டு
வரும்
ஏகாந்தம் சுகமானது.
-
தலைக்குமேலே வானத்தில் விமானம் செல்லும் சத்தம்
கேட்கையில், அண்ணாந்து பார்க்காதவர்கள் யாரும்
இருக்காங்களா?
-
விளம்பரம் ஏதுமின்றி விற்பனையில் வெற்றிபெற்ற நிறுவனம் "டாஸ்மாக்”
-
பிரதமர் பதவி
என்பதையும் ”மிக்சர் திங்கிற” பதவியாக மாத்தின பெருமை
நம்
மன்மோகன் சிங்கையே சாரும்!
:(
-
ஒரு
‘சுதந்திரம்’ என்பது
மட்டுமே உன்னை
எல்லாத் தவறுகளுக்கும் அனுமதிக்கிறதெனில், அது
சுதந்திரம் அல்ல,
அதுவும் ஒருவித
விலங்கு தான்!
-
நான்
பெத்தேன், என்
இஷ்டப்படி பிள்ளைகள் இருக்கனும்னு நினைக்கிற பெற்றோர், அன்னிக்கு ராத்திரி 2ம்
ஆட்டம்
சினிமாவுக்கு போய்தொலைச்சிருக்கலாம்!
-
என்னருகில் கொஞ்சம் மல்லிகைகள் கிடக்கின்றன... நிறைய
நினைவுகளைக் கசியவிட்டபடி...! # நினைவு
வாசம்
-
நீ
கடித்தாய்
நான்
அடித்தேன்!
நீ
மரித்தாய்
நான்
துடைத்தேன்!!
# இந்தக் கொடும்
கவிதைக்கு, அந்தக்கொசு கடிக்காமலே செத்துப் போயிருக்கலாம்! :)
-
மனிதனின் எல்லாக் ’கறை’களையும் மரணம் வெளுத்து விடுகிறது!
-
'நாளை' இன்னும் மிச்சமிருக்கிறது.
-
’கொள்ளு’க்கு
ஆங்கிலத்தில் என்னனு
தேடினா
Horse Gram-னு
சொல்லுது. இனி
எப்ப
கொள்ளு
சாப்பிட்டாலும் குதிரை
நியாபகம் வருமே!
-
பள்ளிக் கூடத்திலிருந்து ’ஹோம்
ஒர்க்’னு ஒண்ணு குடுத்தனுப்புறாங்களே, அது
புள்ளைங்க செய்யறதுக்கா, இல்லை
பெத்தவங்க செய்யறதுக்கா?
-
இப்போது புதிதாக இருப்பவை, சிறிது
நேரத்தில் பழையதாகி விடுகிறது, ’கோபம்’
உட்பட!
-
கோல்
ஊன்றியவாறு ஒற்றைக்காலோடு சாலை
கடப்பவனுக்காக, சில
விநாடிகள் பொறுக்கமுடியாம ’நொய்நொய்’னு
ஹார்ன்
அடிச்சு என்னப்பா கிழிக்கப்போறீங்க
-
ஒரு
கோடி
ரூவா
காருக்கும், ஒன்றையணா மொபெட்டுக்கும் ஒரே
விலைதான் "பெட்ரோல்" # இதுதாண்டா சம்
+ அதர்மம் = சமதர்மம்!
-
மன்மோகன், சிதம்பரமெல்லாம் ரொம்ப
நேர்மையானவங்க - நாராயணசாமி # ஆல்
அரசியல்வாதிஸ் யூஸிங்
ஹமாம்
சோப்ஸ்னு டெல்றீங்களா மிஸ்டர் மினிஸ்டர்!
-
அரசியல் எனக்கு
பிடிக்கவே பிடிக்காது என்பவர்களுக்கான அரசியலை, யாரோ
ஒருவன்
'அவர்களுக்கு எதிராகவே' செய்து
கொண்டிருக்கிறான். :)
-
பேச
வேண்டியது தேங்கிச் சேர்கிறது. பேச
வேண்டாதது தீர்ந்து கரைகிறது.
-
எல்லா
சிக்னல்களிலும் சட்டத்துக்குப் பயந்தவர்கள் கோட்டின் அருகிலும், மனசாட்சிக்குப் பயந்தவர்கள் கோட்டுக்கு முன்பாகவும் நிற்கின்றார்கள்.
-
கிராமங்கள் வெளுத்த வேட்டிபோலவும், நகரங்கள் புழுதியால் வண்டி
துடைக்கும் துணி
போலவும் இருக்கின்றன #பாதாளச் சாக்கடைய எப்ப
பாஸ்
முடிப்பீங்க?
-
ரூபாய்
மதிப்பைச் சிதைப்பது ’வல்லரசு’(!) ஆவதற்கான குறுக்கு வழி
என
மன்மோகன் சிங்கிடம் எவனோ
சொல்லிட்டான் போல!
