மௌனம் என் விருப்பம். பேசுவது உங்கள் விருப்பம். மௌனம் காப்பீர்களென்றும், பேசுவேனென்றும் ஏமாந்து கொண்டேயிருக்கிறோம் இந்த நட்பில்.
-
எங்காவது நம்மைச் சந்திக்கையில், நம்மைத் தவிர்த்து பார்க்காததுபோல் ஓடுபவரை வலுக்கட்டாயமாக பார்க்கவைத்து நெளியவைப்பதில் இருக்கும் சுகமே தனி!
-
வாழ்ந்தா ”இடைத் தேர்தல்” நடக்கிற தொகுதில வாழனும்யா!
-
எல்லா "மிஸ் யூ"களும் காதலை நோக்குவதாகவும், எல்லா "லவ் யூ"களும் காமத்தை நோக்குவதாகவும் மட்டுமே இருந்து விடுவதில்லை!
-
மௌனம் இனிது! ’உளறல்’ அதனினும் இனிது!
-
புயலுக்கு வக்கனையாப் பேரு மட்டும் வைக்கிறீங்ளே.... அதில் பாதிக்கப்படுற மக்களுக்கு ஒழுங்கா சோறு வைக்கிறீங்ளா!?
-
கோவில் யானையிடம் மாலை வாங்க யானைக்கு நண்பனாக இருக்க வேண்டியதில்லை! பாகனுக்குத் தோழனாக இருந்தால் போதும்
-
நியாயமாகச் செய்யவேண்டிய கடமைக்கு ஒரு கூலித் தொழிலாளியிடம், ஏழை விவசாயிடம், அனாதை ஊதியம் பெறும் முதியவர்களிடம் அரித்துப் பிடுங்கும் லஞ்சம் என்பது மலம் தின்பதற்கு ஒப்பானது.
-
நாகரிகம் என்பது உடை தொடர்பானது மட்டுமே என நினைப்பது நாகரிகமான செயல் அல்ல!! :)
-
நாம் நம்மீது வைக்கும் நம்பிக்கை, அவநம்பிக்கையைவிட மற்றவர்கள் நம்மீது வைக்கும் நம்பிக்கை, அவநம்பிக்கை பலநேரங்களில் நம்மைத் தூண்டுகின்றன.
-
கிராமத்து இளைஞர் கூட்டம் Wife வேணும்னு தேடுது! நகரத்து இளைஞர் கூட்டம் WiFi வேணும்னு தேடுது!
-
தமிழர்களே! தமிழர்களே!!
காலங்காத்தால நாலு மணிக்கெல்லாம் முகூர்த்தம் வைக்கிறது அநியாயம் புடிச்ச வன்முறை. நல்லாத் தூங்கிட்டு லேட்டாப் போன எனக்கு இப்பயிருந்தே தூக்கம் சொக்குதே...
பாவம்யா ’அதுக’ :)
காலங்காத்தால நாலு மணிக்கெல்லாம் முகூர்த்தம் வைக்கிறது அநியாயம் புடிச்ச வன்முறை. நல்லாத் தூங்கிட்டு லேட்டாப் போன எனக்கு இப்பயிருந்தே தூக்கம் சொக்குதே...
பாவம்யா ’அதுக’ :)
-
’பிரியம்’ என்பதை வெறும் வார்த்தையாக வாசிப்பதைவிட வாழ்க்கையில் உணர்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!
-
பல நேரங்களில் ”நல்ல்ல்லா வருவே!” என அழுத்தமாகச் சொல்வது நல்லா வந்துடாதே என்பதற்காகத்தான்! :)
-
தெரிந்த நம்(ண்)பரோடு போனில் பேசுகையில், தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வர ”புதுநெம்பர்லருந்து கால்”னு தெரிந்த நம்(ண்)பரை துண்டிக்கிறோம்
-
குழந்தைகள் தேங்காய்பன்னில் இனிப்பு பகுதியைத் தின்றுவிட்டு வெறும் பன்னை ஒதுக்குவதிலேயே பகுத்தறிவைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர்.
-
'எதுவும் சில காலம்தான்' எனும் சொற்றொடர் மட்டும் நீண்ட காலமாய் !
-
தொலைத்தது இருட்டுக்குள் ஆனால் வெளிச்சத்தில் தேடவே பிடித்திருக்கிறது!
-
எத்தனையோ பாதைகள் இருந்தாலும், குறுக்குவழி ஒன்று கிடைத்துவிட்டால், அது குறுகிய சந்தாகவே இருந்தாலும் அதன் வழியேதான் அடிக்கடி பயணப்படுகிறோம்!
-
பக்கத்து அறையில் ஒரு சிறுவன் வீடியோ கேமில் எதையோ தொடர்ந்து சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறான். சப்தம் காதைக் கிழிக்கிறது. சகிக்க முடியவில்லை. உடனடித் தீர்வு நானும் அது என்ன கேம் எனத்தெரிந்து விளையாடியாகனும் போல! :)
-
பாதி தேய்ந்த ஹமாம் சோப்போடு மைசூர் சாண்டல் சோப்பை ஒட்டிவைத்தது போலிருந்தது அந்தப் புன்னகை!
-
அறிவு கொண்டு எடுத்த முடிவுகளைவிட, அவசரத்திலும், வீம்பிற்காகவும் எடுத்த முடிவுகளே அதிகம்.
-
இறந்தவன் உதடுகளில் உறைந்திருக்கும் புன்னகையில் உலகின் ஒட்டுமொத்த கசப்பு நிரம்பியிருக்கின்றது.
-
உற்றுப்பார்.... புரியும் அல்லது பழகிவிடும்! :)
-
உறங்கிக் கிடக்கும் மனிதர்கள் மத்தியில் சூடாய் முத்தமிட்டுக் கொள்ளும் அந்த இளம் ஜோடி பூமி சுற்றுவதை உறுதிப் படுத்துகின்றனர். :)
-
ஒரு பன்னாட்டு விமான முனையத்தில் இரவு முழுக்க சோர்வாய் ஒளிரும் முகங்களில் விதவிதமான பயண ரேகைகள்..
3 comments:
எல்லாமே நச்சுனு நல்லாருக்கு கதிர் சார்
அருமை , கலக்குங்க ! தத்துவச்சித்தர் என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கிறேன் .
வாசித்தேன் இரசித்தேன்.. :)
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் தோழரே!
---
Post a Comment