மௌனமாய் அந்த மாலை...
கரிய இருள் போல்
ஏதோ குழப்பம் என்னை
சூழ்ந்திருந்த வேளை...
தேவதை போலெல்லாம் நீ
வரவில்லை....
சாதாரணமாகத்தான் நீ வந்தாய்...
எப்போதும் போல்
ஆனால்.....
என் உள்ளுணர்வுக்கு மட்டும்
உன்னிடமிருந்து
சுகந்தமாய் ஒரு வாசனை
குளிராய் மெல்லிய காற்று....
நீ உற்று பார்த்தபோது
உன் கண்களுக்குள்
நான் அழகாய் தெரிந்தேன்...
சாதாரணமாக வந்த நீ
திரும்பிப்போகும் போது
என்னை திருடிக்கொண்டு
போய்விடுவாய் என்பதை வழக்கம்போல்
தாமதமாகவே உணர ஆரம்பித்தேன்..
திருடப்படுவதிலும் கூட
சுகமிருப்பதை நான் உணரும் போது
மாலை நேரம் கொஞ்சம்
கூடுதலாய் பிரகாசித்தது....
Subscribe to:
Posts (Atom)
பாட்டல் ராதாக்களின் கதை
கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...

-
பொ துவாக வெற்றி அத்தனை எளிதில் வாய்த்துவிடுவதில்லை . பெரும்பாலும் அது நிகழ்த்தக் கோருவது யாராலும் அவ்வளவு எளிதில் நிகழ்த்த முடிய...
-
வாய்ப்பளித்த ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர் சரவணராஜ், பதிவுலக நண்பர்கள் ஆரூரன், உண்மைத்தமிழன், வானம்...
-
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல்,...