# சா(சோ)தனைமேல் சோ(சா)தனை
-
சுர்ருனு கோபம்
வருகையில், சட்டுனு கோபத்தை நிறுத்தி, ’இதுவும் கடந்துபோகும்’னு
புன்னகைத்து கோபத்தைக் கரைக்கிறதும் ஜாலியாதான் இருக்கு :)
-
தொண்டர்களை தலை
குனிய
வைக்க
மாட்டேன் - கேப்டன் # ஆனால்
தலையில் மட்டும் குட்டுவேன்!
-
ஆலங்குச்சி வேப்பங்குச்சியென பல்
வெளக்கிட்டிருந்தவனுக்கு, பேஸ்ட்
- பிரஷ்
அளித்த
அறிவியல், பல்
மருத்துவரையும் அன்பளிப்பாக கொடுத்திருக்கிறது
-
எதிர்காலத்தில் வேலை
+ ”ஓவர்
டைம்”
செய்தால்தான் குடும்ப வண்டி
ஓடும்
என்பதை
உணர்த்தவே, பள்ளி
நேரம்
+ ”ஹோம்
ஒர்க்”
என
பழக்குகிறார்கள்.
-
முத்தத்திற்கு கொடுக்கும் உழைப்பிற்கான ஊதியம்
முத்தங்களால் மட்டுமே தீரும்!
-
எல்லார் உடைகளுக்குள்ளும் நிர்வாணம்தான் என்பதை
அறிந்தும், தெரியாத மாதிரியே நடிக்கிறதுக்குப் பேர்தான் ’நாகரிகம்’
-
5 ஆண்டுகளில் ஃபேஸ்புக் மறைந்துவிடும் - அதிர்ச்சி ரிப்போர்ட் # போனால்
போகட்டும் போடா!
:))))
-
பல
நேரங்களில் சக
மனிதர்களைப் பிடிக்கவும், பிடிக்காமல் போகவும் ஏதோ
ஒரு
வார்த்தைதான் காரணமாக அமைகின்றது.
-
கல்வி
வியாபாரத்திற்கான ’இலவச’
விளம்பரத் தூதுவர்கள், முதல்
மதிப்பெண் பெறும்
மாணவ,
மாணவியரே!
-
ஈரோட்டில் ஒரு
குளிரூட்டிய முடிவெட்டும் கடையில் ரூ.70க்கு, முடி வெட்டி,
தலை
கழுவி,
துவட்டி விடுறாங்க. என்
தலைக்கும் ரூ.70
என்பதுதான் கொடுமை
-
2 கழிப்பறைகள் சீரமைக்க ரூ.35
லட்சம்
செலவு
செய்த
மாண்டேக்சிங் அலுவாலியாவின் திட்டக்கமிஷன்! # அங்கேயும் “ஆய்”
தானேடா
போவீங்க!
-
ஒவ்வொரு விடியலிலும் கிடைக்கும் விழிப்பை விட
வேறென்ன பரிசு
வேண்டும்!
-
பிரபலங்களுக்கு மட்டும் பிறந்த
நாள்னா
படம்
போட்டு
வாழ்த்துச் சொல்லுறவங்களோட, பெற்றோருக்கும் பிறந்தநாள்னு ஒண்ணு
இருக்கும்தானே!? #டவுட்டு!
-
உழவுக்கும் தொழிலுக்கும் வஞ்சனை
செய்வோம் - அரசு
-
கேரளாவுல பருவமழை ஆரம்பிச்சா, தமிழ்நாட்டுல சந்தோசப்படுறான். # சேட்டன்மார்! சேட்டன்மார்!! இப்பவாச்சும் ஒத்துக்குங்க நாங்க
நல்லவங்கன்னு!
-
ஒருவரிடம் தம்
பக்க
கொள்கையை எடுத்துச்சொல்லி உணர
வைப்பதைவிட, அவரைத்
தாக்கி,
திட்டி,
அவமதித்து ஒடுக்குவதை எளிமையாகக் கருதுகின்ற உலகம்
இது!
-
SSLC முதல் மூன்று
இடங்களைப் பிடித்த 18 பேரில்,
9 பேரின்
இலக்கு
மருத்துவம். #தண்ணீர், உணவைப்
பாழ்படுத்தும் தேசத்தில் நோயாளிகளுக்கா பஞ்சம்?
-
மதிப்பெண் பட்டியலில் மொழிப்பாடங்கள் கூட்டுத் தொகைக்காக மட்டுமே பயன்படுகிறது.
-
மதிப்பெண்களைத் தாண்டி
ஒரு
உலகம்
இருக்கின்றதென்பதை குழந்தைகளுக்கு மறக்கடிக்க செய்வதை வெகு
நேர்த்தியாகச் செய்து
வருகிறோம்.
-
மதிப்பெண்கள் குறித்த பிள்ளைகளின் ஆதங்கத்தைக் குறை
சொல்ல
இயலாது.
அவர்களை அப்படி
வளர்த்தெடுத்திருப்பது நாம்தான்!
-
எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்பது
தோல்வியாகாது!
-
வீதி
முனைக்
கடையில் வெங்காயம் கிலோ
ரூ.32.
உழவர்
சந்தையில் கிலோ
ரூ.20
#உறிச்சுப்பார்த்தா ஒன்னுமில்லாதது!
-
யாருக்கோ ரசிக்கத் தெரியவில்லை என்பதற்காக, நிலவு
அதன்
அழகை
இழந்து
விடுவதில்லை!
-
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மாதிரி
பசிக்குது. ஞாயித்துக்கிழமை காலை
தாமதமா
பசிக்குது. மதியம்
சீக்கிரம் பசிக்குது, ராத்திரி பசிக்கிறதேயில்ல!
-
செல்போன் எனும்
வஸ்து
கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் பேச்சுகளைத் தீர்க்கமுடியாம மனிதன்
வயிறு,
நெஞ்சு
வெடித்து செத்துப்போயிருப்பானோ?
-
பெட்ரோல் விலை
உயர்வுக்கு முன்பும், பெட்ரோல் விலை
உயர்வுக்குப் பின்பும் ”அதே
அளவு
ட்ராபிக் ஜாம்
தான்!”
-
எல்லாச் சண்டையிலும் யாரோ
ஒருவர்
விட்டுக் கொடுப்பதால் தான்
அது
நிறைவுக்கு வருகின்றது!
-
தலைவனோ,
தலைவியோ தொண்டனுக்காக ஆடை
கசங்குவதில்லை. தொண்டன் மட்டுமே தலைவன்,
தலைவிக்காக சண்டையில் சட்டை
வரை
கிழிக்கிறான். #தன்’மான’ அரசியல்!
-
கண்ணதாசன் இப்போதிருந்திருந்தா காற்று
வந்ததும் கொடி
அசைந்ததா என்பதற்குப் பதிலா
’காற்று
வந்ததும் கரண்ட்
வந்ததா’னு எழுதியிருப்பார் #காற்றாலை
-
7 comments:
சுவையான தொகுப்பு....
வணக்கம் கதிர் சார். அருமையான விஷயங்கள்.
//இப்ப ரயில் எல்லாம் கூட சரியான நேரத்துக்கு வந்துடுது, ஆனா இந்த IRCTC முன்பதிவு தளம் மட்டும் எப்பவுமே தாமதமாவே இயங்குது #’வல்லரசு’ இந்தியா
ரூபாய் மதிப்பைச் சிதைப்பது ’வல்லரசு’(!) ஆவதற்கான குறுக்கு வழி என மன்மோகன் சிங்கிடம் எவனோ சொல்லிட்டான் போல! # சா(சோ)தனைமேல் சோ(சா)தனை//
வல்லரசு பற்றிய என்னோட பதிவு இங்கே:
http://kalakalappu.blogspot.com/2012/08/blog-post_14.html
அப்படியே இன்னொரு மேட்டர். நானும் ஈரோட்டுகாரந்தான்.
அருமையான சுவைக் கோவை.
சிரிப்பதுடன் சிந்திக்கவும் வைக்கின்றது.
"சாகசம் செய்வதற்கும், வித்தை காட்டுவதற்கும், நேரடியாக ’மேலே’ செல்வதற்குமானது" :))
இரண்டு அல்லது மூன்று பதிவுகளாக போட்டிருக்கலாம் . தொடர்ந்து வாசிக்கும் போது பிடித்ததை குறிப்பிட்டு பாராட்ட முடியாத அளவுக்கு போய் விடுகிறது எல்லாமே பிடித்திருந்தாலும் . நல்லா யோசிக்கிறீங்க கதிர்.
இதை தனித் தனியாக அவ்வப்பொழுது முக நூலில் வாசித்து வந்தாலும், ஒரே நேரத்தில் வாசிப்பது மிக்சர், சாப்பிடுவது போல, வித்யாசமான சுவையை தருகிறது.
நல்லா இருக்கு கதிர்! :)
எல்லா உணர்வுகளையும் கலந்து ஒரு மசாலா படம் பார்த்த மாதிரி, உங்க ஆதங்கம், வருத்தம், நகைச்சுவை, அன்பு எல்லாம் படித்தவரையும் உணர வைக்கிறது உங்கள் எழுத்து..நன்றி..
அன்பின் கதிர் - நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட ஒரு உரை - ஏற்கனவே வெளி வந்தமை தானே ! தொடர்களாக வெளி இட்டிருக்கலாமே ! ஒன்று இரசித்ததை மறு மொழியாக இட இயலவில்லை. காரணம் துணுக்குகளீன் எண்ணிக்கை எல்லையைத் தாண்டுகிறது. தொடர்களாக இருப்பின் படிப்பதற்கும் இரசிப்பதற்கும் மறு மொழி இடுவதற்கும் எளிதாக இருந்திருக்கும்.
நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா
Post a Comment